| முகப்பு | தொடக்கம் | 
| 
முக்காவனாட்டு ஆமூர் மல்லன் | 
| 
 80 | 
| 
இன் கடுங் கள்ளின் ஆமூர் ஆங்கண், | |
| 
மைந்துடை மல்லன் மத வலி முருக்கி, | |
| 
ஒரு கால் மார்பு ஒதுங்கின்றே; ஒரு கால் | |
| 
வரு தார் தாங்கிப் பின் ஒதுங்கின்றே | |
| 
5 | 
நல்கினும் நல்கான் ஆயினும், வெல் போர்ப் | 
| 
பொரல் அருந் தித்தன் காண்கதில் அம்ம | |
| 
பசித்துப் பணை முயலும் யானை போல, | |
| 
இரு தலை ஒசிய எற்றி, | |
| 
களம் புகு மல்லற் கடந்து அடு நிலையே. | |
| 
திணை தும்பை; துறை எருமை மறம்.
 | |
| 
சோழன் போர்வைக்கோப் பெருநற்கிள்ளி முக்காவனாட்டு ஆமூர் மல்லனைப் பொருது அட்டு நின்றானைச் சாத்தந்தையார் பாடியது.
 |