| முகப்பு | தொடக்கம் | 
| 
மூவன் | 
| 
 209 | 
| 
பொய்கை நாரை போர்வில் சேக்கும் | |
| 
நெய்தல் அம் கழனி, நெல் அரி தொழுவர் | |
| 
கூம்பு விடு மெண் பிணி அவிழ்ந்த ஆம்பல் | |
| 
அகல் அடை அரியல் மாந்தி, தெண் கடல் | |
| 
5 | 
படு திரை இன் சீர்ப் பாணி தூங்கும் | 
| 
மென் புல வைப்பின் நல் நாட்டுப் பொருந! | |
| 
பல் கனி நசைஇ, அல்கு விசும்பு உகந்து, | |
| 
பெரு மலை விடரகம் சிலம்ப முன்னி, | |
| 
பழனுடைப் பெரு மரம் தீர்ந்தென, கையற்று, | |
| 
10 | 
பெறாது பெயரும் புள்ளினம் போல, நின் | 
| 
நசை தர வந்து, நின் இசை நுவல் பரிசிலென் | |
| 
வறுவியேன் பெயர்கோ? வாள் மேம்படுந! | |
| 
ஈயாய் ஆயினும், இரங்குவென்அல்லேன்; | |
| 
நோய் இலை ஆகுமதி; பெரும! நம்முள் | |
| 
15 | 
குறு நணி காண்குவதாக நாளும், | 
| 
நறும் பல் ஒலிவரும் கதுப்பின், தே மொழி, | |
| 
தெரிஇழை மகளிர் பாணி பார்க்கும் | |
| 
பெரு வரை அன்ன மார்பின், | |
| 
செரு வெஞ் சேஎய்! நின் மகிழ் இருக்கையே! | |
| 
திணை அது; துறை பரிசில் கடா நிலை.
 | |
| 
மூவன் பரிசில் நீட்டித்தானைப் பெருந்தலைச் சாத்தனார் பாடியது.
 |