| முகப்பு | தொடக்கம் | 
| 
வல்லார் கிழான் பண்ணன் | 
| 
 181 | 
| 
மன்ற விளவின் மனை வீழ் வெள்ளில், | |
| 
கருங் கண் எயிற்றி காதல் மகனொடு, | |
| 
கான இரும் பிடிக் கன்று தலைக் கொள்ளும் | |
| 
பெருங் குறும்பு உடுத்த வன் புல இருக்கை, | |
| 
5 | 
புலாஅ அம்பின், போர் அருங் கடி மிளை, | 
| 
வலாஅரோனே, வாய் வாள் பண்ணன்; | |
| 
உண்ணா வறுங் கடும்பு உய்தல் வேண்டின், | |
| 
இன்னே சென்மதி, நீயே சென்று, அவன் | |
| 
பகைப் புலம் படராஅளவை, நின் | |
| 
10 | 
பசிப் பகைப் பரிசில் காட்டினை கொளற்கே. | 
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
வல்லார் கிழான் பண்ணனைச் சோணாட்டு முகையலூர்ச் சிறு கருந்தும்பியார் பாடியது.
 |