| முகப்பு | தொடக்கம் | 
| 
வல்வில் வேட்டுவன் | 
| 
 150 | 
| 
கூதிர்ப் பருந்தின் இருஞ் சிறகு அன்ன | |
| 
பாறிய சிதாரேன், பலவு முதல் பொருந்தி, | |
| 
தன்னும் உள்ளேன், பிறிது புலம் படர்ந்த என் | |
| 
உயங்கு படர் வருத்தமும் உலைவும் நோக்கி, | |
| 
5 | 
மான் கணம் தொலைச்சிய குருதி அம் கழல் கால், | 
| 
வான் கதிர்த் திரு மணி விளங்கும் சென்னி, | |
| 
செல்வத் தோன்றல், ஓர் வல் வில் வேட்டுவன், | |
| 
தொழுதனென் எழுவேற் கை கவித்து இரீஇ, | |
| 
இழுதின் அன்ன வால் நிணக் கொழுங் குறை, | |
| 
10 | 
கான் அதர் மயங்கிய இளையர் வல்லே | 
| 
தாம் வந்து எய்தாஅளவை, ஒய்யெனத் | |
| 
தான் ஞெலி தீயின் விரைவனன் சுட்டு, 'நின் | |
| 
இரும் பேர் ஒக்கலொடு தின்ம்' எனத் தருதலின், | |
| 
அமிழ்தின் மிசைந்து, காய்பசி நீங்கி, | |
| 
15 | 
நல் மரன் நளிய நறுந் தண் சாரல், | 
| 
கல் மிசை அருவி தண்ணெனப் பருகி, | |
| 
விடுத்தல் தொடங்கினேனாக, வல்லே, | |
| 
'பெறுதற்கு அரிய வீறுசால் நன் கலம் | |
| 
பிறிது ஒன்று இல்லை; காட்டு நாட்டேம்' என, | |
| 
20 | 
மார்பில் பூண்ட வயங்கு காழ் ஆரம் | 
| 
மடை செறி முன்கைக் கடகமொடு ஈத்தனன்; | |
| 
'எந் நாடோ?' என, நாடும் சொல்லான்; | |
| 
'யாரீரோ?' என, பேரும் சொல்லான்; | |
| 
பிறர் பிறர் கூற வழிக் கேட்டிசினே | |
| 
25 | 
'இரும்பு புனைந்து இயற்றாப் பெரும் பெயர்த் தோட்டி | 
| 
அம் மலை காக்கும் அணி நெடுங் குன்றின், | |
| 
பளிங்கு வகுத்தன்ன தீம் நீர், | |
| 
நளி மலை நாடன் நள்ளி அவன்' எனவே. | |
| 
திணை அது; துறை இயன்மொழி.
 | |
| 
அவனை அவர் பாடியது.
 |