| முகப்பு | தொடக்கம் | 
| 
வாட்டாற்று எழினியாதன் | 
| 
 396 | 
| 
கீழ் நீரான் மீன் வழங்குந்து; | |
| 
மீ நீரான், கண் அன்ன, மலர் பூக்குந்து; | |
| 
கழி சுற்றிய விளை கழனி, | |
| 
அரிப் பறையான் புள் ஓப்புந்து; | |
| 
5 | 
நெடுநீர் கூஉம் மணல் தண் கான் | 
| 
மென் பறையான் புள் இரியுந்து; | |
| 
நனைக் கள்ளின் மனைக் கோசர் | |
| 
தீம் தேறல் நறவு மகிழ்ந்து, | |
| 
தீம் குரவைக் கொளைத் தாங்குந்து; | |
| 
10 | 
உள் இலோர்க்கு வலி ஆகுவன், | 
| 
கேள் இலோர்க்குக் கேள் ஆகுவன், | |
| 
கழுமிய வென் வேல் வேளே, | |
| 
வள நீர் வாட்டாற்று எழினியாதன்; | |
| 
கிணையேம், பெரும! | |
| 
15 | 
கொழுந் தடிய சூடு என்கோ? | 
| 
வள நனையின் மட்டு என்கோ? | |
| 
குறு முயலின் நிணம் பெய்தந்த | |
| 
நறு நெய்ய சோறு என்கோ? | |
| 
திறந்து மறந்த கூட்டுமுதல் | |
| 
20 | 
முகந்து கொள்ளும் உணவு என்கோ? | 
| 
அன்னவை பல பல | |
| 
...................................................ருநதய | |
| 
இரும் பேர் ஒக்கல் அருந்து எஞ்சிய | |
| 
அளித்து உவப்ப, ஈத்தோன் எந்தை; | |
| 
25 | 
எம்மோர் ஆக்கக் கங்குண்டே; | 
| 
மாரி வானத்து மீன் நாப்பண், | |
| 
விரி கதிர வெண் திங்களின், | |
| 
விளங்கித் தோன்றுக, அவன் கலங்கா நல் இசை! | |
| 
யாமும் பிறரும் வாழ்த்த, நாளும் | |
| 
30 | 
நிரைசால் நன் கலன் நல்கி, | 
| 
உரை செலச் சிறக்க, அவன் பாடல்சால் வளனே! | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
வாட்டாற்று எழினியாதனை மாங்குடி கிழார் பாடியது.
 |