| முகப்பு | தொடக்கம் | 
| 
வேங்கைமார்பன் | 
| 
 21 | 
| 
புல வரை இறந்த புகழ்சால் தோன்றல்! | |
| 
'நில வரை இறந்த குண்டு கண் அகழி, | |
| 
வான் தோய்வு அன்ன புரிசை, விசும்பின் | |
| 
மீன் பூத்தன்ன உருவ ஞாயில், | |
| 
5 | 
கதிர் நுழைகல்லா மரம் பயில் கடி மிளை, | 
| 
அருங் குறும்பு உடுத்த கானப்பேர் எயில், | |
| 
கருங் கைக் கொல்லன் செந் தீ மாட்டிய | |
| 
இரும்பு உண் நீரினும் மீட்டற்கு அரிது' என, | |
| 
வேங்கை மார்பன் இரங்க, வைகலும் | |
| 
10 | 
ஆடு கொளக் குழைந்த தும்பை, புலவர் | 
| 
பாடுதுறை முற்றிய, கொற்ற வேந்தே! | |
| 
இகழுநர் இசையொடு மாய, | |
| 
புகழொடு விளங்கிப் பூக்க, நின் வேலே! | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
கானப்பேர் எயில் கடந்த உக்கிரப் பெருவழுதியை ஐயூர் மூலங் கிழார் பாடியது.
 |