முகப்பு | ![]() |
அரச வாகை |
17 |
தென் குமரி, வட பெருங்கல், |
|
குண குட கடலா எல்லை, |
|
குன்று, மலை, காடு, நாடு, |
|
ஒன்று பட்டு வழிமொழிய, |
|
5 |
கொடிது கடிந்து, கோல் திருத்தி, |
படுவது உண்டு, பகல் ஆற்றி, |
|
இனிது உருண்ட சுடர் நேமி |
|
முழுது ஆண்டோர் வழி காவல! |
|
குலை இறைஞ்சிய கோள் தாழை |
|
10 |
அகல் வயல், மலை வேலி, |
நிலவு மணல் வியன் கானல், |
|
தெண் கழிமிசைத் தீப் பூவின், |
|
தண் தொண்டியோர் அடு பொருந! |
|
மாப் பயம்பின் பொறை போற்றாது, |
|
15 |
நீடு குழி அகப்பட்ட |
பீடு உடைய எறுழ் முன்பின், |
|
கோடு முற்றிய கொல் களிறு |
|
நிலை கலங்கக் குழி கொன்று, |
|
கிளை புகலத் தலைக்கூடியாங்கு |
|
20 |
நீ பட்ட அரு முன்பின் |
பெருந் தளர்ச்சி, பலர் உவப்ப, |
|
பிறிது சென்று, மலர் தாயத்துப் |
|
பலர் நாப்பண் மீக்கூறலின், |
|
'உண்டாகிய உயர் மண்ணும், |
|
25 |
சென்று பட்ட விழுக் கலனும், |
பெறல் கூடும், இவன் நெஞ்சு உறப் பெறின்' எனவும், |
|
'ஏந்து கொடி இறைப்புரிசை, |
|
வீங்கு சிறை, வியல்அருப்பம், |
|
இழந்து வைகுதும், இனி நாம் இவன் |
|
30 |
உடன்று நோக்கினன், பெரிது' எனவும், |
வேற்று அரசு பணி தொடங்கு நின் |
|
ஆற்றலொடு புகழ் ஏத்தி, |
|
காண்கு வந்திசின், பெரும! ஈண்டிய |
|
மழை என மருளும் பல் தோல், மலை எனத் |
|
35 |
தேன் இறை கொள்ளும் இரும் பல் யானை, |
உடலுநர் உட்க வீங்கி, கடல் என |
|
வான் நீர்க்கு ஊக்கும் தானை, ஆனாது |
|
கடு ஒடுங்கு எயிற்ற அரவுத் தலை பனிப்ப, |
|
இடி என முழங்கும் முரசின், |
|
40 |
வரையா ஈகைக் குடவர் கோவே! |
திணை வாகை; துறை அரச வாகை; இயன்மொழியும் ஆம்.
| |
பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனால் பிணியிருந்த யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை வலிதின் போய்க் கட்டில் எய்தினானைக் குறுங்கோழியூர் கிழார் பாடியது.
|
19 |
இமிழ் கடல் வளைஇய ஈண்டு அகன் கிடக்கை, |
|
தமிழ் தலைமயங்கிய தலையாலங்கானத்து, |
|
மன் உயிர்ப் பன்மையும், கூற்றத்து ஒருமையும், |
|
நின்னொடு தூக்கிய வென் வேல் செழிய! |
|
5 |
'இரும் புலி வேட்டுவன் பொறி அறிந்து மாட்டிய |
பெருங் கல் அடாரும் போன்ம்' என விரும்பி, |
|
முயங்கினேன் அல்லனோ, யானே மயங்கிக் |
|
குன்றத்து இறுத்த குரீஇ இனம் போல, |
|
அம்பு சென்று இறுத்த அரும் புண் யானைத் |
|
10 |
தூம்புடைத் தடக் கை வாயொடு துமிந்து, |
நாஞ்சில் ஒப்ப, நிலம் மிசைப் புரள, |
|
எறிந்து களம் படுத்த ஏந்து வாள் வலத்தர் |
|
எந்தையொடு கிடந்தோர், எம் புன் தலைப் புதல்வர்; |
|
'இன்ன விறலும் உளகொல், நமக்கு?' என, |
|
15 |
மூதில் பெண்டிர் கசிந்து அழ, நாணி, |
கூற்றுக் கண்ணோடிய வெருவரு பறந்தலை, |
|
எழுவர் நல் வலம் கடந்தோய்! நின் |
|
கழூஉ விளங்கு ஆரம் கவைஇய மார்பே? |
|
திணை வாகை; துறை அரச வாகை.
| |
அவனை அவர் பாடியது.
|
20 |
இரு முந்நீர்க் குட்டமும், |
|
வியல் ஞாலத்து அகலமும், |
|
வளி வழங்கு திசையும், |
|
வறிது நிலைஇய காயமும், என்றாங்கு |
|
5 |
அவை அளந்து அறியினும், அளத்தற்கு அரியை, |
அறிவும், ஈரமும், பெருங் கண்ணோட்டமும்: |
|
சோறு படுக்கும் தீயோடு |
|
செஞ் ஞாயிற்றுத் தெறல் அல்லது |
|
பிறிது தெறல் அறியார், நின் நிழல் வாழ்வோரே; |
|
10 |
திருவில் அல்லது கொலை வில் அறியார்; |
நாஞ்சில் அல்லது படையும் அறியார்; |
|
திறன் அறி வயவரொடு தெவ்வர் தேய, அப் |
|
பிறர் மண் உண்ணும் செம்மல்! நின் நாட்டு |
|
வயவுறு மகளிர் வேட்டு உணின் அல்லது, |
|
15 |
பகைவர் உண்ணா அரு மண்ணினையே; |
அம்பு துஞ்சும் கடி அரணால், |
|
அறம் துஞ்சும் செங்கோலையே; |
|
புதுப் புள் வரினும், பழம் புள் போகினும், |
|
விதுப்புறவு அறியா ஏமக் காப்பினை; |
|
20 |
அனையை ஆகல்மாறே, |
மன் உயிர் எல்லாம் நின் அஞ்சும்மே. |
|
திணையும் துறையும் அவை.
| |
சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறையைக் குறுங் கோழியூர் கிழார் பாடியது.
|
21 |
புல வரை இறந்த புகழ்சால் தோன்றல்! |
|
'நில வரை இறந்த குண்டு கண் அகழி, |
|
வான் தோய்வு அன்ன புரிசை, விசும்பின் |
|
மீன் பூத்தன்ன உருவ ஞாயில், |
|
5 |
கதிர் நுழைகல்லா மரம் பயில் கடி மிளை, |
அருங் குறும்பு உடுத்த கானப்பேர் எயில், |
|
கருங் கைக் கொல்லன் செந் தீ மாட்டிய |
|
இரும்பு உண் நீரினும் மீட்டற்கு அரிது' என, |
|
வேங்கை மார்பன் இரங்க, வைகலும் |
|
10 |
ஆடு கொளக் குழைந்த தும்பை, புலவர் |
பாடுதுறை முற்றிய, கொற்ற வேந்தே! |
|
இகழுநர் இசையொடு மாய, |
|
புகழொடு விளங்கிப் பூக்க, நின் வேலே! |
|
திணையும் துறையும் அவை.
| |
கானப்பேர் எயில் கடந்த உக்கிரப் பெருவழுதியை ஐயூர் மூலங் கிழார் பாடியது.
|
22 |
தூங்கு கையான் ஓங்கு நடைய, |
|
உறழ் மணியான் உயர் மருப்பின, |
|
பிறை நுதலான் செறல் நோக்கின, |
|
பா அடியான் பணை எருத்தின, |
|
5 |
தேன் சிதைந்த வரை போல, |
மிஞிறு ஆர்க்கும் கமழ் கடாத்து, |
|
அயறு சோரும் இருஞ் சென்னிய, |
|
மைந்து மலிந்த மழ களிறு |
|
கந்து சேர்பு நிலைஇ வழங்க; |
|
10 |
பாஅல் நின்று கதிர் சோரும் |
வான் உறையும் மதி போலும் |
|
மாலை வெண் குடை நீழலான், |
|
வாள் மருங்கு இலோர் காப்பு உறங்க; |
|
அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த |
|
15 |
ஆய் கரும்பின் கொடிக் கூரை, |
சாறு கொண்ட களம் போல, |
|
வேறு வேறு பொலிவு தோன்ற; |
|
குற்று ஆனா உலக்கையான் |
|
கலிச் சும்மை வியல் ஆங்கண், |
|
20 |
பொலந் தோட்டுப் பைந் தும்பை |
மிசை அலங்கு உளைய பனைப் போழ் செரீஇ, |
|
சின மாந்தர் வெறிக் குரவை |
|
ஓத நீரின் பெயர்பு பொங்க; |
|
வாய் காவாது பரந்து பட்ட |
|
25 |
வியன் பாசறைக் காப்பாள! |
வேந்து தந்த பணி திறையான் |
|
சேர்ந்தவர்தம் கடும்பு ஆர்த்தும், |
|
ஓங்கு கொல்லியோர், அடு பொருந! |
|
வேழ நோக்கின் விறல் வெஞ் சேஎய்! |
|
30 |
வாழிய, பெரும! நின் வரம்பு இல் படைப்பே, |
நிற் பாடிய வயங்கு செந் நாப் |
|
பின் பிறர் இசை நுவலாமை, |
|
ஓம்பாது ஈயும் ஆற்றல் எம் கோ! |
|
'மாந்தரஞ்சேரல் இரும்பொறை ஓம்பிய நாடே |
|
35 |
புத்தேள் உலகத்து அற்று' எனக் கேட்டு வந்து, |
இனிது கண்டிசின்; பெரும! முனிவு இலை, |
|
வேறு புலத்து இறுக்கும் தானையொடு, |
|
சோறு பட நடத்தி நீ துஞ்சாய்மாறே! |
|
திணையும் துறையும் அவை; துறை இயன்மொழியும் ஆம்.
| |
சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையைக் குறுங் கோழியூர் கிழார் பாடியது.
|
23 |
'வெளிறு இல் நோன் காழ்ப் பணை நிலை முனைஇ, |
|
களிறு படிந்து உண்டென, கலங்கிய துறையும்; |
|
கார் நறுங் கடம்பின் பாசிலைத் தெரியல், |
|
சூர் நவை, முருகன் சுற்றத்து அன்ன, நின் |
|
5 |
கூர் நல் அம்பின் கொடு வில் கூளியர் |
கொள்வது கொண்டு, கொள்ளா மிச்சில் |
|
கொள் பதம் ஒழிய வீசிய புலனும்; |
|
வடி நவில் நவியம் பாய்தலின், ஊர்தொறும் |
|
கடி மரம் துளங்கிய காவும்; நெடு நகர் |
|
10 |
வினை புனை நல் இல் வெவ் எரி நைப்ப, |
கனை எரி உரறிய மருங்கும்; நோக்கி, |
|
நண்ணார் நாண, நாள்தொறும் தலைச் சென்று, | |
இன்னும் இன்ன பல செய்குவன், யாவரும் |
|
துன்னல் போகிய துணிவினோன்' என, |
|
15 |
ஞாலம் நெளிய ஈண்டிய வியன் படை |
ஆலங்கானத்து அமர் கடந்து அட்ட |
|
கால முன்ப! நின் கண்டனென் வருவல் |
|
அறு மருப்பு எழில் கலை புலிப்பால் பட்டென, |
|
சிறு மறி தழீஇய தெறிநடை மடப் பிணை |
|
20 |
பூளை நீடிய வெருவரு பறந்தலை |
வேளை வெண் பூக் கறிக்கும் |
|
ஆள் இல் அத்தம் ஆகிய காடே. |
|
திணையும் துறையும் அவை; துறை நல்லிசை வஞ்சியும் ஆம்.
| |
பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனைக் கல்லாடனார் பாடியது.
|
25 |
மீன் திகழ் விசும்பில் பாய் இருள் அகல |
|
ஈண்டு செலல் மரபின் தன் இயல் வழாஅது, |
|
உரவுச் சினம் திருகிய உரு கெழு ஞாயிறு, |
|
நிலவுத் திகழ் மதியமொடு, நிலம் சேர்ந்தாஅங்கு, |
|
5 |
உடல் அருந் துப்பின் ஒன்றுமொழி வேந்தரை |
அணங்கு அரும் பறந்தலை உணங்கப் பண்ணி, |
|
பிணியுறு முரசம் கொண்ட காலை, |
|
நிலை திரிபு எறிய, திண் மடை கலங்கிச் |
|
சிதைதல் உய்ந்தன்றோ, நின் வேல் செழிய! |
|
10 |
முலை பொலி ஆகம் உருப்ப நூறி, |
மெய்ம் மறந்து பட்ட வரையாப் பூசல் |
|
ஒள் நுதல் மகளிர் கைம்மை கூர, |
|
அவிர் அறல் கடுக்கும் அம் மென் |
|
குவை இருங் கூந்தல் கொய்தல் கண்டே. |
|
திணை வாகை; துறை அரச வாகை.
| |
அவனைக் கல்லாடனார் பாடியது.
|
26 |
நளி கடல் இருங் குட்டத்து |
|
வளி புடைத்த கலம் போல, |
|
களிறு சென்று களன் அகற்றவும், |
|
களன் அகற்றிய வியல் ஆங்கண் |
|
5 |
ஒளிறு இலைய எஃகு ஏந்தி, |
அரைசு பட அமர் உழக்கி, |
|
உரை செல முரசு வௌவி, |
|
முடித் தலை அடுப்பு ஆக, |
|
புனல் குருதி உலைக் கொளீஇ, |
|
10 |
தொடித் தோள் துடுப்பின் துழந்த வல்சியின், |
அடுகளம் வேட்ட அடு போர்ச் செழிய! |
|
ஆன்ற கேள்வி, அடங்கிய கொள்கை, |
|
நான் மறை முதல்வர் சுற்றம் ஆக, |
|
மன்னர் ஏவல் செய்ய, மன்னிய |
|
15 |
வேள்வி முற்றிய வாய் வாள் வேந்தே! |
நோற்றோர் மன்ற நின் பகைவர், நின்னொடு |
|
மாற்றார் என்னும் பெயர் பெற்று, |
|
ஆற்றார் ஆயினும், ஆண்டு வாழ்வோரே. |
|
திணையும் துறையும் அவை.
| |
அவனை மாங்குடி கிழார் பாடியது.
|
31 |
சிறப்புடை மரபின் பொருளும் இன்பமும் |
|
அறத்து வழிப்படூஉம் தோற்றம் போல, |
|
இரு குடை பின்பட ஓங்கிய ஒரு குடை, |
|
உரு கெழு மதியின், நிவந்து, சேண் விளங்க, |
|
5 |
நல் இசை வேட்டம் வேண்டி, வெல் போர்ப் |
பாசறை அல்லது நீ ஒல்லாயே; |
|
நுதிமுகம் மழுங்க மண்டி, ஒன்னார் |
|
கடி மதில் பாயும் நின் களிறு அடங்கலவே; |
|
'போர்' எனின், புகலும் புனை கழல் மறவர், |
|
10 |
'காடு இடைக் கிடந்த நாடு நனி சேஎய; |
செல்வேம் அல்லேம்' என்னார்; 'கல்லென் |
|
விழவுடை ஆங்கண் வேற்றுப் புலத்து இறுத்து, |
|
குண கடல் பின்னது ஆக, குட கடல் |
|
வெண் தலைப் புணரி நின் மான் குளம்பு அலைப்ப, |
|
15 |
வல முறை வருதலும் உண்டு' என்று அலமந்து, |
நெஞ்சு நடுங்கு அவலம் பாய, |
|
துஞ்சாக் கண்ண, வட புலத்து அரசே. |
|
திணை வாகை; துறை அரச வாகை; மழபுலவஞ்சியும் ஆம்.
| |
அவனைக் கோவூர் கிழார் பாடியது.
|
33 |
கான் உறை வாழ்க்கை, கத நாய், வேட்டுவன் |
|
மான் தசை சொரிந்த வட்டியும், ஆய்மகள் |
|
தயிர் கொடு வந்த தசும்பும், நிறைய, |
|
ஏரின் வாழ்நர் பேர் இல் அரிவையர் |
|
5 |
குளக் கீழ் விளைந்த களக் கொள் வெண்ணெல் |
முகந்தனர் கொடுப்ப, உகந்தனர் பெயரும் |
|
தென்னம் பொருப்பன் நல் நாட்டுள்ளும், |
|
ஏழ் எயில் கதவம் எறிந்து, கைக்கொண்டு, நின் |
|
பேழ்வாய் உழுவை பொறிக்கும் ஆற்றலை; |
|
10 |
பாடுநர் வஞ்சி பாட, படையோர் |
தாது எரு மறுகின் பாசறை பொலிய, |
|
புலராப் பச்சிலை இடை இடுபு தொடுத்த |
|
மலரா மாலைப் பந்து கண்டன்ன |
|
ஊன் சோற்று அமலை பாண் கடும்பு அருத்தும் |
|
15 |
செம்மற்று அம்ம, நின் வெம் முனை இருக்கை |
வல்லோன் தைஇய வரி வனப்பு உற்ற |
|
அல்லிப் பாவை ஆடு வனப்பு ஏய்ப்ப, |
|
காம இருவர் அல்லது, யாமத்துத் |
|
தனி மகன் வழங்காப் பனி மலர்க் காவின், |
|
20 |
ஒதுக்குஇன் திணி மணல் புதுப் பூம் பள்ளி |
வாயில் மாடந்தொறும் மை விடை வீழ்ப்ப, |
|
நீ ஆங்குக் கொண்ட விழவினும் பலவே. |
|
திணை வாகை; துறை அரச வாகை.
| |
அவனை அவர் பாடியது.
|
37 |
நஞ்சுடை வால் எயிற்று, ஐந் தலை சுமந்த, |
|
வேக வெந் திறல், நாகம் புக்கென, |
|
விசும்பு தீப் பிறப்பத் திருகி, பசுங் கொடிப் |
|
பெரு மலை விடரகத்து உரும் எறிந்தாங்கு, |
|
5 |
புள் உறு புன்கண் தீர்த்த, வெள் வேல், |
சினம் கெழு தானை, செம்பியன் மருக! |
|
கராஅம் கலித்த குண்டு கண் அகழி, |
|
இடம் கருங் குட்டத்து உடன் தொக்கு ஓடி, |
|
யாமம் கொள்பவர் சுடர் நிழல் கதூஉம் |
|
10 |
கடு முரண் முதலைய நெடு நீர் இலஞ்சி, |
செம்பு உறழ் புரிசை, செம்மல் மூதூர், |
|
வம்பு அணி யானை வேந்து அகத்து உண்மையின், |
|
'நல்ல' என்னாது, சிதைத்தல் |
|
வல்லையால், நெடுந்தகை! செருவத்தானே. |
|
திணை வாகை; துறை அரசவாகை; முதல் வஞ்சியும் ஆம்.
| |
அவனை மாறோக்கத்து நப்பசலையார் பாடியது.
|
42 |
ஆனா ஈகை, அடு போர், அண்ணல்! நின் |
|
யானையும் மலையின் தோன்றும்; பெரும! நின் |
|
தானையும் கடல் என முழங்கும்; கூர் நுனை |
|
வேலும் மின்னின் விளங்கும்; உலகத்து |
|
5 |
அரைசு தலை பனிக்கும் ஆற்றலைஆதலின், |
புரை தீர்ந்தன்று; அது புதுவதோ அன்றே; |
|
தண் புனல் பூசல் அல்லது, நொந்து, |
|
'களைக, வாழி, வளவ!' என்று, நின் |
|
முனைதரு பூசல் கனவினும் அறியாது, |
|
10 |
புலி புறங்காக்கும் குருளை போல, |
மெலிவு இல் செங்கோல் நீ புறங்காப்ப, |
|
பெரு விறல் யாணர்த்து ஆகி, அரிநர் |
|
கீழ் மடைக் கொண்ட வாளையும், உழவர் |
|
படை மிளிர்ந்திட்ட யாமையும், அறைநர் |
|
15 |
கரும்பில் கொண்ட தேனும், பெருந் துறை |
நீர் தரு மகளிர் குற்ற குவளையும், |
|
வன் புலக் கேளிர்க்கு வரு விருந்து அயரும் |
|
மென் புல வைப்பின் நல் நாட்டுப் பொருந! |
|
மலையின் இழிந்து, மாக் கடல் நோக்கி, |
|
20 |
நில வரை இழிதரும் பல் யாறு போல, |
புலவர் எல்லாம் நின் நோக்கினரே; |
|
நீயே, மருந்து இல் கணிச்சி வருந்த வட்டித்துக் |
|
கூற்று வெகுண்டன்ன முன்பொடு, |
|
மாற்று இரு வேந்தர் மண் நோக்கினையே. |
|
திணை வாகை; துறை அரசவாகை.
| |
அவனை இடைக்காடனார் பாடியது.
|
43 |
நிலமிசை வாழ்நர் அலமரல் தீர, |
|
தெறு கதிர்க் கனலி வெம்மை தாங்கி, |
|
கால் உணவு ஆக, சுடரொடு கொட்கும் |
|
அவிர்சடை முனிவரும் மருள, கொடுந்சிறைக் |
|
5 |
கூர் உகிர்ப் பருந்தின் ஏறு குறித்து, ஒரீஇ, |
தன் அகம் புக்க குறு நடைப் புறவின் |
|
தபுதி அஞ்சிச் சீரை புக்க |
|
வரையா ஈகை உரவோன் மருக! |
|
நேரார்க் கடந்த முரண் மிகு திருவின் |
|
10 |
தேர் வண் கிள்ளி தம்பி! வார் கோல், |
கொடுமர மறவர் பெரும! கடு மான் |
|
கை வண் தோன்றல்! ஐயம் உடையேன்: |
|
'ஆர் புனை தெரியல் நின் முன்னோர் எல்லாம் |
|
பார்ப்பார் நோவன செய்யலர்; மற்று இது |
|
15 |
நீர்த்தோ நினக்கு?' என வெறுப்பக் கூறி, |
நின் யான் பிழைத்தது நோவாய் என்னினும், |
|
நீ பிழைத்தாய் போல் நனி நாணினையே; |
|
'தம்மைப் பிழைத்தோர்ப் பொறுக்கும் செம்மல் |
|
இக் குடிப் பிறந்தோர்க்கு எண்மை காணும்' என, |
|
20 |
காண்தகு மொய்ம்ப! காட்டினை; ஆகலின், |
யானே பிழைத்தனென்; சிறக்க நின் ஆயுள் |
|
மிக்கு வரும் இன் நீர்க் காவிரி |
|
எக்கர் இட்ட மணலினும் பலவே! |
|
திணையும் துறையும் அவை.
| |
சோழன் நலங்கிள்ளி தம்பி மாவளத்தானும் தாமப்பல் கண்ணணும் வட்டுப் பொருவுழி, கை கரப்ப, வெகுண்டு வட்டுக் கொண்டு எறிந்தானை, 'சோழன் மகன் அல்லை, என, நாணியிருந்தானைத் தாமப்பல் கண்ணனார் பாடியது.
|
44 |
இரும் பிடித் தொழுதியொடு பெருங் கயம் படியா, |
|
நெல்லுடைக் கவளமொடு நெய்ம் மிதி பெறாஅ, |
|
திருந்து அரை நோன் வெளில் வருந்த ஒற்றி, |
|
நிலமிசைப் புரளும் கைய, வெய்து உயிர்த்து, |
|
5 |
அலமரல் யானை உரும் என முழங்கவும், |
பால் இல் குழவி அலறவும், மகளிர் |
|
பூ இல் வறுந் தலை முடிப்பவும், நீர் இல் |
|
வினை புனை நல் இல் இனைகூஉக் கேட்பவும், |
|
இன்னாது அம்ம, ஈங்கு இனிது இருத்தல்; |
|
10 |
துன் அருந் துப்பின் வய மான் தோன்றல்! |
அறவை ஆயின்,' நினது' எனத் திறத்தல்; |
|
மறவை ஆயின், போரொடு திறத்தல்; |
|
அறவையும் மறவையும் அல்லையாக, |
|
திறவாது அடைத்த திண் நிலைக் கதவின் |
|
15 |
நீள் மதில் ஒரு சிறை ஒடுங்குதல் |
நாணுத்தகவு உடைத்து, இது காணுங்காலே. |
|
திணையும் துறையும் அவை.
| |
அவன் ஆவூர் முற்றியிருந்த காலத்து அடைத்து இருந்த நெடுங்கிள்ளியைக் கோவூர் கிழார் பாடியது.
|
51 |
நீர் மிகின், சிறையும் இல்லை; தீ மிகின், |
|
மன் உயிர் நிழற்றும் நிழலும் இல்லை; |
|
வளி மிகின், வலியும் இல்லை; ஒளி மிக்கு |
|
அவற்று ஓர் அன்ன சினப் போர் வழுதி, |
|
5 |
'தண் தமிழ் பொது' எனப் பொறாஅன், போர் எதிர்ந்து, |
கொண்டி வேண்டுவன் ஆயின், 'கொள்க' எனக் |
|
கொடுத்த மன்னர் நடுக்கு அற்றனரே; |
|
அளியரோ அளியர், அவன் அளி இழந்தோரே |
|
நுண் பல சிதலை அரிது முயன்று எடுத்த |
|
10 |
செம் புற்று ஈயல் போல, |
ஒரு பகல் வாழ்க்கைக்கு உலமருவோரே! |
|
திணை வாகை; துறை அரச வாகை.
| |
பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதியை ஐயூர் முடவனார் பாடியது.
|
52 |
அணங்குடை நெடுங் கோட்டு அளையகம் முனைஇ, |
|
முணங்கு நிமிர் வயமான் முழு வலி ஒருத்தல், |
|
ஊன் நசை உள்ளம் துரப்ப, இரை குறித்து, |
|
தான் வேண்டு மருங்கின் வேட்டு எழுந்தாங்கு, |
|
5 |
வட புல மன்னர் வாட, அடல் குறித்து, |
இன்னா வெம் போர் இயல் தேர் வழுதி! |
|
இது நீ கண்ணியது ஆயின், இரு நிலத்து |
|
யார்கொல் அளியர்தாமே? ஊர்தொறும் |
|
மீன் சுடு புகையின் புலவு நாறு நெடுங் கொடி |
|
10 |
வயலுழை மருதின் வாங்குசினை வலக்கும் |
பெரு நல் யாணரின் ஒரீஇ, இனியே |
|
கலி கெழு கடவுள் கந்தம் கைவிடப் |
|
பலி கண் மாறிய பாழ்படு பொதியில், |
|
நரை மூதாளர் நாய் இடக் குழிந்த |
|
15 |
வல்லின் நல் அகம் நிறைய, பல் பொறிக் |
கான வாரணம் ஈனும் |
|
காடு ஆகி விளியும் நாடு உடையோரே! |
|
திணையும் துறையும் அவை.
| |
அவனை மருதன் இளநாகனார் பாடியது.
|
53 |
முதிர் வார் இப்பி முத்த வார் மணல், |
|
கதிர் விடு மணியின் கண் பொரு மாடத்து, |
|
இலங்கு வளை மகளிர் தெற்றி ஆடும் |
|
விளங்கு சீர் விளங்கில் விழுமம் கொன்ற |
|
5 |
களம் கொள் யானை, கடு மான், பொறைய! |
விரிப்பின் அகலும்; தொகுப்பின் எஞ்சும்; |
|
மம்மர் நெஞ்சத்து எம்மனோர்க்கு ஒருதலை |
|
கைம்முற்றல, நின் புகழே, என்றும்; |
|
ஒளியோர் பிறந்த இம் மலர் தலை உலகத்து |
|
10 |
வாழேம் என்றலும் அரிதே 'தாழாது |
செறுத்த செய்யுள் செய் செந் நாவின், |
|
வெறுத்த கேள்வி, விளங்கு புகழ்க் கபிலன் |
|
இன்று உளன் ஆயின், நன்றுமன்' என்ற நின் |
|
ஆடு கொள் வரிசைக்கு ஒப்ப, |
|
15 |
பாடுவல் மன்னால், பகைவரைக் கடப்பே. |
திணையும் துறையும் அவை.
| |
சேரன் மாந்தரஞ் சேரல் இரும்பொறையைப் பொருந்தில் இளங்கீரனார் பாடியது.
|
54 |
எம் கோன் இருந்த கம்பலை மூதூர், |
|
உடையோர் போல இடையின்று குறுகி, |
|
செம்மல் நாள் அவை அண்ணாந்து புகுதல் |
|
எம் அன வாழ்க்கை இரவலர்க்கு எளிதே; |
|
5 |
இரவலர்க்கு எண்மை அல்லது புரவு எதிர்ந்து, |
வானம் நாண, வரையாது, சென்றோர்க்கு |
|
ஆனாது ஈயும் கவி கை வண்மைக் |
|
கடு மான் கோதை துப்பு எதிர்ந்து எழுந்த |
|
நெடுமொழி மன்னர் நினைக்கும் காலை, |
|
10 |
பாசிலைத் தொடுத்த, உவலைக் கண்ணி, |
மாசு உண் உடுக்கை, மடி வாய், இடையன் |
|
சிறு தலை ஆயமொடு குறுகல்செல்லாப் |
|
புலி துஞ்சு வியன் புலத்தற்றே |
|
வலி துஞ்சு தடக் கை அவனுடை நாடே. |
|
திணையும் துறையும் அவை.
| |
சேரமான் குட்டுவன் கோதையைக் கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரன் பாடியது.
|
61 |
கொண்டைக் கூழைத் தண் தழைக் கடைசியர் |
|
சிறு மாண் நெய்தல் ஆம்பலொடு கட்கும், |
|
மலங்கு மிளிர், செறுவின் தளம்பு தடிந்து இட்ட |
|
பழன வாளைப் பரூஉக் கண் துணியல் |
|
5 |
புது நெல் வெண் சோற்றுக் கண்ணுறை ஆக, |
விலாப் புடை மருங்கு விசிப்ப மாந்தி, |
|
நீடு கதிர்க் கழனிச் சூடு தடுமாறும் |
|
வன் கை வினைஞர் புன் தலைச் சிறாஅர் |
|
தெங்கு படு வியன் பழம் முனையின், தந்தையர் |
|
10 |
குறைக்கண் நெடும் போர் ஏறி, விசைத்து எழுந்து |
செழுங் கோள் பெண்ணைப் பழம் தொட முயலும், |
|
வைகல் யாணர், நல் நாட்டுப் பொருநன், |
|
எஃகு விளங்கு தடக் கை இயல் தேர்ச் சென்னி, |
|
சிலைத் தார் அகலம் மலைக்குநர் உளர்எனின், |
|
15 |
தாம் அறிகுவர் தமக்கு உறுதி; யாம் அவன் |
எழு உறழ் திணி தோள் வழு இன்று மலைந்தோர் |
|
வாழக் கண்டன்றும் இலமே; தாழாது, |
|
திருந்து அடி பொருந்த வல்லோர் |
|
வருந்தக் காண்டல், அதனினும் இலமே. |
|
திணை வாகை; துறை அரச வாகை.
| |
சோழன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நலங்கிள்ளி சேட் சென்னியைக் கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார் பாடியது.
|
66 |
நளி இரு முந்நீர் நாவாய் ஓட்டி, |
|
வளி தொழில் ஆண்ட உரவோன் மருக! |
|
களி இயல் யானைக் கரிகால்வளவ! |
|
சென்று, அமர்க் கடந்த நின் ஆற்றல் தோன்ற |
|
5 |
வென்றோய்! நின்னினும் நல்லன் அன்றே |
கலி கொள் யாணர் வெண்ணிப் பறந்தலை, |
|
மிகப் புகழ் உலகம் எய்தி, |
|
புறப் புண் நாணி, வடக்கிருந்தோனே? |
|
திணை வாகை; துறை அரச வாகை.
| |
சோழன் கரிகாற் பெருவளத்தானை வெண்ணிக் குயத்தியார் பாடியது.
|
76 |
ஒருவனை ஒருவன் அடுதலும், தொலைதலும், |
|
புதுவது அன்று; இவ் உலகத்து இயற்கை; |
|
இன்றின் ஊங்கோ கேளலம் திரள் அரை |
|
மன்ற வேம்பின் மாச் சினை ஒண் தளிர் |
|
5 |
நெடுங் கொடி உழிஞைப் பவரொடு மிடைந்து, |
செறியத் தொடுத்த தேம் பாய் கண்ணி, |
|
ஒலியல் மாலையொடு, பொலியச் சூடி, |
|
பாடு இன் தெண் கிணை கறங்க, காண்தக, |
|
நாடு கெழு திருவின், பசும் பூண், செழியன் |
|
10 |
பீடும் செம்மலும் அறியார் கூடி, |
'பொருதும்' என்று தன்தலை வந்த |
|
புனை கழல் எழுவர் நல் வலம் அடங்க, |
|
ஒரு தான் ஆகிப் பொருது, களத்து அடலே. |
|
திணை வாகை; துறை அரச வாகை.
| |
பாண்டியன் தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியனை இடைக் குன்றூர் கிழார் பாடியது.
|
77 |
கிண்கிணி களைந்த கால் ஒண் கழல் தொட்டு, |
|
குடுமி களைந்த நுதல் வேம்பின் ஒண் தளிர் |
|
நெடுங் கொடி உழிஞைப் பவரொடு மிலைந்து, |
|
குறுந் தொடி கழித்த கைச் சாபம் பற்றி, |
|
5 |
நெடுந் தேர்க் கொடுஞ்சி பொலிய நின்றோன் |
யார்கொல்? வாழ்க, அவன் கண்ணி! தார் பூண்டு, |
|
தாலி களைந்தன்றும் இலனே; பால் விட்டு |
|
அயினியும் இன்று அயின்றனனே; வயின்வயின் |
|
உடன்று மேல் வந்த வம்ப மள்ளரை |
|
10 |
வியந்தன்றும், இழிந்தன்றும், இலனே; அவரை |
அழுந்தப் பற்றி, அகல் விசும்பு ஆர்ப்பு எழ, |
|
கவிழ்ந்து நிலம் சேர அட்டதை |
|
மகிழ்ந்தன்றும், மலிந்தன்றும், அதனினும் இலனே. |
|
திணையும் துறையும் அவை.
| |
அவனை அவர் பாடியது.
|
78 |
வணங்கு தொடைப் பொலிந்த வலி கெழு நோன் தாள், |
|
அணங்கு அருங் கடுந் திறல் என்னை முணங்கு நிமிர்ந்து, |
|
அளைச் செறி உழுவை இரைக்கு வந்தன்ன |
|
மலைப்பு அரும் அகலம் மதியார், சிலைத்து எழுந்து, |
|
5 |
'விழுமியம், பெரியம், யாமே; நம்மின் |
பொருநனும் இளையன்; கொண்டியும் பெரிது' என, |
|
எள்ளி வந்த வம்ப மள்ளர் |
|
புல்லென் கண்ணர்; புறத்தில் பெயர, |
|
ஈண்டு அவர் அடுதலும் ஒல்லான், ஆண்டு அவர் |
|
10 |
மாண் இழை மகளிர் நாணினர் கழிய, |
தந்தை தம் ஊர் ஆங்கண், |
|
தெண் கிணை கறங்கச் சென்று, ஆண்டு அட்டனனே. |
|
திணையும் துறையும் அவை.
| |
அவனை அவர் பாடியது.
|
79 |
மூதூர் வாயில் பனிக் கயம் மண்ணி, |
|
மன்ற வேம்பின் ஒண் குழை மலைந்து, |
|
தெண் கிணை முன்னர்க் களிற்றின் இயலி, |
|
வெம் போர்ச் செழியனும் வந்தனன்; எதிர்ந்த |
|
5 |
வம்ப மள்ளரோ பலரே; |
எஞ்சுவர் கொல்லோ, பகல் தவச் சிறிதே? |
|
திணையும் துறையும் அவை.
| |
அவனை அவர் பாடியது.
|
81 |
ஆர்ப்பு எழு கடலினும் பெரிது; அவன் களிறே |
|
கார்ப் பெயல் உருமின் முழங்கல் ஆனாவே; |
|
யார்கொல் அளியர்தாமே ஆர் நார்ச் |
|
செறியத் தொடுத்த கண்ணிக் |
|
5 |
கவி கை மள்ளன் கைப்பட்டோரே? |
திணை வாகை; துறை அரச வாகை.
| |
அவனை அவர் பாடியது.
|
82 |
சாறு தலைக்கொண்டென, பெண் ஈற்று உற்றென, |
|
பட்ட மாரி ஞான்ற ஞாயிற்று, |
|
கட்டில் நிணக்கும் இழிசினன் கையது |
|
போழ் தூண்டு ஊசியின் விரைந்தன்று மாதோ |
|
5 |
ஊர் கொள வந்த பொருநனொடு, |
ஆர் புனை தெரியல் நெடுந்தகை போரே! |
|
திணையும் துறையும் அவை.
| |
அவனை அவர் பாடியது.
|
93 |
திண் பிணி முரசம் இழுமென முழங்கச் |
|
சென்று, அமர் கடத்தல் யாவது? வந்தோர் |
|
தார் தாங்குதலும் ஆற்றார், வெடிபட்டு, |
|
ஓடல் மரீஇய பீடு இல் மன்னர் |
|
5 |
நோய்ப்பால் விளிந்த யாக்கை தழீஇ, |
காதல் மறந்து, அவர் தீது மருங்கு அறுமார், |
|
அறம் புரி கொள்கை நான்மறை முதல்வர் |
|
திறம் புரி பசும் புல் பரப்பினர் கிடப்பி, |
|
'மறம் கந்தாக நல் அமர் வீழ்ந்த |
|
10 |
நீள் கழல் மறவர் செல்வுழிச் செல்க!' என |
வாள் போழ்ந்து அடக்கலும் உய்ந்தனர் மாதோ |
|
வரி ஞிமிறு ஆர்க்கும் வாய் புகு கடாஅத்து |
|
அண்ணல் யானை அடு களத்து ஒழிய, |
|
அருஞ் சமம் ததைய நூறி, நீ, |
|
15 |
பெருந் தகை! விழுப் புண் பட்ட மாறே. |
திணை வாகை; துறை அரச வாகை.
| |
அவன் பொருது புண்பட்டு நின்றோனை அவர் பாடியது.
|
94 |
ஊர்க் குறுமாக்கள் வெண் கோடு கழாஅலின், |
|
நீர்த் துறை படியும் பெருங் களிறு போல |
|
இனியை, பெரும! எமக்கே; மற்று அதன் |
|
துன் அருங் கடாஅம் போல |
|
5 |
இன்னாய், பெரும! நின் ஒன்னாதோர்க்கே. |
திணையும் துறையும் அவை.
| |
அவனை அவர் பாடியது.
|
98 |
முனைத் தெவ்வர் முரண் அவியப் |
|
பொரக் குறுகிய நுதி மருப்பின் நின் |
|
இனக் களிறு செலக் கண்டவர் |
|
மதில் கதவம் எழுச் செல்லவும், |
|
5 |
பிணன் அழுங்கக் களன் உழக்கிச் |
செலவு அசைஇய மறுக் குளம்பின் நின் |
|
இன நல் மாச் செலக் கண்டவர் |
|
கவை முள்ளின் புழை அடைப்பவும், |
|
மார்புறச் சேர்ந்து ஒல்காத் |
|
10 |
தோல் செறிப்பு இல் நின் வேல் கண்டவர் |
தோல் கழியொடு பிடி செறிப்பவும், |
|
வாள் வாய்த்த வடுப் பரந்த நின் |
|
மற மைந்தர் மைந்து கண்டவர் |
|
புண் படு குருதி அம்பு ஒடுக்கவும், |
|
15 |
நீயே, ஐயவி புகைப்பவும் தாங்காது, ஒய்யென, |
உறுமுறை மரபின் புறம் நின்று உய்க்கும் |
|
கூற்றத்து அனையை; ஆகலின், போற்றார் |
|
இரங்க விளிவதுகொல்லோ வரம்பு அணைந்து |
|
இறங்குகதிர் அலம்வரு கழனி, |
|
20 |
பெரும் புனல் படப்பை, அவர் அகன் தலை நாடே! |
திணை வாகை; துறை அரச வாகை; திணை வஞ்சியும், துறை கொற்ற வள்ளையும் ஆம்.
| |
அவனை அவர் பாடியது.
|
99 |
அமரர்ப் பேணியும், ஆவுதி அருத்தியும், |
|
அரும் பெறல் மரபின் கரும்பு இவண் தந்தும், |
|
நீர் அக இருக்கை ஆழி சூட்டிய |
|
தொல் நிலை மரபின் நின் முன்னோர் போல, |
|
5 |
ஈகை அம் கழல் கால், இரும் பனம் புடையல், |
பூ ஆர் காவின், புனிற்றுப் புலால் நெடு வேல், |
|
எழு பொறி நாட்டத்து எழாஅத் தாயம் |
|
வழு இன்று எய்தியும் அமையாய், செரு வேட்டு, |
|
இமிழ் குரல் முரசின் எழுவரொடு முரணிச் |
|
10 |
சென்று, அமர் கடந்து, நின் ஆற்றல் தோற்றிய |
அன்றும், பாடுநர்க்கு அரியை; இன்றும் |
|
பரணன் பாடினன் மற்கொல் மற்று நீ |
|
முரண் மிகு கோவலூர் நூறி, நின் |
|
அரண் அடு திகிரி ஏந்திய தோளே! |
|
திணையும் துறையும் அவை.
| |
அவன் கோவலூர் எறிந்தானை அவர் பாடியது.
|
100 |
கையது வேலே; காலன புனை கழல்; |
|
மெய்யது வியரே; மிடற்றது பசும் புண்; |
|
வட்கர் போகிய வளர் இளம் போந்தை |
|
உச்சிக் கொண்ட ஊசி வெண் தோட்டு, |
|
5 |
வெட்சி மா மலர், வேங்கையொடு விரைஇ, |
சுரி இரும் பித்தை பொலியச் சூடி, |
|
வரிவயம் பொருத வயக் களிறு போல, |
|
இன்னும் மாறாது சினனே; அன்னோ! |
|
உய்ந்தனர் அல்லர், இவன் உடற்றியோரே; |
|
10 |
செறுவர் நோக்கிய கண், தன் |
சிறுவனை நோக்கியும், சிவப்பு ஆனாவே. |
|
திணையும் துறையும் அவை; திணை வஞ்சியும், துறை கொற்றவள்ளையும் ஆம்.
| |
அதியமான் தவமகன் பிறந்தவனைக் கண்டானை அவர் பாடியது.
|
104 |
போற்றுமின், மறவீர்! சாற்றுதும், நும்மை: |
|
ஊர்க் குறுமாக்கள் ஆடக் கலங்கும் |
|
தாள் படு சில் நீர்க் களிறு அட்டு வீழ்க்கும் |
|
ஈர்ப்புடைக் கராஅத்து அன்ன என்னை |
|
5 |
நுண் பல் கருமம் நினையாது, |
'இளையன்' என்று இகழின், பெறல் அரிது, ஆடே. |
|
திணை வாகை; துறை அரச வாகை.
| |
அவனை அவர் பாடியது.
|
125 |
பருத்திப் பெண்டின் பனுவல் அன்ன, |
|
நெருப்புச் சினம் தணிந்த நிணம் தயங்கு கொழுங் குறை, |
|
பரூஉக் கள் மண்டையொடு, ஊழ் மாறு பெயர |
|
உண்கும், எந்தை! நிற் காண்கு வந்திசினே, |
|
5 |
நள்ளாதார் மிடல் சாய்த்த |
வல்லாள! நின் மகிழ் இருக்கையே. |
|
உழுத நோன் பகடு அழி தின்றாங்கு |
|
நல் அமிழ்து ஆக, நீ நயந்து உண்ணும் நறவே; |
|
குன்றத்து அன்ன களிறு பெயர, |
|
10 |
கடந்து அட்டு வென்றோனும், நிற் கூறும்மே; |
'வெலீஇயோன் இவன்' என, |
|
'கழல் அணிப் பொலிந்த சேவடி நிலம் கவர்பு |
|
விரைந்து வந்து, சமம் தாங்கிய, |
|
வல் வேல் மலையன் அல்லன் ஆயின், |
|
15 |
நல் அமர் கடத்தல் எளிதுமன், நமக்கு' எனத் |
தோற்றோன்தானும், நிற் கூறும்மே, |
|
'தொலைஇயோன் இவன்' என, |
|
ஒரு நீ ஆயினை பெரும! பெரு மழைக்கு |
|
இருக்கை சான்ற உயர் மலைத் |
|
20 |
திருத் தகு சேஎய்! நிற் பெற்றிசினோர்க்கே. |
திணை வாகை; துறை அரச வாகை.
| |
சேரமான் மாந்தரஞ்சேரல் இரும்பொறையும் சோழன் இராச சூயம் வேட்ட பெருநற்கிள்ளியும் பொருதவழி, சோழற்குத் துப்பாகிய தேர்வண்மலையனை வடம வண்ணக்கன் பெருஞ்சாத்தனார் பாடியது.
|
167 |
நீயே, அமர் காணின் அமர் கடந்து, அவர் |
|
படை விலக்கி எதிர் நிற்றலின், |
|
வாஅள் வாய்த்த வடு ஆழ் யாக்கையொடு, |
|
கேள்விக்கு இனியை; கட்கு இன்னாயே: |
|
5 |
அவரே, நிற் காணின் புறம் கொடுத்தலின், |
ஊறு அறியா மெய் யாக்கையொடு, |
|
கண்ணுக்கு இனியர்; செவிக்கு இன்னாரே: |
|
அதனால், நீயும் ஒன்று இனியை; அவரும் ஒன்று இனியர்; |
|
ஒவ்வா யா உள, மற்றே? வெல் போர்க் |
|
10 |
கழல் புனை திருந்து அடிக் கடு மான் கிள்ளி! |
நின்னை வியக்கும் இவ் உலகம்; அஃது |
|
என்னோ? பெரும! உரைத்திசின் எமக்கே. |
|
திணை அது; துறை அரச வாகை.
| |
ஏனாதி திருக்கிள்ளியைக் கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார் பாடியது.
|
168 |
அருவி ஆர்க்கும் கழை பயில் நனந் தலைக் |
|
கறி வளர் அடுக்கத்து மலர்ந்த காந்தள் |
|
கொழுங் கிழங்கு மிளிரக் கிண்டி, கிளையொடு, |
|
கடுங் கண் கேழல் உழுத பூழி, |
|
5 |
நல் நாள் வரு பதம் நோக்கி, குறவர் |
உழாஅது வித்திய பரூஉக் குரல் சிறு தினை |
|
முந்து விளை யாணர் நாள் புதிது உண்மார் |
|
மரை ஆன் கறந்த நுரை கொள் தீம் பால், |
|
மான் தடி புழுக்கிய புலவு நாறு குழிசி |
|
10 |
வான் கேழ் இரும் புடை கழாஅது, ஏற்றி, |
சாந்த விறகின் உவித்த புன்கம் |
|
கூதளம் கவினிய குளவி முன்றில், |
|
செழுங் கோள் வாழை அகல் இலைப் பகுக்கும் |
|
ஊராக் குதிரைக் கிழவ! கூர்வேல், |
|
15 |
நறை நார்த் தொடுத்த வேங்கை அம் கண்ணி, |
வடி நவில் அம்பின் வில்லோர் பெரும! |
கை வள் ஈகைக் கடு மான் கொற்ற! |
|
வையக வரைப்பில் தமிழகம் கேட்ப, |
|
பொய்யாச் செந் நா நெளிய ஏத்திப் |
|
20 |
பாடுப என்ப பரிசிலர், நாளும் |
ஈயா மன்னர் நாண, |
|
வீயாது பரந்த நின் வசை இல் வான் புகழே. |
|
திணை பாடாண் திணை; துறை பரிசில் துறை; இயன்மொழியும், அரச வாகையும் ஆம்.
| |
பிட்டங் கொற்றனைக் கருவூர்க் கதப்பிள்ளைச் சாத்தனார் பாடியது.
|
174 |
அணங்குடை அவுணர் கணம் கொண்டு ஒளித்தென, |
|
சேண் விளங்கு சிறப்பின் ஞாயிறு காணாது, |
|
இருள் கண் கெடுத்த பருதி ஞாலத்து |
|
இடும்பை கொள் பருவரல் தீர, கடுந் திறல் |
|
5 |
அஞ்சன உருவன் தந்து நிறுத்தாங்கு, |
அரசு இழந்திருந்த அல்லல் காலை, |
|
முரசு எழுந்து இரங்கும் முற்றமொடு, கரை பொருது |
|
இரங்கு புனல் நெரிதரு மிகு பெருங் காவிரி |
|
மல்லல் நல் நாட்டு அல்லல் தீர, |
|
10 |
பொய்யா நாவின் கபிலன் பாடிய, |
மை அணி நெடு வரை ஆங்கண், ஒய்யெனச் |
|
செருப் புகல் மறவர் செல்புறம் கண்ட |
|
எள் அறு சிறப்பின் முள்ளூர் மீமிசை, |
|
அரு வழி இருந்த பெரு விறல் வளவன் |
|
15 |
மதி மருள் வெண்குடை காட்டி, அக் குடை |
புதுமையின் நிறுத்த புகழ் மேம்படுந! |
|
விடர்ப் புலி பொறித்த கோட்டை, சுடர்ப் பூண், |
|
சுரும்பு ஆர் கண்ணி, பெரும் பெயர் நும் முன் |
|
ஈண்டுச் செய் நல் வினை ஆண்டுச் சென்று உணீஇயர், |
|
20 |
உயர்ந்தோர் உலகத்துப் பெயர்ந்தனன் ஆகலின், |
ஆறு கொல் மருங்கின் மாதிரம் துழவும் |
|
கவலை நெஞ்சத்து அவலம் தீர, |
|
நீ தோன்றினையே நிரைத் தார் அண்ணல்! |
|
கல் கண் பொடிய, கானம் வெம்ப, |
|
25 |
மல்கு நீர் வரைப்பின் கயம் பல உணங்க, |
கோடை நீடிய பைது அறு காலை, |
|
இரு நிலம் நெளிய ஈண்டி, |
|
உரும் உரறு கருவிய மழை பொழிந்தாங்கே. |
|
திணை வாகை; துறை அரச வாகை.
| |
மலையமான் சோழிய ஏனாதி திருக்கண்ணனை மாறோக்கத்து நப்பசலையார் பாடியது.
|