முகப்பு | ![]() |
உவகைக் கலுழ்ச்சி |
277 |
'மீன் உண் கொக்கின் தூவி அன்ன |
|
வால் நரைக் கூந்தல் முதியோள் சிறுவன் |
|
களிறு எறிந்து பட்டனன்' என்னும் உவகை |
|
ஈன்ற ஞான்றினும் பெரிதே; கண்ணீர் |
|
5 |
நோன் கழை துயல்வரும் வெதிரத்து |
வான் பெயத் தூங்கிய சிதரினும் பலவே. |
|
திணை அது; துறை உவகைக் கலுழ்ச்சி.
| |
பூங்கண் உத்திரையார் பாடியது.
|
278 |
'நரம்பு எழுந்து உலறிய நிரம்பா மென் தோள், |
|
முளரி மருங்கின், முதியோள் சிறுவன் |
|
படை அழிந்து, மாறினன்' என்று பலர் கூற, |
|
'மண்டு அமர்க்கு உடைந்தனன் ஆயின், உண்ட என் |
|
5 |
முலை அறுத்திடுவென், யான்' எனச் சினைஇ, |
கொண்ட வாளொடு படு பிணம் பெயரா, |
|
செங்களம் துழவுவோள், சிதைந்து வேறு ஆகிய |
|
படு மகன் கிடக்கை காணூஉ, |
|
ஈன்ற ஞான்றினும் பெரிது உவந்தனளே! |
|
திணையும் துறையும் அவை.
| |
காக்கைபாடினியார் நச்செள்ளையார் பாடியது.
|
295 |
கடல் கிளர்ந்தன்ன கட்டூர் நாப்பண், |
|
வெந்து வாய் மடித்து வேல் தலைப் பெயரி, |
|
தோடு உகைத்து எழுதரூஉ, துரந்து எறி ஞாட்பின், |
|
வரு படை போழ்ந்து வாய்ப் பட விலங்கி, |
|
5 |
இடைப் படை அழுவத்துச் சிதைந்து வேறாகிய, |
சிறப்புடையாளன் மாண்பு கண்டருளி, |
|
வாடு முலை ஊறிச் சுரந்தன |
|
ஓடாப் பூட்கை விடலை தாய்க்கே. |
|
திணை அது; துறை உவகைக் கலுழ்ச்சி.
| |
ஒளவையார் பாடியது.
|