முகப்பு | ![]() |
ஏர்க்கள உருவகம் |
369 |
இருப்பு முகஞ் செறித்த ஏந்து எழில் மருப்பின், |
|
கருங் கை யானை கொண்மூ ஆக, |
|
நீள்மொழி மறவர் எறிவனர் உயர்த்த |
|
வாள் மின் ஆக, வயங்கு கடிப்பு அமைந்த |
|
5 |
குருதிப் பலிய முரசு முழக்கு ஆக, |
அரசு அராப் பனிக்கும் அணங்கு உறு பொழுதின், |
|
வெவ் விசைப் புரவி வீசு வளி ஆக, |
|
விசைப்புறு வல் வில் வீங்கு நாண் உகைத்த |
|
கணைத் துளி பொழிந்த கண் அகன் கிடக்கை. |
|
10 |
ஈரச் செறுவயின் தேர் ஏர் ஆக, |
விடியல் புக்கு, நெடிய நீட்டி, நின் |
|
செருப் படை மிளிர்ந்த திருத்துறு பைஞ் சால், |
|
பிடித்து எறி வெள் வேல் கணையமொடு வித்தி, |
|
விழுத் தலை சாய்த்த வெருவரு பைங் கூழ், |
|
15 |
பேய்மகள் பற்றிய பிணம் பிறங்கு பல் போர்பு, |
கண நரியோடு கழுது களம் படுப்ப, |
|
பூதம் காப்ப, பொலிகளம் தழீஇ, |
|
பாடுநர்க்கு இருந்த பீடுடையாள! |
|
தேய்வை வெண் காழ் புரையும் விசி பிணி |
|
20 |
வேய்வை காணா விருந்தின் போர்வை |
அரிக் குரல் தடாரி உருப்ப ஒற்றி, |
|
பாடி வந்திசின்; பெரும! பாடு ஆன்று |
|
எழிலி தோயும் இமிழ் இசை அருவி, |
|
பொன்னுடை நெடுங் கோட்டு, இமையத்து அன்ன |
|
25 |
ஓடை நுதல, ஒல்குதல் அறியா, |
துடி அடிக் குழவிய பிடி இடை மிடைந்த |
|
வேழ முகவை நல்குமதி |
|
தாழா ஈகைத் தகை வெய்யோயே! |
|
திணையும் துறையும் அவை; துறை ஏர்க்கள உருவகமும் ஆம்.
| |
சேரமான் கடல் ஓட்டிய வெல் கெழு குட்டுவனைப் பரணர் பாடியது.
|
373 |
உருமிசை முழக்கு என முரசம் இசைப்ப, |
|
செரு நவில் வேழம் கொண்மூ ஆக, |
|
தேர் மா அழி துளி தலைஇ, நாம் உறக் |
|
கணைக் காற்று எடுத்த கண் அகன் பாசறை, |
|
5 |
இழிதரு குருதியொடு ஏந்திய ஒள் வாள் |
பிழிவது போலப் பிட்டை ஊறு உவப்ப, |
|
மைந்தர் ஆடிய மயங்கு பெருந் தானை, |
|
கொங்கு புறம்பெற்ற கொற்ற வேந்தே! |
|
................................................தண்ட மாப் பொறி. |
|
10 |
மடக் கண் மயில் இயல் மறலியாங்கு, |
நெடுஞ் சுவர் நல் இல் புலம்ப, கடை கழிந்து, |
|
மென் தோள் மகளிர் மன்றம் பேணார், |
|
புண்ணுவ |
|
..........................அணியப் புரவி வாழ்க என, |
|
15 |
சொல் நிழல் இன்மையின் நல் நிழல் சேர, |
நுண் பூண் மார்பின் புன் தலைச் சிறாஅர் |
|
அம்பு அழி பொழுதில் தமர் முகம் காணா, |
|
........................................................ற் றொக்கான |
|
வேந்து புறங்கொடுத்த வீய்ந்து உகு பறந்தலை, |
|
20 |
மாடம் மயங்கு எரி மண்டி, கோடு இறுபு, |
உரும் எறி மலையின், இரு நிலம் சேர, |
|
சென்றோன் மன்ற, சொª |
|
........................ ண்ணறிநர் கண்டு கண் அலைப்ப, |
|
வஞ்சி முற்றம் வயக் களன் ஆக, |
|
25 |
அஞ்சா மறவர் ஆட் போர்பு அழித்துக் |
கொண்டனை, பெரும! குட புலத்து அதரி; |
|
பொலிக அத்தை, நின் பணைதனற............ளம்! |
|
விளங்கு திணை வேந்தர் களம்தொறும் சென்று, |
|
''புகர்முக முகவை பொலிக!'' என்று ஏத்தி, |
|
30 |
கொண்டனர்' என்ப, பெரியோர்; யானும் |
அம் கண் மாக் கிணை அதிர ஒற்ற, |
|
............... லென்ஆயினும், காதலின் ஏத்தி, |
|
நின்னோர் அன்னோர் பிறர் இவண் இன்மையின், |
|
மன் எயில் முகவைக்கு வந்திசின், பெரும! |
|
35 |
பகைவர் புகழ்ந்த ஆண்மை, நகைவர்க்குத் |
தா இன்று உதவும் பண்பின், பேயொடு |
|
கண நரி திரிதரூஉம் ஆங்கண், நிணன் அருந்து |
|
செஞ் செவி எருவை குழீஇ, |
|
அஞ்சுவரு கிடக்கைய களம் கிழவோயே! |
|
40 |
திணை அது; துறை மறக்களவழி; ஏர்க்கள உருவகமும் ஆம். |
சோழன் குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளிவளவன் கருவூர் எறிந்தானைக் கோவூர்
| |
கிழார் பாடியது.
|