ஏறாண் முல்லை

86
சிற்றில் நல் தூண் பற்றி, 'நின் மகன்
யாண்டு உளனோ?' என வினவுதி; என் மகன்
யாண்டு உளன்ஆயினும் அறியேன்; ஓரும்
புலி சேர்ந்து போகிய கல் அளை போல,
5
ஈன்ற வயிறோ இதுவே;
தோன்றுவன் மாதோ, போர்க்களத்தானே!

திணை வாகை; துறை ஏறாண் முல்லை.
காவற்பெண்டின் பாட்டு.

296
வேம்பு சினை ஒடிப்பவும், காஞ்சி பாடவும்,
நெய்யுடைக் கையர் ஐயவி புகைப்பவும்,
எல்லா மனையும் கல்லென்றவ்வே;
வேந்து உடன்று எறிவான்கொல்லோ
5
நெடிது வந்தன்றால் நெடுந்தகை தேரே?

திணை வாகை; துறை ஏறாண் முல்லை.
வெள்ளைமாளர் பாடியது.