முகப்பு | ![]() |
ஏறாண் முல்லை |
86 |
சிற்றில் நல் தூண் பற்றி, 'நின் மகன் |
|
யாண்டு உளனோ?' என வினவுதி; என் மகன் |
|
யாண்டு உளன்ஆயினும் அறியேன்; ஓரும் |
|
புலி சேர்ந்து போகிய கல் அளை போல, |
|
5 |
ஈன்ற வயிறோ இதுவே; |
தோன்றுவன் மாதோ, போர்க்களத்தானே! |
|
திணை வாகை; துறை ஏறாண் முல்லை.
| |
காவற்பெண்டின் பாட்டு.
|
296 |
வேம்பு சினை ஒடிப்பவும், காஞ்சி பாடவும், |
|
நெய்யுடைக் கையர் ஐயவி புகைப்பவும், |
|
எல்லா மனையும் கல்லென்றவ்வே; |
|
வேந்து உடன்று எறிவான்கொல்லோ |
|
5 |
நெடிது வந்தன்றால் நெடுந்தகை தேரே? |
திணை வாகை; துறை ஏறாண் முல்லை.
| |
வெள்ளைமாளர் பாடியது.
|