முகப்பு | ![]() |
கடை நிலை |
127 |
'களங்கனி அன்ன கருங் கோட்டுச் சீறியாழ்ப் |
|
பாடு இன் பனுவல் பாணர் உய்த்தென, |
|
களிறு இலவாகிய புல் அரை நெடு வெளில், |
|
கான மஞ்ஞை கணனொடு சேப்ப, |
|
5 |
ஈகை அரிய இழை அணி மகளிரொடு |
சாயின்று' என்ப, ஆஅய் கோயில்; |
|
சுவைக்கு இனிது ஆகிய குய்யுடை அடிசில் |
|
பிறர்க்கு ஈவு இன்றித் தம் வயிறு அருத்தி, |
|
உரைசால் ஓங்கு புகழ் ஒரீஇய |
|
10 |
முரைசு கெழு செல்வர் நகர் போலாதே. |
திணை அது; துறை கடைநிலை.
| |
ஆயை உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் பாடியது.
|
382 |
கடல்படை அடல் கொண்டி, |
|
மண்டுற்ற மலிர் நோன் தாள், |
|
தண் சோழ நாட்டுப் பொருநன், |
|
அலங்கு உளை அணி இவுளி |
|
5 |
நலங்கிள்ளி நசைப் பொருநரேம்; |
பிறர்ப் பாடிப் பெறல் வேண்டேம்; |
|
அவற் பாடுதும், 'அவன் தாள் வாழிய!' என; |
|
நெய் குய்ய ஊன் நவின்ற |
|
பல் சோற்றான், இன் சுவைய |
|
10 |
நல்குரவின் பசித் துன்பின் நின் |
முன்னநாள் விட்ட மூது அறி சிறாஅரும், |
|
யானும், ஏழ் மணி, அம் கேழ், அணி உத்தி, |
|
கண் கேள்வி, கவை நாவின், |
|
நிறன் உற்ற, அராஅப் போலும் |
|
15 |
வறன் ஒரீஇ வழங்கு வாய்ப்ப, |
விடுமதி அத்தை, கடு மான் தோன்றல்! |
|
நினதே, முந்நீர் உடுத்த இவ் வியன் உலகு, அறிய; |
|
எனதே, கிடைக் காழ் அன்ன தெண் கண் மாக் கிணை |
|
கண் அகத்து யாத்த நுண் அரிச் சிறு கோல் |
|
20 |
ஏறிதொறும் நுடங்கியாங்கு, நின் பகைஞர் |
கேட்டொறும் நடுங்க, ஏத்துவென், |
|
வென்ற தேர், பிறர் வேத்தவையானே. |
|
திணை அது; துறை கடைநிலை.
| |
சோழன் நலங்கிள்ளியைக் கோவூர் கிழார் பாடியது.
|
383 |
ஒண்பொறிச் சேவல் எடுப்ப, ஏற்றெழுந்து, |
|
தண் பனி உறைக்கும் புலரா ஞாங்கர், |
|
நுண் கோல் சிறு கிணை சிலம்ப ஒற்றி, |
|
நெடுங் கடை நின்று, பகடு பல வாழ்த்தி, |
|
5 |
தன் புகழ் ஏத்தினெனாக, ஊன் புலந்து, |
அருங் கடி வியல் நகர்க் குறுகல் வேண்டி, |
|
கூம்பு விடு மென் பிணி அவிழ்த்த ஆம்பல் |
|
தேம் பாய் உள்ள தம் கமழ் மடர் உள, |
|
பாம்பு உரி அன்ன வடிவின, காம்பின் |
|
10 |
கழை படு சொலியின் இழை அணி வாரா, |
ஒண் பூங் கலிங்கம் உடீஇ, நுண் பூண் |
|
வசிந்து வாங்கு நுசுப்பின், அவ் வாங்கு உந்தி, |
|
கற்புடை மடந்தை தன் புறம் புல்ல, |
|
எற் பெயர்ந்த நோக்கி..................................... |
|
15 |
.................................................கல் கொண்டு, |
அழித்துப் பிறந்தனெனாகி, அவ் வழி, |
|
பிறர், பாடு புகழ் பாடிப் படர்பு அறியேனே; |
|
குறு முலைக்கு அலமரும் பால் ஆர் வெண் மறி, |
|
நரை முக ஊகமொடு, உகளும், சென................ |
|
20 |
.......................கன்று பல கெழீஇய |
கான் கெழு நாடன், கடுந் தேர் அவியன், என |
|
ஒருவனை உடையேன்மன்னே, யானே; |
|
அறான்; எவன் பரிகோ, வெள்ளியது நிலையே? |
|
திணையும் துறையும் அவை.
| |
...........................மாறோக்கத்து நப்பசலையார் (அவியனைப்) பாடியது.
|
384 |
மென்பாலான் உடன் அணைஇ, |
|
வஞ்சிக் கோட்டு உறங்கு நாரை |
|
அறைக் கரும்பின் பூ அருந்தும்; |
|
வன்பாலான் கருங் கால் வரகின் |
|
5 |
...................................................................................... |
அம் கண் குறு முயல வெருவ, அயல |
|
கருங் கோட்டு இருப்பைப் பூ உறைக்குந்து; |
|
விழவு இன்றாயினும், உழவர் மண்டை |
|
இருங் கெடிற்று மிசையொடு பூங் கள் வைகுந்து; |
|
10 |
................................................கிணையேம், பெரும! |
நெல் என்னா, பொன் என்னா, |
|
கனற்றக் கொண்ட நறவு என்னா, |
|
.....................மனை என்னா, அவை பலவும் |
|
யான் தண்டவும், தான் தண்டான், |
|
15 |
நிணம் பெருத்த கொழுஞ் சோற்றிடை, |
மண் நாணப் புகழ் வேட்டு, |
|
நீர் நாண நெய் வழங்கி, |
|
புரந்தோன்; எந்தை; யாமலந்தொலை..... |
|
அன்னோனை உடையேம் என்ப;....... வறட்கு |
|
20 |
யாண்டு நிற்க வெள்ளி, மாண்ட |
உண்ட நன் கலம் பெய்து நுடக்கவும், |
|
தின்ற நண் பல் ஊன் தோண்டவும், |
|
வந்த வைகல் அல்லது, |
|
சென்ற எல்லைச் செலவு அறியேனே. |
|
திணையும் துறையும் அவை.
| |
கரும்பனூர் கிழானைப் புறத்திணை நன்னாகனார் பாடியது.
|
391 |
தண் துளி பல பொழிந்து எழிலி இசைக்கும் |
|
விண்டு அனைய விண் தோய் பிறங்கல் |
|
முகடுற உயர்ந்த நெல்லின் மகிழ் வரப் |
|
பகடு தரு பெரு வளம் வாழ்த்தி, பெற்ற |
|
5 |
திருந்தா மூரி பரந்து படக் கெண்டி, |
அரியல் ஆர்கையர் உண்டு இனிது உவக்கும் |
|
வேங்கட வரைப்பின் வட புலம் பசித்தென, |
|
ஈங்கு வந்து இறுத்த என் இரும் பேர் ஒக்கல் |
|
தீர்கை விடுக்கும் பண்பு இல முதுகுடி |
|
10 |
நன...............................................வினவலின், |
'முன்னும் வந்தோன் மருங்கிலன், இன்னும் |
|
அளியன் ஆகலின், பொருநன் இவன்' என, |
|
நின் உணர்ந்து அறியுநர் என் உணர்ந்து கூற, |
|
காண்கு வந்திசின், பெரும!........................... |
|
15 |
..........பெருங் கழி நுழைமீன் அருந்தும் |
துதைந்த தூவி அம் புதாஅம் சேக்கும் |
|
ததைந்த புனல் நின் செழு நகர் வரைப்பின், |
|
நெஞ்சு அமர் காதல் நின் வெய்யோளொடு, |
|
இன் துயி........................... ஞ்சால் |
|
20 |
துளி பதன் அறிந்து பொழிய, |
வேலி ஆயிரம் விளைக, நின் வயலே! |
|
திணை அது; துறை கடைநிலை.
| |
பொறையாற்று கிழானைக் கல்லாடனார் பாடியது.
|
392 |
மதி ஏர் வெண் குடை அதியர் கோமான், |
|
கொடும் பூண் எழினி, நெடுங் கடை நின்று, யான் |
|
பசலை நிலவின் பனி படு விடியல், |
|
பொரு களிற்று அடி வழி அன்ன, என் கை |
|
5 |
ஒரு கண் மாக் கிணை ஒற்றுபு கொடாஅ, |
'உரு கெழு மன்னர் ஆர் எயில் கடந்து, |
|
நிணம் படு குருதிப் பெரும் பாட்டு ஈரத்து |
|
அணங்குடை மரபின் இருங் களந்தோறும், |
|
வெள் வாய்க் கழுதைப் புல் இனம் பூட்டி, |
|
10 |
வெள்ளை வரகும் கொள்ளும் வித்தும் |
வைகல் உழவ! வாழிய பெரிது!' எனச் |
|
சென்று யான் நின்றனெனாக, அன்றே, |
|
ஊர் உண் கேணிப் பகட்டு இலைப் பாசி |
|
வேர் புரை சிதாஅர் நீக்கி, நேர் கரை |
|
15 |
நுண் நூல் கலிங்கம் உடீஇ, 'உண்' எனத் |
தேள் கடுப்பு அன்ன நாட்படு தேறல் |
|
கோள்மீன் அன்ன பொலங் கலத்து அளைஇ, |
|
ஊண் முறை ஈத்தல் அன்றியும், கோள் முறை |
|
விருந்து இறை நல்கியோனே அந்தரத்து |
|
20 |
அரும் பெறல் அமிழ்தம் அன்ன |
கரும்பு இவண் தந்தோன் பெரும் பிறங்கடையே. |
|
திணையும் துறையும் அவை.
| |
அதியமான் நெடுமான் அஞ்சி மகன் பொகுட்டெழினியை ஒளவையார் பாடியது.
|
393 |
பதிமுதல் பழகாப் பழங்கண் வாழ்க்கைக் |
|
குறு நெடுந் துணையொடு கூமை வீதலின், |
|
குடி முறை பாடி, ஒய்யென வருந்தி, |
|
அடல் நசை மறந்த எம் குழிசி மலர்க்கும் |
|
5 |
கடன் அறியாளர் பிற நாட்டு இன்மையின், |
'வள்ளன்மையின் எம் வரைவோர் யார்?' என, |
|
உள்ளிய உள்ளமொடு உலை நசை துணையா, |
|
.................... கவகம் எல்லாம் ஒருபால் பட்டென, |
|
மலர் தார் அண்ணல் நின் நல் இசை உள்ளி, |
|
10 |
ஈர்ங்கை மறந்த என் இரும் பேர் ஒக்கல் |
கூர்ந்த எவ்வம் விட, கொழு நிணம் கிழிப்ப, |
|
கோடைப் பருத்தி வீடு நிறை பெய்த |
|
மூடைப் பண்டம் மிடை நிறைந்தன்ன, |
|
வெண் நிண மூரி அருள, நாள் உற |
|
15 |
ஈன்ற அரவின் நா உருக் கடுக்கும் என் |
தொன்று படு சிதாஅர் துவர நீக்கி, |
|
போது விரி பகன்றைப் புது மலர் அன்ன, |
|
அகன்று மடி கலிங்கம் உடீஇ, செல்வமும், |
|
கேடு இன்று நல்குமதி, பெரும! மாசு இல் |
|
20 |
மதி புரை மாக் கிணை தெளிர்ப்ப ஒற்றி, |
ஆடுமகள் அல்குல் ஒப்ப வாடி, |
|
'கோடை ஆயினும், கோடி............................... |
|
காவிரி புரக்கும் நல் நாட்டுப் பொருந! |
|
வாய் வாள் வளவன்! வாழ்க! எனப் |
|
25 |
பீடு கெழு நோன் தாள் பாடுகம் பலவே. |
திணையும் துறையும் அவை.
| |
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை நல்லிறையனார் பாடியது.
|
394 |
சிலை உலாய் நிமிர்ந்த சாந்து படு மார்பின், |
|
ஒலி கதிர்க் கழனி வெண்குடைக் கிழவோன், |
|
வலி துஞ்சு தடக் கை வாய் வாள் குட்டுவன், |
|
வள்ளியன் ஆதல் வையகம் புகழினும், |
|
5 |
உள்ளல் ஓம்புமின், உயர் மொழிப் புலவீர்! |
யானும் இருள் நிலாக் கழிந்த பகல் செய் வைகறை, |
|
ஒரு கண் மாக் கிணை தெளிர்ப்ப ஒற்றி, |
|
பாடு இமிழ் முரசின் இயல் தேர்த் தந்தை |
|
வாடா வஞ்சி பாடினேனாக, |
|
10 |
அகம் மலி உவகையொடு அணுகல் வேண்டி, |
கொன்று சினம் தணியாப் புலவு நாறு மருப்பின் |
|
வெஞ் சின வேழம் நல்கினன்; அஞ்சி |
|
யான் அது பெயர்த்தனெனாக, தான் அது |
|
சிறிது என உணர்ந்தமை நாணி, பிறிதும் ஓர் |
|
15 |
பெருங் களிறு நல்கியோனே; அதற்கொண்டு, |
இரும் பேர் ஒக்கல் பெரும் புலம்புறினும், |
|
'துன் அரும் பரிசில் தரும்' என, |
|
என்றும் செல்லேன், அவன் குன்று கெழு நாட்டே. |
|
திணையும் துறையும் அவை. |
|
கடைநிலை ஆயின எல்லாம் பாடாண் திணை.
| |
சோழிய ஏனாதி திருக்குட்டுவனைக் கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார் பாடியது.
|
395 |
மென் புலத்து வயல் உழவர் |
|
வன் புலத்துப் பகடு விட்டு, |
|
குறு முயலின் குழைச் சூட்டொடு |
|
நெடு வாளைப் பல் உவியல், |
|
5 |
பழஞ் சோற்றுப் புகவு அருந்தி, |
புதல் தளவின் பூச் சூடி, |
|
................................................................ |
|
...........................அரியலாருந்து; |
|
மனைக் கோழிப் பைம் பயிரின்னே, |
|
10 |
கானக் கோழிக் கவர் குரலொடு |
நீர்க் கோழிக் கூய்ப் பெயர்க்குந்து; |
|
வேய் அன்ன மென் தோளால், |
|
மயில் அன்ன மென் சாயலார், |
|
கிளி கடியின்னே, |
|
15 |
அகல் அள்ளல் புள் இரீஇயுந்து; |
ஆங்கு அப் பல நல்ல புலன் அணியும் |
|
சீர் சான்ற விழுச் சிறப்பின், |
|
சிறு கண் யானைப் பெறல் அருந் தித்தன் |
|
செல்லா நல் இசை உறந்தைக் குணாது, |
|
20 |
நெடுங் கை வேண்மான் அருங் கடிப் பிடவூர் |
அறப் பெயர்ச் சாத்தன் கிளையேம், பெரும! |
|
முன் நாள் நண்பகல் சுரன் உழந்து வருந்தி, |
|
கதிர் நனி செ ...................................... மாலை, |
|
தன் கடைத் தோன்றி, என் உறவு இசைத்தலின், |
|
25 |
தீம் குரல்......... கின் அரிக் குரல் தடாரியொடு, |
ஆங்கு நின்ற எற்கண்டு, |
|
சிறிதும் நில்லான், பெரிதும் கூறான், |
|
அருங் கலம் வரவே அருளினன் வேண்டி, |
|
...........யென உரைத்தன்றி நல்கி, தன் மனைப் |
|
30 |
பொன் போல் மடந்தையைக் காட்டி, 'இவனை |
என் போல் போற்று' என்றோனே; அதற்கொண்டு, |
|
அவன் மறவலேனே; பிறர் உள்ளலேனே; |
|
அகன் ஞாலம் பெரிது வெம்பினும், |
|
மிக வானுள் எரி தோன்றினும், |
|
35 |
குள மீனொடும் தாள் புகையினும், |
பெருஞ் செய் நெல்லின் கொக்கு உகிர் நிமிரல் |
|
பசுங் கண் கருனைச் சூட்டொடு மாந்தி, |
|
'விளைவு ஒன்றோ வெள்ளம் கொள்க!' என, |
|
உள்ளதும் இல்லதும் அறியாது, |
|
40 |
ஆங்கு அமைந்தன்றால்; வாழ்க, அவன் தாளே! |
திணையும் துறையும் அவை.
| |
சோழநாட்டுப் பிடவூர் கிழார் மகன் பெருஞ்சாத்தனை மதுரை நக்கீரர் பாடியது.
|
396 |
கீழ் நீரான் மீன் வழங்குந்து; |
|
மீ நீரான், கண் அன்ன, மலர் பூக்குந்து; |
|
கழி சுற்றிய விளை கழனி, |
|
அரிப் பறையான் புள் ஓப்புந்து; |
|
5 |
நெடுநீர் கூஉம் மணல் தண் கான் |
மென் பறையான் புள் இரியுந்து; |
|
நனைக் கள்ளின் மனைக் கோசர் |
|
தீம் தேறல் நறவு மகிழ்ந்து, |
|
தீம் குரவைக் கொளைத் தாங்குந்து; |
|
10 |
உள் இலோர்க்கு வலி ஆகுவன், |
கேள் இலோர்க்குக் கேள் ஆகுவன், |
|
கழுமிய வென் வேல் வேளே, |
|
வள நீர் வாட்டாற்று எழினியாதன்; |
|
கிணையேம், பெரும! |
|
15 |
கொழுந் தடிய சூடு என்கோ? |
வள நனையின் மட்டு என்கோ? |
|
குறு முயலின் நிணம் பெய்தந்த |
|
நறு நெய்ய சோறு என்கோ? |
|
திறந்து மறந்த கூட்டுமுதல் |
|
20 |
முகந்து கொள்ளும் உணவு என்கோ? |
அன்னவை பல பல |
|
...................................................ருநதய |
|
இரும் பேர் ஒக்கல் அருந்து எஞ்சிய |
|
அளித்து உவப்ப, ஈத்தோன் எந்தை; |
|
25 |
எம்மோர் ஆக்கக் கங்குண்டே; |
மாரி வானத்து மீன் நாப்பண், |
|
விரி கதிர வெண் திங்களின், |
|
விளங்கித் தோன்றுக, அவன் கலங்கா நல் இசை! |
|
யாமும் பிறரும் வாழ்த்த, நாளும் |
|
30 |
நிரைசால் நன் கலன் நல்கி, |
உரை செலச் சிறக்க, அவன் பாடல்சால் வளனே! |
|
திணையும் துறையும் அவை.
| |
வாட்டாற்று எழினியாதனை மாங்குடி கிழார் பாடியது.
|
398 |
மதி நிலாக் கரப்ப, வெள்ளி ஏர்தர, |
|
வகை மாண் நல் இல்........................ |
|
பொறி மயிர் வாரணம் பொழுது அறிந்து இயம்ப, |
|
பொய்கைப் பூ முகை மலர, பாணர் |
|
5 |
கை வல் சீறியாழ் கடன் அறிந்து இயக்க, |
இரவுப் புறம் பெற்ற ஏம வைகறை, |
|
பரிசிலர் விசையெ |
|
வரிசையின் இறுத்த வாய்மொழி வஞ்சன், |
|
நகைவர் குறுகின் அல்லது, பகைவர்க்குப் |
|
10 |
புலியினம் மடிந்த கல் அளை போல, |
துன்னல் போகிய பெரும் பெயர் மூதூர், |
|
மதியத்து அன்ன என் அரிக் குரல் தடாரி, |
|
இரவுரை நெடுவார் அரிப்ப வட்டித்து, |
|
உள்ளி வருநர் கொள்கலம் நிறைப்போய்! |
|
15 |
'தள்ளா நிலையை ஆகியர் எமக்கு' என |
என் வரவு அறீஇ, |
|
சிறிதிற்குப் பெரிது உவந்து, |
|
விரும்பிய முகத்தன் ஆகி, என் அரைத் |
|
துரும்பு படு சிதாஅர் நீக்கி, தன் அரைப் |
|
20 |
புகை விரிந்தன்ன பொங்கு துகில் உடீஇ, |
அழல் கான்றன்ன அரும் பெறல் மண்டை, |
|
நிழல் காண் தேறல் நிறைய வாக்கி, |
|
யான் உண அருளல் அன்றியும், தான் உண் |
|
மண்டைய கண்ட மான் வறைக் கருனை, |
|
25 |
கொக்கு உகிர் நிமிரல் ஒக்கல் ஆர, |
வரை உறழ் மார்பின், வையகம் விளக்கும், |
|
விரவு மணி ஒளிர்வரும், அரவு உறழ் ஆரமொடு, |
|
புரையோன் மேனிப் பூத்தசல....................... |
|
முரைசெல அருளியோனே |
|
30 |
........................யருவிப் பாயல் கோவே. |
திணை பாடாண் திணை; துறை கடைநிலை.
| |
சேரமான் வஞ்சனைத் திருத்தாமனார் பாடியது.
|