முகப்பு | ![]() |
செவியறிவுறூஉ |
2 |
மண் திணிந்த நிலனும், |
|
நிலன் ஏந்திய விசும்பும், |
|
விசும்பு தைவரு வளியும், |
|
வளித் தலைஇய தீயும், |
|
5 |
தீ முரணிய நீரும், என்றாங்கு |
ஐம் பெரும் பூதத்து இயற்கை போல |
|
போற்றார்ப் பொறுத்தலும், சூழ்ச்சியது அகலமும், |
|
வலியும், தெறலும், அளியும், உடையோய்! |
|
நின் கடல் பிறந்த ஞாயிறு பெயர்த்தும் நின் |
|
10 |
வெண் தலைப் புணரிக் குட கடல் குளிக்கும், |
யாணர் வைப்பின், நல் நாட்டுப் பொருந! |
|
வான வரம்பனை! நீயோ, பெரும! |
|
அலங்கு உளைப் புரவி ஐவரொடு சினைஇ, |
|
நிலம் தலைக்கொண்ட பொலம் பூந் தும்பை |
|
15 |
ஈர் ஐம்பதின்மரும் பொருது, களத்து ஒழிய, |
பெருஞ் சோற்று மிகு பதம் வரையாது கொடுத்தோய்! |
|
பாஅல் புளிப்பினும், பகல் இருளினும், |
|
நாஅல் வேத நெறி திரியினும், |
|
திரியாச் சுற்றமொடு முழுது சேண் விளங்கி, |
|
20 |
நடுக்கின்றி நிலியரோ அத்தை அடுக்கத்து, |
சிறு தலை நவ்விப் பெருங் கண் மாப் பிணை, |
|
அந்தி அந்தணர் அருங் கடன் இறுக்கும் |
|
முத் தீ விளக்கின், துஞ்சும் |
|
பொற் கோட்டு இமயமும், பொதியமும், போன்றே! |
|
திணை பாடாண் திணை; துறை செவியறிவுறூஉ; வாழ்த்தியலும் ஆம்.
| |
சேரமான் பெருஞ் சோற்று உதியஞ் சேரலாதனை முரஞ்சியூர் முடிநாகராயர்பாடியது.
|
3 |
உவவு மதி உருவின் ஓங்கல் வெண் குடை |
|
நிலவுக் கடல் வரைப்பின் மண்ணகம் நிழற்ற, |
|
ஏம முரசம் இழுமென முழங்க, |
|
நேமி உய்த்த நேஎ நெஞ்சின், |
|
5 |
தவிரா ஈகை, கவுரியர் மருக! |
செயிர் தீர் கற்பின் சேயிழை கணவ! |
|
பொன் ஓடைப் புகர் அணி நுதல், |
|
துன் அருந் திறல், கமழ் கடாஅத்து, |
|
எயிறு படையாக எயிற் கதவு இடாஅ, |
|
10 |
கயிறு பிணிக்கொண்ட கவிழ் மணி மருங்கின், |
பெருங் கை, யானை இரும் பிடர்த் தலை இருந்து, |
|
மருந்து இல் கூற்றத்து அருந் தொழில் சாயாக் |
|
கருங் கை ஒள் வாட் பெரும்பெயர் வழுதி! |
|
நிலம் பெயரினும், நின் சொல் பெயரல்; |
|
15 |
பொலங் கழற் கால், புலர் சாந்தின் |
விலங்கு அகன்ற வியல் மார்ப! |
|
ஊர் இல்ல, உயவு அரிய, |
|
நீர் இல்ல, நீள் இடைய, |
|
பார்வல் இருக்கை, கவி கண் நோக்கின், |
|
20 |
செந் தொடை பிழையா வன்கண் ஆடவர் |
அம்பு விட, வீழ்ந்தோர் வம்பப் பதுக்கை, |
|
திருந்து சிறை வளை வாய்ப் பருந்து இருந்து உயவும் |
|
உன்ன மரத்த துன் அருங் கவலை, |
|
நின் நசை வேட்கையின் இரவலர் வருவர் அது |
|
25 |
முன்னம் முகத்தின் உணர்ந்து, அவர் |
இன்மை தீர்த்தல் வன்மையானே. |
|
திணையும் துறையும் அவை.
| |
பாண்டியன் கருங் கை ஒள்வாட் பெரும்பெயர் வழுதியை இரும்பிடர்த்தலையார்பாடியது.
|
5 |
எருமை அன்ன கருங் கல் இடை தோறு, |
|
ஆனின் பரக்கும் யானைய, முன்பின், |
|
கானக நாடனை! நீயோ, பெரும! |
|
நீ ஓர் ஆகலின், நின் ஒன்று மொழிவல்: |
|
5 |
அருளும் அன்பும் நீக்கி, நீங்கா |
நிரயம் கொள்பவரொடு ஒன்றாது, காவல், |
|
குழவி கொள்பவரின், ஓம்புமதி! |
|
அளிதோ தானே; அது பெறல் அருங் குரைத்தே. |
|
திணை பாடாண்திணை; துறை செவியறிவுறூஉ; பொருண்மொழிக் காஞ்சியும் ஆம்.
| |
சேரமான் கருவூர் ஏறிய ஒள் வாட் கோப் பெருஞ்சேரல் இரும்பொறையைக் கண்ட ஞான்று, நின் உடம்பு பெறுவாயாக!' என, அவனைச் சென்று கண்டு, தம் உடம்பு பெற்று நின்ற நரிவெரூஉத்தலையார் பாடியது.
|
6 |
வடாஅது பனி படு நெடு வரை வடக்கும், |
|
தெனாஅது உரு கெழு குமரியின் தெற்கும், |
|
குணாஅது கரை பொரு தொடு கடற் குணக்கும், |
|
குடாஅது தொன்று முதிர் பௌவத்தின் குடக்கும், |
|
5 |
கீழது முப் புணர் அடுக்கிய முறை முதற் கட்டின் |
நீர் நிலை நிவப்பின் கீழும், மேலது |
|
ஆனிலை உலகத்தானும், ஆனாது, |
|
உருவும் புகழும் ஆகி, விரி சீர்த் |
|
தெரி கோல் ஞமன் போல, ஒரு திறம் |
|
10 |
பற்றல் இலியரோ! நின் திறம் சிறக்க! |
செய் வினைக்கு எதிர்ந்த தெவ்வர் தேஎத்து, |
|
கடல் படை குளிப்ப மண்டி, அடர் புகர்ச் |
|
சிறு கண் யானை செவ்விதின் ஏவி, |
|
பாசவல் படப்பை ஆர் எயில் பல தந்து, |
|
15 |
அவ் எயில் கொண்ட செய்வுறு நன் கலம் |
பரிசில் மாக்கட்கு வரிசையின் நல்கி, |
|
பணியியர் அத்தை, நின் குடையே முனிவர் |
|
முக் கட் செல்வர் நகர் வலம் செயற்கே! |
|
இறைஞ்சுக, பெரும! நின் சென்னி சிறந்த |
|
20 |
நான்மறை முனிவர் ஏந்து கை எதிரே! |
வாடுக, இறைவ! நின் கண்ணி ஒன்னார் |
|
நாடு சுடு கமழ் புகை எறித்தலானே! |
|
செலியர் அத்தை, நின் வெகுளி வால் இழை |
|
மங்கையர் துனித்த வாள் முகத்து எதிரே! |
|
25 |
ஆங்க, வென்றி எல்லாம் வென்று அகத்து அடக்கிய |
தண்டா ஈகைத் தகை மாண் குடுமி! |
|
தண் கதிர் மதியம் போலவும், தெறு சுடர் |
|
ஒண் கதிர் ஞாயிறு போலவும், |
|
மன்னிய, பெரும! நீ நிலமிசையானே! |
|
திணையும் துறையும் அவை; துறை வாழ்த்தியலும் ஆம்.
| |
பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியைக் காரி கிழார் பாடியது.
|
35 |
நளி இரு முந்நீர் ஏணி ஆக, |
|
வளி இடை வழங்கா வானம் சூடிய |
|
மண் திணி கிடக்கைத் தண் தமிழ்க் கிழவர், |
|
முரசு முழங்கு தானை மூவருள்ளும், |
|
5 |
அரசு எனப்படுவது நினதே, பெரும! |
அலங்குகதிர்க் கனலி நால்வயின் தோன்றினும், |
|
இலங்குகதிர் வெள்ளி தென் புலம் படரினும், |
|
அம் தண் காவிரி வந்து கவர்பு ஊட்ட, |
|
தோடு கொள் வேலின் தோற்றம் போல, |
|
10 |
ஆடு கண் கரும்பின் வெண் பூ நுடங்கும் |
நாடு எனப்படுவது நினதே அத்தை; ஆங்க |
|
நாடு கெழு செல்வத்துப் பீடு கெழு வேந்தே! |
|
நினவ கூறுவல்; எனவ கேண்மதி! |
|
அறம் புரிந்தன்ன செங்கோல் நாட்டத்து |
|
15 |
முறை வேண்டு பொழுதில் பதன் எளியோர் ஈண்டு |
உறை வேண்டு பொழுதில் பெயல் பெற்றோரே; |
|
ஞாயிறு சுமந்த கோடு திரள் கொண்மூ |
|
மாக விசும்பின் நடுவு நின்றாங்கு, |
|
கண் பொர விளங்கு நின் விண் பொரு வியன்குடை |
|
20 |
வெயில் மறைக் கொண்டன்றோ? அன்றே; வருந்திய |
குடி மறைப்பதுவே; கூர்வேல் வளவ! |
|
வெளிற்றுப் பனந் துணியின் வீற்றுவீற்றுக் கிடப்ப, |
|
களிற்றுக் கணம் பொருத கண் அகன் பறந்தலை, |
|
வருபடை தாங்கி, பெயர் புறத்து ஆர்த்து, |
|
25 |
பொருபடை தரூஉம் கொற்றமும் உழுபடை |
ஊன்று சால் மருங்கின் ஈன்றதன் பயனே; |
|
மாரி பொய்ப்பினும், வாரி குன்றினும், |
|
இயற்கை அல்லன செயற்கையில் தோன்றினும், |
|
காவலர்ப் பழிக்கும், இக் கண் அகல் ஞாலம்; |
|
30 |
அது நற்கு அறிந்தனைஆயின், நீயும் |
நொதுமலாளர் பொதுமொழி கொள்ளாது, |
|
பகடு புறந்தருநர் பாரம் ஓம்பி, |
|
குடி புறந்தருகுவை ஆயின், நின் |
|
அடி புறந்தருகுவர், அடங்காதோரே. |
|
திணை அது; துறை செவியறிவுறூஉ.
| |
அவனை வெள்ளைக்குடி நாகனார் பாடி, பழஞ் செய்க்கடன் வீடுகொண்டது.
|
40 |
நீயே, பிறர் ஓம்புறு மற மன் எயில் |
|
ஓம்பாது கடந்து அட்டு, அவர் |
|
முடி புனைந்த பசும் பொன் நின் |
|
அடி பொலியக் கழல் தைஇய |
|
5 |
வல்லாளனை; வய வேந்தே! |
யாமே, நின், இகழ் பாடுவோர் எருத்து அடங்க, |
|
புகழ் பாடுவோர் பொலிவு தோன்ற, |
|
இன்று கண்டாங்குக் காண்குவம் என்றும் |
|
இன்சொல் எண் பதத்தை ஆகுமதி பெரும! |
|
10 |
ஒரு பிடி படியும் சீறிடம் |
எழு களிறு புரக்கும் நாடு கிழவோயே! |
|
திணை அது; துறை செவியறிவுறூஉ.
| |
அவனை ஆவூர் முலங்கிழார் பாடியது.
|
55 |
ஓங்கு மலைப் பெரு வில் பாம்பு ஞாண் கொளீஇ, |
|
ஒரு கணை கொண்டு மூஎயில் உடற்றி, |
|
பெரு விறல் அமரர்க்கு வென்றி தந்த |
|
கறை மிடற்று அண்ணல் காமர் சென்னிப் |
|
5 |
பிறை நுதல் விளங்கும் ஒரு கண் போல, |
வேந்து மேம்பட்ட பூந் தார் மாற! |
|
கடுஞ் சினத்த கொல் களிறும்; கதழ் பரிய கலி மாவும், |
|
நெடுங் கொடிய நிமிர் தேரும், நெஞ்சு உடைய புகல் மறவரும், என |
|
நான்குடன் மாண்டதுஆயினும், மாண்ட |
|
10 |
அற நெறி முதற்றே, அரசின் கொற்றம்; |
அதனால், 'நமர்' எனக் கோல் கோடாது, |
|
'பிறர்' எனக் குணம் கொல்லாது, |
|
ஞாயிற்று அன்ன வெந் திறல் ஆண்மையும், |
|
திங்கள் அன்ன தண் பெருஞ் சாயலும், |
|
15 |
வானத்து அன்ன வண்மையும், மூன்றும், |
உடையை ஆகி, இல்லோர் கையற, |
|
நீ நீடு வாழிய நெடுந்தகை! தாழ் நீர் |
|
வெண் தலைப் புணரி அலைக்கும் செந்தில் |
|
நெடு வேள் நிலைஇய காமர் வியன் துறை, |
|
20 |
கடு வளி தொகுப்ப ஈண்டிய |
வடு ஆழ் எக்கர் மணலினும் பலவே! |
|
திணை பாடாண் திணை; துறை செவியறிவுறூஉ.
| |
பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனை மதுரை மருதன் இளநாகனார் பாடியது.
|
184 |
காய் நெல் அறுத்துக் கவளம் கொளினே, |
|
மா நிறைவு இல்லதும், பல் நாட்கு ஆகும்; |
|
நூறு செறு ஆயினும், தமித்துப் புக்கு உணினே, |
|
வாய் புகுவதனினும் கால் பெரிது கெடுக்கும்; |
|
5 |
அறிவுடை வேந்தன் நெறி அறிந்து கொளினே, |
கோடி யாத்து, நாடு பெரிது நந்தும்; |
|
மெல்லியன் கிழவன் ஆகி, வைகலும் |
|
வரிசை அறியாக் கல்லென் சுற்றமொடு, |
|
பரிவு தப எடுக்கும் பிண்டம் நச்சின், |
|
10 |
யானை புக்க புலம் போல, |
தானும் உண்ணான், உலகமும் கெடுமே. |
|
திணை பாடாண் திணை; துறை செவியறிவுறூஉ.
| |
பாண்டியன் அறிவுடை நம்பியுழைச் சென்ற பிசிராந்தையார் பாடியது.
|