முகப்பு | ![]() |
துணைவஞ்சி |
36 |
அடுநை ஆயினும், விடுநை ஆயினும், |
|
நீ அளந்து அறிதி, நின் புரைமை வார் கோல், |
|
செறி அரிச் சிலம்பின், குறுந் தொடி மகளிர் |
|
பொலம் செய் கழங்கின் தெற்றி ஆடும் |
|
5 |
தண் ஆன்பொருநை வெண் மணல் சிதைய, |
கருங் கைக் கொல்லன் அரம் செய் அவ் வாய் |
|
நெடுங் கை நவியம் பாய்தலின், நிலை அழிந்து, |
|
வீ கமழ் நெடுஞ் சினை புலம்ப, காவுதொறும் |
|
கடி மரம் தடியும் ஓசை தன் ஊர் |
|
10 |
நெடு மதில் வரைப்பின் கடி மனை இயம்ப, |
ஆங்கு இனிது இருந்த வேந்தனொடு, ஈங்கு, நின் |
|
சிலைத் தார் முரசம் கறங்க, |
|
மலைத்தனை என்பது நாணுத் தகவு உடைத்தே. |
|
திணை வஞ்சி; துறை துணைவஞ்சி.
| |
அவன் கருவூர் முற்றியிருந்தானை ஆலத்தூர் கிழார் பாடியது.
|
45 |
இரும் பனை வெண் தோடு மலைந்தோன்அல்லன்; |
|
கருஞ் சினை வேம்பின் தெரியலோன்அல்லன்; |
|
நின்ன கண்ணியும் ஆர் மிடைந்தன்றே; நின்னொடு |
|
பொருவோன் கண்ணியும் ஆர் மிடைந்தன்றே; |
|
5 |
ஒருவீர் தோற்பினும், தோற்ப நும் குடியே; |
இருவீர் வேறல் இயற்கையும் அன்றே; அதனால், |
|
குடிப்பொருள் அன்று, நும் செய்தி; கொடித் தேர் |
|
நும் ஓர்அன்ன வேந்தர்க்கு |
|
மெய்ம் மலி உவகை செய்யும்; இவ் இகலே. |
|
திணை வஞ்சி; துறை துணைவஞ்சி.
| |
சோழன் நலங்கிள்ளி உறையூர் முற்றி இருந்தானையும், அடைத்திருந்த நெடுங் கிள்ளியையும், கோவூர் கிழார் பாடியது.
|
46 |
நீயே, புறவின் அல்லல் அன்றியும், பிறவும் |
|
இடுக்கண் பலவும் விடுத்தோன் மருகனை, |
|
இவரே, புலன் உழுது உண்மார் புன்கண் அஞ்சி, |
|
தமது பகுத்து உண்ணும் தண் நிழல் வாழ்நர்; |
|
5 |
களிறு கண்டு அழூஉம் அழாஅல் மறந்த |
புன் தலைச் சிறாஅர்; மன்று மருண்டு நோக்கி, |
|
விருந்தின் புன்கண் நோவுடையர்; |
|
கேட்டனைஆயின், நீ வேட்டது செய்ம்மே! |
|
திணையும் துறையும் அவை.
| |
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் மலையமான் மக்களை யானைக்கு இடுவுழி, கோவூர் கிழார் பாடி, உய்யக் கொண்டது.
|
47 |
வள்ளியோர்ப் படர்ந்து, புள்ளின் போகி, |
|
'நெடிய' என்னாது சுரம் பல கடந்து |
|
வடியா நாவின் வல்லாங்குப் பாடி, |
|
பெற்றது மகிழ்ந்து, சுற்றம் அருத்தி, |
|
5 |
ஓம்பாது உண்டு, கூம்பாது வீசி, |
வரிசைக்கு வருந்தும் இப் பரிசில் வாழ்க்கை |
|
பிறர்க்குத் தீது அறிந்தன்றோ? இன்றே; திறப்பட |
|
நண்ணார் நாண, அண்ணாந்து ஏகி, |
|
ஆங்கு இனிது ஒழுகின் அல்லது, ஓங்கு புகழ் |
|
10 |
மண் ஆள் செல்வம் எய்திய |
நும் ஓரன்ன செம்மலும் உடைத்தே. |
|
திணையும் துறையும் அவை.
| |
சோழன் நளங்கிள்ளியுழைநின்று உறையூர் புகுந்த இளந்தத்தன் என்னும் புலவனை, காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளி, 'ஒற்று வந்தான்' என்று கொல்லப் புக்குழி, கோவூர் கிழார் பாடி, உய்யக்கொண்டது.
|
57 |
வல்லார் ஆயினும், வல்லுநர் ஆயினும், |
|
புகழ்தல் உற்றோர்க்கு மாயோன் அன்ன, |
|
உரைசால் சிறப்பின் புகழ்சால் மாற! |
|
நின் ஒன்று கூறுவது உடையேன்: என் எனின், |
|
5 |
நீயே, பிறர் நாடு கொள்ளும்காலை, அவர் நாட்டு |
இறங்கு கதிர்க் கழனி நின் இளையரும் கவர்க; |
|
நனந் தலைப் பேர் ஊர் எரியும் நைக்க; |
|
மின்னு நிமிர்ந்தன்ன நின் ஒளிறு இலங்கு நெடு வேல் |
|
ஒன்னார்ச் செகுப்பினும் செகுக்க; என்னதூஉம் |
|
10 |
கடிமரம் தடிதல் ஓம்பு நின் |
நெடு நல் யானைக்குக் கந்து ஆற்றாவே. |
|
திணை வஞ்சி; துறை துணை வஞ்சி.
| |
அவனைக் காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார் பாடியது.
|
213 |
மண்டு அமர் அட்ட மதனுடை நோன் தாள், |
|
வெண்குடை விளக்கும், விறல் கெழு வேந்தே! |
|
பொங்கு நீர் உடுத்த இம் மலர் தலை உலகத்து, |
|
நின்தலை வந்த இருவரை நினைப்பின், |
|
5 |
தொன்று உறை துப்பின் நின் பகைஞரும் அல்லர், |
அமர் வெங் காட்சியொடு மாறு எதிர்பு எழுந்தவர்; |
|
நினையும்காலை, நீயும் மற்றவர்க்கு |
|
அனையை அல்லை; அடு மான் தோன்றல்! |
|
பரந்து படு நல் இசை எய்தி, மற்று நீ |
|
10 |
உயர்ந்தோர் உலகம் எய்தி; பின்னும் |
ஒழித்த தாயம் அவர்க்கு உரித்தன்றே: |
|
அதனால், அன்னது ஆதலும் அறிவோய்! நன்றும் |
|
இன்னும் கேண்மதி, இசை வெய்யோயே! |
|
நின்ற துப்பொடு நிற் குறித்து எழுந்த |
|
15 |
எண் இல் காட்சி இளையோர் தோற்பின், |
நின் பெருஞ் செல்வம் யார்க்கு எஞ்சுவையே? |
|
அமர் வெஞ் செல்வ! நீ அவர்க்கு உலையின், |
|
இகழுநர் உவப்ப, பழி எஞ்சுவையே; |
|
அதனால், ஒழிகதில் அத்தை, நின் மறனே! வல் விரைந்து |
|
20 |
எழுமதி; வாழ்க, நின் உள்ளம்! அழிந்தோர்க்கு |
ஏமம் ஆகும் நின் தாள் நிழல் மயங்காது |
|
செய்தல் வேண்டுமால், நன்றே வானோர் |
|
அரும் பெறல் உலகத்து ஆன்றவர் |
|
விதும்புறு விருப்பொடு விருந்து எதிர் கொளற்கே. |
|
திணை வஞ்சி; துறை துணைவஞ்சி.
| |
அவன் மக்கள்மேல் சென்றானைப் புல்லாற்றூர் எயிற்றியனார் பாடியது.
|