முகப்பு | ![]() |
நூழிலாட்டு |
309 |
இரும்பு முகம் சிதைய நூறி, ஒன்னார் |
|
இருஞ் சமம் கடத்தல் ஏனோர்க்கும் எளிதே; |
|
நல் அரா உறையும் புற்றம் போலவும், |
|
கொல் ஏறு திரிதரு மன்றம் போலவும், |
|
5 |
மாற்று அருந் துப்பின் மாற்றோர், 'பாசறை |
உளன்' என வெரூஉம் ஓர் ஒளி |
|
வலன் உயர் நெடு வேல் என்னைகண்ணதுவே. |
|
திணை தும்பை; துறை நூழிலாட்டு.
| |
மதுரை இளங்கண்ணிக் கௌசிகனார் பாடியது.
|
310 |
பால் கொண்டு மடுப்பவும் உண்ணான் ஆகலின், |
|
செறாஅது ஓச்சிய சிறு கோல் அஞ்சியொடு, |
|
உயவொடு வருந்தும் மன்னே! இனியே |
|
புகர் நிறம் கொண்ட களிறு அட்டு ஆனான், |
|
5 |
முன்நாள் வீழ்ந்த உரவோர் மகனே, |
உன்னிலன் என்னும், புண் ஒன்று அம்பு |
|
மான் உளை அன்ன குடுமித் |
|
தோல் மிசைக் கிடந்த புல் அணலோனே. |
|
திணையும் துறையும் அவை.
| |
பொன்முடியார் பாடியது.
|