முகப்பு | ![]() |
பாண் பாட்டு |
260 |
வளரத் தொடினும், வௌவுபு திரிந்து, |
|
விளரி உறுதரும் தீம் தொடை நினையா, |
|
தளரும் நெஞ்சம் தலைஇ, மனையோள் |
|
உளரும் கூந்தல் நோக்கி, களர |
|
5 |
கள்ளி நீழல் கடவுள் வாழ்த்தி, |
பசி படு மருங்குலை, கசிபு, கைதொழாஅ, |
|
'காணலென்கொல்?' என வினவினை வரூஉம் |
|
பாண! கேண்மதி, யாணரது நிலையே: |
|
புரவுத் தொடுத்து உண்குவைஆயினும், இரவு எழுந்து |
|
10 |
எவ்வம் கொள்குவைஆயினும், இரண்டும், |
கையுள் போலும்; கடிது அண்மையவே |
|
முன் ஊர்ப் பூசலின் தோன்றி, தன் ஊர் |
|
நெடு நிரை தழீஇய மீளியாளர் |
|
விடு கணை நீத்தம் துடி புணை ஆக, |
|
15 |
வென்றி தந்து, கொன்று கோள் விடுத்து, |
வையகம் புலம்ப வளைஇய பாம்பின் |
|
வை எயிற்று உய்ந்த மதியின், மறவர் |
|
கையகத்து உய்ந்த கன்றுடைப் பல் ஆன் |
|
நிரையொடு வந்த உரையன் ஆகி, |
|
20 |
உரி களை அரவம் மான, தானே |
அரிது செல் உலகில் சென்றனன்; உடம்பே, |
|
கானச் சிற்றியாற்று அருங் கரைக் கால் உற்று, |
|
கம்பமொடு துளங்கிய இலக்கம் போல, |
|
அம்பொடு துளங்கி ஆண்டு ஒழிந்தன்றே; |
|
25 |
உயர் இசை வெறுப்பத் தோன்றிய பெயரே, |
மடம்சால் மஞ்ஞை அணி மயிர் சூட்டி, |
|
இடம் பிறர் கொள்ளாச் சிறு வழி, |
|
படம் செய் பந்தர்க் கல் மிசையதுவே. |
|
திணை அது; துறை கையறு நிலை; பாண்பாட்டும் ஆம்.
| |
......................வடமோதங் கிழார் பாடியது.
|
284 |
'வருகதில் வல்லே; வருகதில் வல்' என, |
|
வேந்து விடு விழுத் தூது ஆங்கு ஆங்கு இசைப்ப, |
|
நூலரி மாலை சூடி, காலின், |
|
தமியன் வந்த மூதிலாளன் |
|
5 |
அருஞ் சமம் தாங்கி, முன் நின்று எறிந்த |
ஒரு கை இரும் பிணத்து எயிறு மிறையாகத் |
|
திரிந்த வாய் வாள் திருத்தா, |
|
தனக்கு இரிந்தானைப் பெயர் புறம் நகுமே. |
|
திணையும் துறையும் அவை.
| |
ஓரம்போகியார் பாடியது.
|
311 |
களர்ப் படு கூவல் தோண்டி, நாளும், |
|
புலைத்தி கழீஇய தூ வெள் அறுவை. |
|
தாது எரு மறுகின் மாசுண இருந்து, |
|
பலர் குறை செய்த மலர் தார் அண்ணற்கு |
|
5 |
ஒருவரும் இல்லை மாதோ, செருவத்து; |
சிறப்புடைச் செங் கண் புகைய, ஓர் |
|
தோல் கொண்டு மறைக்கும் சால்பு உடையோனே. |
|
திணை அது; துறை பாண்பாட்டு.
| |
ஒளவையார் பாடியது.
|