முகப்பு | ![]() |
பாணாற்றுப்படை |
68 |
உடும்பு உரித்தன்ன என்பு எழு மருங்கின் |
|
கடும்பின் கடும் பசி களையுநர்க் காணாது, |
|
சில் செவித்து ஆகிய கேள்வி நொந்து நொந்து, |
|
ஈங்கு எவன் செய்தியோ? பாண! 'பூண் சுமந்து, |
|
5 |
அம் பகட்டு எழிலிய செம் பொறி ஆகத்து |
மென்மையின் மகளிர்க்கு வணங்கி, வன்மையின் |
|
ஆடவர்ப் பிணிக்கும் பீடு கெழு நெடுந் தகை, |
|
புனிறு தீர் குழவிக்கு இலிற்று முலை போலச் |
|
சுரந்த காவிரி மரம் கொல் மலி நீர் |
|
10 |
மன்பதை புரக்கும் நல் நாட்டுப் பொருநன், |
உட்பகை ஒரு திறம் பட்டென, புட் பகைக்கு |
|
ஏவான் ஆகலின், சாவேம் யாம்' என, |
|
நீங்கா மறவர் வீங்கு தோள் புடைப்ப, |
|
தணி பறை அறையும் அணி கொள் தேர் வழி, |
|
15 |
கடுங் கள் பருகுநர் நடுங்கு கை உகுத்த |
நறுஞ் சேறு ஆடிய வறுந் தலை யானை |
|
நெடு நகர் வரைப்பில் படு முழா ஓர்க்கும் |
|
உறந்தையோனே குருசில்; |
|
பிறன் கடை மறப்ப, நல்குவன், செலினே. |
|
திணை அது; துறை பாணாற்றுப்படை.
| |
சோழன் நலங்கிள்ளியைக் கோவூர் கிழார் பாடியது.
|
69 |
கையது, கடன் நிறை யாழே; மெய்யது, |
|
புரவலர் இன்மையின் பசியே; அரையது, |
|
வேற்று இழை நுழைந்த வேர் நனை சிதாஅர் |
|
ஓம்பி உடுத்த உயவல் பாண! |
|
5 |
பூட்கை இல்லோன் யாக்கை போலப் |
பெரும் புல்லென்ற இரும் பேர் ஒக்கலை; |
|
வையகம் முழுதுடன் வளைஇ, பையென |
|
என்னை வினவுதி ஆயின், மன்னர் |
|
அடு களிறு உயவும் கொடி கொள் பாசறை, |
|
10 |
குருதிப் பரப்பின் கோட்டு மா தொலைச்சி, |
புலாக் களம் செய்த கலாஅத் தானையன் |
|
பிறங்கு நிலை மாடத்து உறந்தையோனே; |
|
பொருநர்க்கு ஓக்கிய வேலன், ஒரு நிலைப் |
|
பகைப் புலம் படர்தலும் உரியன்; தகைத் தார் |
|
15 |
ஒள் எரி புரையும் உரு கெழு பசும் பூண் |
கிள்ளி வளவற் படர்குவை ஆயின், |
|
நெடுங் கடை நிற்றலும் இலையே; கடும் பகல் |
|
தேர் வீசு இருக்கை ஆர நோக்கி, |
|
நீ அவற் கண்ட பின்றை, பூவின் |
|
20 |
ஆடு வண்டு இமிராத் தாமரை |
சூடாயாதல் அதனினும் இலையே. |
|
திணையும் துறையும் அவை.
| |
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை ஆலத்தூர் கிழார் பாடியது.
|
70 |
தேஎம் தீம் தொடைச் சீறியாழ்ப் பாண! |
|
'கயத்து வாழ் யாமை காழ் கோத்தன்ன |
|
நுண் கோல் தகைத்த தெண் கண் மாக் கிணை |
|
இனிய காண்க; இவண் தணிக' எனக் கூறி; |
|
5 |
வினவல் ஆனா முது வாய் இரவல! |
தைஇத் திங்கள் தண் கயம் போல, |
|
கொளக்கொளக் குறைபடாக் கூழுடை வியல் நகர், |
|
அடுதீ அல்லது சுடுதீ அறியாது; |
|
இரு மருந்து விளைக்கும் நல் நாட்டுப் பொருநன், |
|
10 |
கிள்ளி வளவன் நல் இசை உள்ளி, |
நாற்ற நாட்டத்து அறு கால் பறவை |
|
சிறு வெள் ஆம்பல் ஞாங்கர் ஊதும் |
|
கை வள் ஈகைப் பண்ணன் சிறுகுடிப் |
|
பாதிரி கமழும் ஓதி, ஒள் நுதல், |
|
15 |
இன் நகை விறலியொடு மென்மெல இயலிச் |
செல்வைஆயின், செல்வை ஆகுவை; |
|
விறகு ஒய் மாக்கள் பொன் பெற்றன்னதோர் |
|
தலைப்பாடு அன்று, அவன் ஈகை; |
|
நினைக்க வேண்டா; வாழ்க, அவன் தாளே! |
|
திணையும் துறையும் அவை.
| |
அவனைக் கோவூர் கிழார் பாடியது.
|
138 |
ஆனினம் கலித்த அதர் பல கடந்து, |
|
மானினம் கலித்த மலை பின் ஒழிய, |
|
மீனினம் கலித்த துறை பல நீந்தி, |
|
உள்ளி வந்த, வள் உயிர்ச் சீறியாழ், |
|
5 |
சிதாஅர் உடுக்கை, முதாஅரிப் பாண! |
நீயே, பேர் எண்ணலையே; நின் இறை, |
|
'மாறி வா' என மொழியலன் மாதோ; |
|
ஒலி இருங் கதுப்பின் ஆயிழை கணவன் |
|
கிளி மரீஇய வியன் புனத்து |
|
10 |
மரன் அணி பெருங் குரல் அனையன் ஆதலின், |
நின்னை வருதல் அறிந்தனர் யாரே? |
|
திணை அது; துறை பாணாற்றுப்படை.
| |
அவனை மருதன் இளநாகனார் பாடியது.
|
141 |
'பாணன் சூடிய பசும் பொன் தாமரை |
|
மாண் இழை விறலி மாலையொடு விளங்க, |
|
கடும் பரி நெடுந் தேர் பூட்டு விட்டு அசைஇ, |
|
ஊரீர் போலச் சுரத்திடை இருந்தனிர்! |
|
5 |
யாரீரோ?' என, வினவல் ஆனா, |
காரென் ஒக்கல், கடும் பசி, இரவல! |
|
வென் வேல் அண்ணல் காணா ஊங்கே, |
|
நின்னினும் புல்லியேம் மன்னே; இனியே, |
|
இன்னேம் ஆயினேம் மன்னே; என்றும் |
|
10 |
உடாஅ, போரா ஆகுதல் அறிந்தும், |
படாஅம் மஞ்ஞைக்கு ஈத்த எம் கோ, |
|
கடாஅ யானைக் கலி மான் பேகன், |
|
'எத் துணை ஆயினும் ஈத்தல் நன்று' என, |
|
மறுமை நோக்கின்றோ அன்றே, |
|
15 |
பிறர், வறுமை நோக்கின்று, அவன் கை வண்மையே. |
திணை அது; துறை பாணாற்றுப்படை; புலவராற்றுப்படையும் ஆம்.
| |
வையாவிக் கோப்பெரும் பேகனைப் பரணர் பாடியது.
|
155 |
வணர் கோட்டுச் சீறியாழ் வாடுபுடைத் தழீஇ, |
|
'உணர்வோர் யார், என் இடும்பை தீர்க்க?' என, |
|
கிளக்கும், பாண! கேள், இனி நயத்தின், |
|
பாழ் ஊர் நெருஞ்சிப் பசலை வான் பூ |
|
5 |
ஏர்தரு சுடரின் எதிர்கொண்டாஅங்கு, |
இலம்படு புலவர் மண்டை விளங்கு புகழ்க் |
|
கொண் பெருங் கானத்துக் கிழவன் |
|
தண் தார் அகலம் நோக்கின, மலர்ந்தே. |
|
திணை அது; துறை பாணாற்றுப்படை.
| |
அவனை அவர் பாடியது.
|
180 |
நிரப்பாது கொடுக்கும் செல்வமும் இலனே; |
|
'இல்' என மறுக்கும் சிறுமையும் இலனே; |
|
இறை உறு விழுமம் தாங்கி, அமரகத்து |
|
இரும்பு சுவைக் கொண்ட விழுப்புண் நோய் தீர்ந்து, |
|
5 |
மருந்து கொள் மரத்தின் வாள் வடு மயங்கி, |
வடு இன்று வடிந்த யாக்கையன், கொடை எதிர்ந்து, |
|
ஈர்ந்தையோனே, பாண் பசிப் பகைஞன்; |
|
இன்மை தீர வேண்டின், எம்மொடு |
|
நீயும் வம்மோ? முது வாய் இரவல! |
|
10 |
யாம் தன் இரக்கும்காலை, தான் எம் |
உண்ணா மருங்குல் காட்டி, தன் ஊர்க் |
|
கருங் கைக் கொல்லனை இரக்கும், |
|
'திருந்து இலை நெடு வேல் வடித்திசின்' எனவே. |
|
திணையும் துறையும் அவை; துறை பாணாற்றுப் படையும் ஆம்.
| |
ஈர்ந்தூர் கிழான் தோயன் மாறனைக் கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார் பாடியது.
|