முகப்பு | ![]() |
புலவராற்றுப்படை |
48 |
கோதை மார்பின் கோதையானும், |
|
கோதையைப் புணர்ந்தோர் கோதையானும், |
|
மாக் கழி மலர்ந்த நெய்தலானும், |
|
கள் நாறும்மே, கானலம் தொண்டி; |
|
5 |
அஃது எம் ஊரே; அவன் எம் இறைவன்; |
அன்னோற் படர்தியாயின், நீயும் |
|
எம்மும் உள்ளுமோ முது வாய் இரவல! |
|
'அமர் மேம்படூஉம் காலை, நின் |
|
புகழ் மேம்படுநனைக் கண்டனம்' எனவே. |
|
திணை பாடாண் திணை; துறை புலவராற்றுப் படை.
| |
சேரமான் கோக்கோதை மார்பனைப் பொய்கையார் பாடியது.
|
49 |
நாடன் என்கோ? ஊரன் என்கோ? |
|
பாடு இமிழ் பனிக் கடல் சேர்ப்பன் என்கோ? |
|
யாங்கனம் மொழிகோ, ஓங்கு வாள் கோதையை? |
|
புனவர் தட்டை புடைப்பின், அயலது |
|
5 |
இறங்கு கதிர் அலமரு கழனியும், |
பிறங்கு நீர்ச் சேர்ப்பினும், புள் ஒருங்கு எழுமே! |
|
திணையும் துறையும் அவை; துறை இயன்மொழியும் ஆம்.
| |
அவனை அவர் பாடியது.
|
141 |
'பாணன் சூடிய பசும் பொன் தாமரை |
|
மாண் இழை விறலி மாலையொடு விளங்க, |
|
கடும் பரி நெடுந் தேர் பூட்டு விட்டு அசைஇ, |
|
ஊரீர் போலச் சுரத்திடை இருந்தனிர்! |
|
5 |
யாரீரோ?' என, வினவல் ஆனா, |
காரென் ஒக்கல், கடும் பசி, இரவல! |
|
வென் வேல் அண்ணல் காணா ஊங்கே, |
|
நின்னினும் புல்லியேம் மன்னே; இனியே, |
|
இன்னேம் ஆயினேம் மன்னே; என்றும் |
|
10 |
உடாஅ, போரா ஆகுதல் அறிந்தும், |
படாஅம் மஞ்ஞைக்கு ஈத்த எம் கோ, |
|
கடாஅ யானைக் கலி மான் பேகன், |
|
'எத் துணை ஆயினும் ஈத்தல் நன்று' என, |
|
மறுமை நோக்கின்றோ அன்றே, |
|
15 |
பிறர், வறுமை நோக்கின்று, அவன் கை வண்மையே. |
திணை அது; துறை பாணாற்றுப்படை; புலவராற்றுப்படையும் ஆம்.
| |
வையாவிக் கோப்பெரும் பேகனைப் பரணர் பாடியது.
|