மகட் பாற் காஞ்சி

336
வேட்ட வேந்தனும் வெஞ் சினத்தினனே;
கடவன கழிப்பு இவள் தந்தையும் செய்யான்;
ஒளிறு முகத்து ஏந்திய வீங்கு தொடி மருப்பின்
களிறும் கடிமரம் சேரா; சேர்ந்த
5
ஒளிறு வேல் மறவரும் வாய் மூழ்த்தனரே;
இயவரும் அறியாப் பல் இயம் கறங்க,
அன்னோ, பெரும் பேதுற்றன்று, இவ் அருங் கடி மூதூர்;
அறன் இலள் மன்ற தானே விறல் மலை
வேங்கை வெற்பின் விரிந்த கோங்கின்
10
முகை வனப்பு ஏந்திய முற்றா இளமுலைத்
தகை வளர்த்து எடுத்த நகையொடு,
பகை வளர்த்திருந்த இப் பண்பு இல் தாயே.

திணை காஞ்சி; துறை மகட்பாற் காஞ்சி.
பரணர் பாடியது.

337
ஆர்கலி யினனே, சோணாட்டு அண்ணல்;
கவி கை மண் ஆள் செல்வர் ஆயினும்,
வாள் வலத்து ஒழியப் பாடிச் சென்றாஅர்,
வரல்தோறு அகம் மலர,
5
ஈதல் ஆனா விலங்கு தொடித் தடக் கைப்
பாரி பறம்பின் பனிச் சுனை போல,
காண்டற்கு அரியள் ஆகி, மாண்ட
பெண்மை நிறைந்த பொலிவொடு, மண்ணிய
துகில் விரி கடுப்ப நுடங்கி, தண்ணென
10
அகில் ஆர் நறும் புகை ஐது சென்று அடங்கிய
கபில நெடு நகர்க் கமழும் நாற்றமொடு,
மனைச் செறிந்தனளே, வாணுதல்; இனியே,
அற்றன்றுஆகலின், தெற்றெனப் போற்றி,
காய் நெல் கவளம் தீற்றி, காவுதொறும்
15
கடுங்கண் யானை காப்பனர் அன்றி,
வருதல் ஆனார் வேந்தர்; தன்னையர்
பொரு சமம் கடந்த உரு கெழு நெடு வேல்
குருதி பற்றிய வெருவரு தலையர்;
மற்று இவர் மறனும் இற்றால்; தெற்றென
20
யார் ஆகுவர்கொல் தாமே நேரிழை
உருத்த பல சுணங்கு அணிந்த
மருப்பு இள வன முலை ஞெமுக்குவோரே?

திணையும் துறையும் அவை.
கபிலர் பாடியது.

338
ஏர் பரந்த வயல், நீர் பரந்த செறுவின்,
நெல் மலிந்த மனை, பொன் மலிந்த மறுகின்,
படு வண்டு ஆர்க்கும் பல் மலர்க் காவின்,
நெடு வேள் ஆதன் போந்தை அன்ன,
5
பெருஞ் சீர் அருங் கொண்டியளே; கருஞ் சினை
வேம்பும் ஆரும் போந்தையும் மூன்றும்
மலைந்த சென்னியர், அணிந்த வில்லர்,
கொற்ற வேந்தர் வரினும், தன் தக
வணங்கார்க்கு ஈகுவன் அல்லன் வண் தோட்டுப்
10
பிணங்கு கதிர்க் கழனி நாப்பண், ஏமுற்று
உணங்கு கலன் ஆழியின் தோன்றும்
ஓர் எயில் மன்னன் ஒரு மட மகளே.

திணையும் துறையும் அவை.
குன்றூர் கிழார் மகனார் பாடியது.

339
வியன் புலம் படர்ந்த பல் ஆ நெடு ஏறு
மடலை மாண் நிழல் அசைவிட, கோவலர்
வீ ததை முல்லைப் பூப் பறிக்குந்து;
குறுங் கோல் எறிந்த நெடுஞ் செவிக் குறு முயல்
5
நெடு நீர்ப் பரப்பின் வாளையொடு உகளுந்து;
தொடலை அல்குல் தொடித் தோள் மகளிர்
கடல் ஆடிக் கயம் பாய்ந்து,
கழி நெய்தல் பூக்குறூஉந்து;
பைந் தழை துயல்வரும் செறு விறற..............
10
............................................................................லத்தி
வளர வேண்டும், அவளே, என்றும்
ஆர் அமர் உழப்பதும் அமரியளாகி,
முறம் செவி யானை வேந்தர்
மறம் கெழு நெஞ்சம் கொண்டு ஒளித்தோளே.

திணையும் துறையும் அவை.
..............................................................

340
அணித் தழை நுடங்க ஓடி, மணிப் பொறிக்
குரல் அம் குன்றி கொள்ளும் இளையோள்,
மா மகள்
....................... ல் என வினவுதி, கேள், நீ:
5
எடுப்பவெ...,..................................................
..........................மைந்தர் தந்தை
இரும் பனை அன்ன பெருங் கை யானை
கரந்தை அம் செறுவின் பெயர்க்கும்
பெருந் தகை மன்னர்க்கு வரைந்திருந்தனனே.

திணையும் துறையும் அவை.
அ............................... பாடியது.

341
வேந்து குறையுறவும் கொடாஅன், ஏந்து கோட்டு
அம் பூந் தொடலை அணித் தழை அல்குல்,
செம் பொறிச் சிலம்பின் இளையோள் தந்தை,
எழு விட்டு அமைத்த திண் நிலைக் கதவின்
5
அரை மண் இஞ்சி நாட் கொடி நுடங்கும்
..........................................................................................................
புலிக் கணத்து அன்ன கடுங் கண் சுற்றமொடு,
மாற்றம் மாறான், மறலிய சினத்தன்,
'பூக் கோள்' என ஏஎய், கயம் புக்கனனே;
10
விளங்குஇழைப் பொலிந்த வேளா மெல் இயல்,
சுணங்கு அணி வன முலை, அவளொடு நாளை
மணம் புகு வைகல் ஆகுதல் ஒன்றோ
ஆர் அமர் உழக்கிய மறம் கிளர் முன்பின்,
நீள் இலை எஃகம் மறுத்த உடம்பொடு
15
வாரா உலகம் புகுதல் ஒன்று எனப்
படை தொட்டனனே, குருசில்; ஆயிடைக்
களிறு பொரக் கலங்கிய தண் கயம் போல,
பெருங் கவின் இழப்பது கொல்லோ,
மென் புனல் வைப்பின் இத் தண் பணை ஊரே!

திணையும் துறையும் அவை.
பரணர் பாடியது.

342
'கானக் காக்கைக் கலிச் சிறகு ஏய்க்கும்
மயிலைக் கண்ணி, பெருந் தோள் குறுமகள்,
ஏனோர் மகள்கொல் இவள்?' என விதுப்புற்று,
என்னொடு வினவும் வென் வேல் நெடுந்தகை!
5
திரு நயத்தக்க பண்பின் இவள் நலனே
பொருநர்க்கு அல்லது, பிறர்க்கு ஆகாதே;
பைங் கால் கொக்கின் பகு வாய்ப் பிள்ளை
மென் சேற்று அடைகரை மேய்ந்து உண்டதற்பின்,
ஆரல் ஈன்ற ஐயவி முட்டை,
10
கூர் நல் இறவின் பிள்ளையொடு பெறூஉம்,
தண் பணைக் கிழவன் இவள் தந்தையும்; வேந்தரும்
பெறாஅமையின் பேர் அமர் செய்தலின்,
கழி பிணம் பிறங்கு போர்பு அழி களிறு எருதா,
வாள் தக வைகலும் உழக்கும்
15
மாட்சியவர், இவள் தன்னைமாரே.

திணையும் துறையும் அவை.
அரிசில் கிழார் பாடியது.

343
'மீன் நொடுத்து நெல் குவைஇ,
மிசை அம்பியின் மனை மறுக்குந்து,
மனைக் குவைஇய கறி மூடையால்,
கலிச் சும்மைய கரை கலக்குறுந்து;
5
கலம் தந்த பொற் பரிசம்
கழித் தோணியான், கரை சேர்க்குந்து;
மலைத் தாரமும் கடல் தாரமும்
தலைப் பெய்து, வருநர்க்கு ஈயும்
புனல்அம் கள்ளின் பொலந் தார்க் குட்டுவன்
10
முழங்கு கடல் முழவின் முசிறி அன்ன,
நலம்சால் விழுப் பொருள் பணிந்து வந்து கொடுப்பினும்,
புரையர் அல்லோர் வரையலள், இவள்' எனத்
தந்தையும் கொடாஅன் ஆயின் வந்தோர்,
வாய்ப்பட இறுத்த ஏணி ஆயிடை
15
வருந்தின்று கொல்லோ தானே பருந்து உயிர்த்து
இடை மதில் சேக்கும் புரிசை,
படை மயங்கு ஆர் இடை, நெடு நல் ஊரே?

திணையும் துறையும் அவை.
பரணர் பாடியது.

344
செந்நெல் உண்ட பைந் தோட்டு மஞ்ஞை,
செறி வளை மகளிர் ஓப்பலின், பறந்து எழுந்து,
துறை நணி மருதத்து இறுக்கும் ஊரொடு,
நிறைசால் விழுப் பொருள் தருதல் ஒன்றோ
5
புகை படு கூர் எரி பரப்பிப் பகை செய்து,
பண்பு இல் ஆண்மை தருதல் ஒன்றோ
இரண்டினுள் ஒன்று ஆகாமையோ அரிதே,
காஞ்சிப் பனிமுறி ஆரங் கண்ணி..................
கணி மேவந்தவள் அல்குல் அவ் வரியே.

திணையும் துறையும் அவை.
...............அடைநெடுங் கல்வியார் பாடியது.

345
களிறு அணைப்பக் கலங்கின, காஅ,
தேர் ஓடத் துகள் கெழுமின, தெருவு;
மா மறுகலின் மயக்குற்றன, வழி;
கலம் கழாஅலின், துறை கலக்குற்றன;
5
தெறல் மறவர் இறை கூர்தலின்,
பொறை மலிந்து நிலன் நெளிய,
வந்தோர் பலரே, வம்ப வேந்தர்,
பிடி உயிர்ப்பு அன்ன கை கவர் இரும்பின்
ஓவு உறழ் இரும் புறம் காவல் கண்ணி,
10
கருங் கண் கொண்ட நெருங்கல் வெம் முலை,
மையல் நோக்கின், தையலை நயந்தோர்
அளியர் தாமே; இவள் தன்னைமாரே
செல்வம் வேண்டார், செருப் புகல் வேண்டி,
'நிரல் அல்லோர்க்குத் தரலோ இல்' என;
15
கழிப் பிணிப் பலகையர், கதுவாய் வாளர்,
குழாஅம் கொண்ட குருதிஅம் புலவொடு
கழாஅத் தலையர், கருங் கடை நெடு வேல்
இன்ன மறவர்த்துஆயினும் அன்னோ!
என் ஆவது கொல்தானே
20
பன்னல் வேலி இப் பணை நல் ஊரே!

திணையும் துறையும் அவை.
அவனை அவர் பாடியது.

346
பிற ..................... ள பால் என மடுத்தலின்,
ஈன்ற தாயோ வேண்டாள் அல்லள்;
கல்வியென் என்னும், வல் ஆண் சிறாஅன்;
ஒல்வேன்அல்லன், அது வாய் ஆகுதல்
5
அழிந்தோர் அழிய, ஒழிந்தோர் ஒக்கல்
பேணுநர்ப் பெறாஅது விளியும்
புன் தலைப் பெரும் பாழ் செயும், இவள் நலனே.

திணையும் துறையும் அவை.
அண்டர் மகன் குறுவழுதி பாடியது.

347
உண்போன் தான் நறுங் கள்ளின் இடச் சில
நா இடைப் பல் தேர் கோலச் சிவந்த
ஒளிறு ஒள் வாடக் குழைந்த பைந் தும்பை,
எறிந்து இலை முறிந்த கதுவாய் வேலின்,
5
மணம் நாறு மார்பின், மறப் போர் அகுதை,
குண்டு நீர் வரைப்பின், கூடல் அன்ன
குவை இருங்கூந்தல் வரு முலை சேப்ப,
...........................................................................................................
என் ஆவதுகொல் தானே?.....................................
10
விளங்குறு பராரைய ஆயினும், வேந்தர்
வினை நவில் யானை பிணிப்ப,
வேர் துளங்கின, நம் ஊருள் மரனே.

திணையும் துறையும் அவை.
கபிலர் பாடியது.

348
வெண்ணெல் அரிஞர் தண்ணுமை வெரீஇ,
கண் மடல் கொண்ட தீம் தேன் இரிய,
கள் அரிக்கும் குயம், சிறு சில்
மீன் சீவும் பாண் சேரி,
5
வாய்மொழித் தழும்பன் ஊணூர் அன்ன,
குவளை உண்கண் இவளை, தாயே
ஈனாளாயினள்ஆயின், ஆனாது
நிழல்தொறும் நெடுந் தேர் நிற்ப, வயின்தொறும்,
செந் நுதல் யானை பிணிப்ப,
10
வருந்தலமன் எம் பெருந் துறை மரனே!

திணையும் துறையும் அவை.
பரணர் பாடியது.

349
நுதி வேல் கொண்டு நுதல் வியர் துடையா,
கடிய கூறும், வேந்தே; தந்தையும்,
நெடிய அல்லது, பணிந்து மொழியலனே;
இஃது இவர் படிவம்: ஆயின், வை எயிற்று,
5
அரி மதர் மழைக் கண், அம் மா அரிவை,
மரம் படு சிறு தீப் போல,
அணங்கு ஆயினள், தான் பிறந்த ஊர்க்கே.

திணையும் துறையும் அவை.
மதுரை மருதன் இளநாகனார் பாடியது.

350
தூர்ந்த கிடங்கின், சோர்ந்த ஞாயில்,
சிதைந்த இஞ்சி, கதுவாய் மூதூர்
யாங்கு ஆவதுகொல் தானே, தாங்காது?
படு மழை உருமின் இரங்கு முரசின்
5
கடு மான் வேந்தர் காலை வந்து, எம்
நெடு நிலை வாயில் கொட்குவர் மாதோ;
பொருதாது அமைகுவர்அல்லர் போர் உழந்து,
அடு முரண் முன்பின் தன்னையர் ஏந்திய
வடிவேல் எஃகின் சிவந்த உண்கண்,
10
தொடி பிறழ் முன்கை, இளையோள்
அணி நல் ஆகத்து அரும்பிய சுணங்கே.

திணையும் துறையும் அவை.
மதுரை ஓலைக்கடைக் கண்ணம் புகுந்தாராயத்தனார் பாடியது.

351
படு மணி மருங்கின பணைத் தாள் யானையும்,
கொடி நுடங்கு மிசைய தேரும், மாவும்,
படை அமை மறவரொடு, துவன்றிக் கல்லென,
கடல் கண்டன்ன கண் அகன் தானை
5
வென்று எறி முரசின் வேந்தர், என்றும்,
வண் கை எயினன் வாகை அன்ன
இவள் நலம் தாராது அமைகுவர் அல்லர்;
என் ஆவதுகொல் தானே தெண் நீர்ப்
பொய்கை மேய்ந்த செவ் வரி நாரை
10
தேங் கொள் மருதின் பூஞ் சினை முனையின்,
காமரு காஞ்சித் துஞ்சும்
ஏமம்சால் சிறப்பின், இப் பணை நல் ஊரே?

திணையும் துறையும் அவை.
மதுரைப் படைமங்க மன்னியார் பாடியது.

352
தேஎம் கொண்ட வெண் மண்டையான்,
வீ...................................................................கறக்குந்து;
அவல் வகுத்த பசுங் குடையான்,
புதல் முல்லைப் பூப் பறிக்குந்து;
5
ஆம்பல் வள்ளித் தொடிக் கை மகளிர்
குன்று ஏறிப் புனல் பாயின்,
புற வாயால் புனல் வள
............................................................ நொடை நறவின்
மா வண் தித்தன் வெண்ணெல் வேலி
10
உறந்தை அன்ன உரைசால் நன் கலம்
கொடுப்பவும் கொளாஅனெ
.......................ர் தந்த நாகு இள வேங்கையின்,
கதிர்த்து ஒளி திகழும் நுண் பல் சுணங்கின்
மாக் கண் மலர்ந்த முலையள்; தன்னையும்
15
சிறு கோல் உளையும் புரவி ª..................
...................................................................... யமரே.

திணையும் துறையும் அவை.
பரணர் பாடியது.

353
ஆசு இல் கம்மியன் மாசு அறப் புனைந்த
பொலம் செய் பல் காசு அணிந்த அல்குல்,
ஈகைக் கண்ணி இலங்கத் தைஇ,
தருமமொடு இயல்வோள் சாயல் நோக்கி,
5
தவிர்த்த தேரை, விளர்த்த கண்ணை,
வினவல் ஆனா வெல் போர் அண்ணல்!
'யார் மகள்?' என்போய்; கூறக் கேள், இனி:
குன்று கண்டன்ன நிலைப் பல் போர்பு
நாள் கடா அழித்த நனந் தலைக் குப்பை
10
வல் வில் இளையர்க்கு அல்கு பதம் மாற்றாத்
தொல் குடி மன்னன் மகளே; முன்நாள்
கூறி வந்த மா முது வேந்தர்க்கு
.........................................................................................................
............................................. உழக்கிக் குருதி ஓட்டி,
15
கதுவாய் போகிய துதி வாய் எஃகமொடு,
பஞ்சியும் களையாப் புண்ணர்,
அஞ்சுதகவு உடையர், இவள் தன்னைமாரே.

திணையும் துறையும் அவை.
காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார் பாடியது.

354
அரைசு தலைவரினும் அடங்கல் ஆனா
நிரை காழ் எஃகம் நீரின் மூழ்கப்
புரையோர் சேர்ந்தென, தந்தையும் பெயர்க்கும்;
வயல் அமர் கழனி வாயில் பொய்கை,
5
கயல் ஆர் நாரை உகைத்த வாளை
புனலாடு மகளிர் வள மனை ஒய்யும்
ஊர் கவின் இழப்பவும் வருவது கொல்லோ
சுணங்கு அணிந்து எழிலிய அணந்து ஏந்து இள முலை,
வீங்கு இறைப் பணைத் தோள், மடந்தை
10
மான் பிணை அன்ன மகிழ் மட நோக்கே?

திணையும் துறையும் அவை.
பரணர் பாடியது.

356
களரி பரந்து, கள்ளி போகி,
பகலும் கூஉம் கூகையொடு, பிறழ்பல்,
ஈம விளக்கின், பேஎய் மகளிரொடு
அஞ்சு வந்தன்று, இம் மஞ்சு படு முதுகாடு;
5
நெஞ்சு அமர் காதலர் அழுத கண்ணீர்
என்பு படு சுடலை வெண் நீறு அவிப்ப,
எல்லார் புறனும் தான் கண்டு, உலகத்து
மன்பதைக்கு எல்லாம் தானாய்,
தன் புறம் காண்போர்க் காண்பு அறியாதே.

திணையும் துறையும் அவை.
தாயங் கண்ணனார் பாடியது.