முகப்பு | ![]() |
மகட் பாற் காஞ்சி |
336 |
வேட்ட வேந்தனும் வெஞ் சினத்தினனே; |
|
கடவன கழிப்பு இவள் தந்தையும் செய்யான்; |
|
ஒளிறு முகத்து ஏந்திய வீங்கு தொடி மருப்பின் |
|
களிறும் கடிமரம் சேரா; சேர்ந்த |
|
5 |
ஒளிறு வேல் மறவரும் வாய் மூழ்த்தனரே; |
இயவரும் அறியாப் பல் இயம் கறங்க, |
|
அன்னோ, பெரும் பேதுற்றன்று, இவ் அருங் கடி மூதூர்; |
|
அறன் இலள் மன்ற தானே விறல் மலை |
|
வேங்கை வெற்பின் விரிந்த கோங்கின் |
|
10 |
முகை வனப்பு ஏந்திய முற்றா இளமுலைத் |
தகை வளர்த்து எடுத்த நகையொடு, |
|
பகை வளர்த்திருந்த இப் பண்பு இல் தாயே. |
|
திணை காஞ்சி; துறை மகட்பாற் காஞ்சி.
| |
பரணர் பாடியது.
|
337 |
ஆர்கலி யினனே, சோணாட்டு அண்ணல்; |
|
கவி கை மண் ஆள் செல்வர் ஆயினும், |
|
வாள் வலத்து ஒழியப் பாடிச் சென்றாஅர், |
|
வரல்தோறு அகம் மலர, |
|
5 |
ஈதல் ஆனா விலங்கு தொடித் தடக் கைப் |
பாரி பறம்பின் பனிச் சுனை போல, |
|
காண்டற்கு அரியள் ஆகி, மாண்ட |
|
பெண்மை நிறைந்த பொலிவொடு, மண்ணிய |
|
துகில் விரி கடுப்ப நுடங்கி, தண்ணென |
|
10 |
அகில் ஆர் நறும் புகை ஐது சென்று அடங்கிய |
கபில நெடு நகர்க் கமழும் நாற்றமொடு, |
|
மனைச் செறிந்தனளே, வாணுதல்; இனியே, |
|
அற்றன்றுஆகலின், தெற்றெனப் போற்றி, |
|
காய் நெல் கவளம் தீற்றி, காவுதொறும் |
|
15 |
கடுங்கண் யானை காப்பனர் அன்றி, |
வருதல் ஆனார் வேந்தர்; தன்னையர் |
|
பொரு சமம் கடந்த உரு கெழு நெடு வேல் |
|
குருதி பற்றிய வெருவரு தலையர்; |
|
மற்று இவர் மறனும் இற்றால்; தெற்றென |
|
20 |
யார் ஆகுவர்கொல் தாமே நேரிழை |
உருத்த பல சுணங்கு அணிந்த |
|
மருப்பு இள வன முலை ஞெமுக்குவோரே? |
|
திணையும் துறையும் அவை.
| |
கபிலர் பாடியது.
|
338 |
ஏர் பரந்த வயல், நீர் பரந்த செறுவின், |
|
நெல் மலிந்த மனை, பொன் மலிந்த மறுகின், |
|
படு வண்டு ஆர்க்கும் பல் மலர்க் காவின், |
|
நெடு வேள் ஆதன் போந்தை அன்ன, |
|
5 |
பெருஞ் சீர் அருங் கொண்டியளே; கருஞ் சினை |
வேம்பும் ஆரும் போந்தையும் மூன்றும் |
|
மலைந்த சென்னியர், அணிந்த வில்லர், |
|
கொற்ற வேந்தர் வரினும், தன் தக |
|
வணங்கார்க்கு ஈகுவன் அல்லன் வண் தோட்டுப் |
|
10 |
பிணங்கு கதிர்க் கழனி நாப்பண், ஏமுற்று |
உணங்கு கலன் ஆழியின் தோன்றும் |
|
ஓர் எயில் மன்னன் ஒரு மட மகளே. |
|
திணையும் துறையும் அவை.
| |
குன்றூர் கிழார் மகனார் பாடியது.
|
339 |
வியன் புலம் படர்ந்த பல் ஆ நெடு ஏறு |
|
மடலை மாண் நிழல் அசைவிட, கோவலர் |
|
வீ ததை முல்லைப் பூப் பறிக்குந்து; |
|
குறுங் கோல் எறிந்த நெடுஞ் செவிக் குறு முயல் |
|
5 |
நெடு நீர்ப் பரப்பின் வாளையொடு உகளுந்து; |
தொடலை அல்குல் தொடித் தோள் மகளிர் |
|
கடல் ஆடிக் கயம் பாய்ந்து, |
|
கழி நெய்தல் பூக்குறூஉந்து; |
|
பைந் தழை துயல்வரும் செறு விறற.............. |
|
10 |
............................................................................லத்தி |
வளர வேண்டும், அவளே, என்றும் |
|
ஆர் அமர் உழப்பதும் அமரியளாகி, |
|
முறம் செவி யானை வேந்தர் |
|
மறம் கெழு நெஞ்சம் கொண்டு ஒளித்தோளே. |
|
திணையும் துறையும் அவை.
| |
..............................................................
|
340 |
அணித் தழை நுடங்க ஓடி, மணிப் பொறிக் |
|
குரல் அம் குன்றி கொள்ளும் இளையோள், |
|
மா மகள் |
|
....................... ல் என வினவுதி, கேள், நீ: |
|
5 |
எடுப்பவெ...,.................................................. |
..........................மைந்தர் தந்தை |
|
இரும் பனை அன்ன பெருங் கை யானை |
|
கரந்தை அம் செறுவின் பெயர்க்கும் |
|
பெருந் தகை மன்னர்க்கு வரைந்திருந்தனனே. |
|
திணையும் துறையும் அவை.
| |
அ............................... பாடியது.
|
341 |
வேந்து குறையுறவும் கொடாஅன், ஏந்து கோட்டு |
|
அம் பூந் தொடலை அணித் தழை அல்குல், |
|
செம் பொறிச் சிலம்பின் இளையோள் தந்தை, |
|
எழு விட்டு அமைத்த திண் நிலைக் கதவின் |
|
5 |
அரை மண் இஞ்சி நாட் கொடி நுடங்கும் |
.......................................................................................................... |
|
புலிக் கணத்து அன்ன கடுங் கண் சுற்றமொடு, |
|
மாற்றம் மாறான், மறலிய சினத்தன், |
|
'பூக் கோள்' என ஏஎய், கயம் புக்கனனே; |
|
10 |
விளங்குஇழைப் பொலிந்த வேளா மெல் இயல், |
சுணங்கு அணி வன முலை, அவளொடு நாளை |
|
மணம் புகு வைகல் ஆகுதல் ஒன்றோ |
|
ஆர் அமர் உழக்கிய மறம் கிளர் முன்பின், |
|
நீள் இலை எஃகம் மறுத்த உடம்பொடு |
|
15 |
வாரா உலகம் புகுதல் ஒன்று எனப் |
படை தொட்டனனே, குருசில்; ஆயிடைக் |
|
களிறு பொரக் கலங்கிய தண் கயம் போல, |
|
பெருங் கவின் இழப்பது கொல்லோ, |
|
மென் புனல் வைப்பின் இத் தண் பணை ஊரே! |
|
திணையும் துறையும் அவை.
| |
பரணர் பாடியது.
|
342 |
'கானக் காக்கைக் கலிச் சிறகு ஏய்க்கும் |
|
மயிலைக் கண்ணி, பெருந் தோள் குறுமகள், |
|
ஏனோர் மகள்கொல் இவள்?' என விதுப்புற்று, |
|
என்னொடு வினவும் வென் வேல் நெடுந்தகை! |
|
5 |
திரு நயத்தக்க பண்பின் இவள் நலனே |
பொருநர்க்கு அல்லது, பிறர்க்கு ஆகாதே; |
|
பைங் கால் கொக்கின் பகு வாய்ப் பிள்ளை |
|
மென் சேற்று அடைகரை மேய்ந்து உண்டதற்பின், |
|
ஆரல் ஈன்ற ஐயவி முட்டை, |
|
10 |
கூர் நல் இறவின் பிள்ளையொடு பெறூஉம், |
தண் பணைக் கிழவன் இவள் தந்தையும்; வேந்தரும் |
|
பெறாஅமையின் பேர் அமர் செய்தலின், |
|
கழி பிணம் பிறங்கு போர்பு அழி களிறு எருதா, |
|
வாள் தக வைகலும் உழக்கும் |
|
15 |
மாட்சியவர், இவள் தன்னைமாரே. |
திணையும் துறையும் அவை.
| |
அரிசில் கிழார் பாடியது.
|
343 |
'மீன் நொடுத்து நெல் குவைஇ, |
|
மிசை அம்பியின் மனை மறுக்குந்து, |
|
மனைக் குவைஇய கறி மூடையால், |
|
கலிச் சும்மைய கரை கலக்குறுந்து; |
|
5 |
கலம் தந்த பொற் பரிசம் |
கழித் தோணியான், கரை சேர்க்குந்து; |
|
மலைத் தாரமும் கடல் தாரமும் |
|
தலைப் பெய்து, வருநர்க்கு ஈயும் |
|
புனல்அம் கள்ளின் பொலந் தார்க் குட்டுவன் |
|
10 |
முழங்கு கடல் முழவின் முசிறி அன்ன, |
நலம்சால் விழுப் பொருள் பணிந்து வந்து கொடுப்பினும், |
|
புரையர் அல்லோர் வரையலள், இவள்' எனத் |
|
தந்தையும் கொடாஅன் ஆயின் வந்தோர், |
|
வாய்ப்பட இறுத்த ஏணி ஆயிடை |
|
15 |
வருந்தின்று கொல்லோ தானே பருந்து உயிர்த்து |
இடை மதில் சேக்கும் புரிசை, |
|
படை மயங்கு ஆர் இடை, நெடு நல் ஊரே? |
|
திணையும் துறையும் அவை.
| |
பரணர் பாடியது.
|
344 |
செந்நெல் உண்ட பைந் தோட்டு மஞ்ஞை, |
|
செறி வளை மகளிர் ஓப்பலின், பறந்து எழுந்து, |
|
துறை நணி மருதத்து இறுக்கும் ஊரொடு, |
|
நிறைசால் விழுப் பொருள் தருதல் ஒன்றோ |
|
5 |
புகை படு கூர் எரி பரப்பிப் பகை செய்து, |
பண்பு இல் ஆண்மை தருதல் ஒன்றோ |
|
இரண்டினுள் ஒன்று ஆகாமையோ அரிதே, |
|
காஞ்சிப் பனிமுறி ஆரங் கண்ணி.................. |
|
கணி மேவந்தவள் அல்குல் அவ் வரியே. |
|
திணையும் துறையும் அவை.
| |
...............அடைநெடுங் கல்வியார் பாடியது.
|
345 |
களிறு அணைப்பக் கலங்கின, காஅ, |
|
தேர் ஓடத் துகள் கெழுமின, தெருவு; |
|
மா மறுகலின் மயக்குற்றன, வழி; |
கலம் கழாஅலின், துறை கலக்குற்றன; |
5 |
தெறல் மறவர் இறை கூர்தலின், |
பொறை மலிந்து நிலன் நெளிய, |
|
வந்தோர் பலரே, வம்ப வேந்தர், |
|
பிடி உயிர்ப்பு அன்ன கை கவர் இரும்பின் |
|
ஓவு உறழ் இரும் புறம் காவல் கண்ணி, |
|
10 |
கருங் கண் கொண்ட நெருங்கல் வெம் முலை, |
மையல் நோக்கின், தையலை நயந்தோர் |
|
அளியர் தாமே; இவள் தன்னைமாரே |
|
செல்வம் வேண்டார், செருப் புகல் வேண்டி, |
|
'நிரல் அல்லோர்க்குத் தரலோ இல்' என; |
|
15 |
கழிப் பிணிப் பலகையர், கதுவாய் வாளர், |
குழாஅம் கொண்ட குருதிஅம் புலவொடு |
|
கழாஅத் தலையர், கருங் கடை நெடு வேல் |
|
இன்ன மறவர்த்துஆயினும் அன்னோ! |
|
என் ஆவது கொல்தானே |
|
20 |
பன்னல் வேலி இப் பணை நல் ஊரே! |
திணையும் துறையும் அவை.
| |
அவனை அவர் பாடியது.
|
346 |
பிற ..................... ள பால் என மடுத்தலின், |
|
ஈன்ற தாயோ வேண்டாள் அல்லள்; |
|
கல்வியென் என்னும், வல் ஆண் சிறாஅன்; |
|
ஒல்வேன்அல்லன், அது வாய் ஆகுதல் |
|
5 |
அழிந்தோர் அழிய, ஒழிந்தோர் ஒக்கல் |
பேணுநர்ப் பெறாஅது விளியும் |
|
புன் தலைப் பெரும் பாழ் செயும், இவள் நலனே. |
|
திணையும் துறையும் அவை.
| |
அண்டர் மகன் குறுவழுதி பாடியது.
|
347 |
உண்போன் தான் நறுங் கள்ளின் இடச் சில |
|
நா இடைப் பல் தேர் கோலச் சிவந்த |
|
ஒளிறு ஒள் வாடக் குழைந்த பைந் தும்பை, |
|
எறிந்து இலை முறிந்த கதுவாய் வேலின், |
|
5 |
மணம் நாறு மார்பின், மறப் போர் அகுதை, |
குண்டு நீர் வரைப்பின், கூடல் அன்ன |
|
குவை இருங்கூந்தல் வரு முலை சேப்ப, |
|
........................................................................................................... |
|
என் ஆவதுகொல் தானே?..................................... |
|
10 |
விளங்குறு பராரைய ஆயினும், வேந்தர் |
வினை நவில் யானை பிணிப்ப, |
|
வேர் துளங்கின, நம் ஊருள் மரனே. |
|
திணையும் துறையும் அவை.
| |
கபிலர் பாடியது.
|
348 |
வெண்ணெல் அரிஞர் தண்ணுமை வெரீஇ, |
|
கண் மடல் கொண்ட தீம் தேன் இரிய, |
|
கள் அரிக்கும் குயம், சிறு சில் |
|
மீன் சீவும் பாண் சேரி, |
|
5 |
வாய்மொழித் தழும்பன் ஊணூர் அன்ன, |
குவளை உண்கண் இவளை, தாயே |
|
ஈனாளாயினள்ஆயின், ஆனாது |
|
நிழல்தொறும் நெடுந் தேர் நிற்ப, வயின்தொறும், |
|
செந் நுதல் யானை பிணிப்ப, |
|
10 |
வருந்தலமன் எம் பெருந் துறை மரனே! |
திணையும் துறையும் அவை.
| |
பரணர் பாடியது.
|
349 |
நுதி வேல் கொண்டு நுதல் வியர் துடையா, |
|
கடிய கூறும், வேந்தே; தந்தையும், |
|
நெடிய அல்லது, பணிந்து மொழியலனே; |
|
இஃது இவர் படிவம்: ஆயின், வை எயிற்று, |
|
5 |
அரி மதர் மழைக் கண், அம் மா அரிவை, |
மரம் படு சிறு தீப் போல, |
|
அணங்கு ஆயினள், தான் பிறந்த ஊர்க்கே. |
|
திணையும் துறையும் அவை.
| |
மதுரை மருதன் இளநாகனார் பாடியது.
|
350 |
தூர்ந்த கிடங்கின், சோர்ந்த ஞாயில், |
|
சிதைந்த இஞ்சி, கதுவாய் மூதூர் |
|
யாங்கு ஆவதுகொல் தானே, தாங்காது? |
|
படு மழை உருமின் இரங்கு முரசின் |
|
5 |
கடு மான் வேந்தர் காலை வந்து, எம் |
நெடு நிலை வாயில் கொட்குவர் மாதோ; |
|
பொருதாது அமைகுவர்அல்லர் போர் உழந்து, |
|
அடு முரண் முன்பின் தன்னையர் ஏந்திய |
|
வடிவேல் எஃகின் சிவந்த உண்கண், |
|
10 |
தொடி பிறழ் முன்கை, இளையோள் |
அணி நல் ஆகத்து அரும்பிய சுணங்கே. |
|
திணையும் துறையும் அவை.
| |
மதுரை ஓலைக்கடைக் கண்ணம் புகுந்தாராயத்தனார் பாடியது.
|
351 |
படு மணி மருங்கின பணைத் தாள் யானையும், |
|
கொடி நுடங்கு மிசைய தேரும், மாவும், |
|
படை அமை மறவரொடு, துவன்றிக் கல்லென, |
|
கடல் கண்டன்ன கண் அகன் தானை |
|
5 |
வென்று எறி முரசின் வேந்தர், என்றும், |
வண் கை எயினன் வாகை அன்ன |
|
இவள் நலம் தாராது அமைகுவர் அல்லர்; |
|
என் ஆவதுகொல் தானே தெண் நீர்ப் |
|
பொய்கை மேய்ந்த செவ் வரி நாரை |
|
10 |
தேங் கொள் மருதின் பூஞ் சினை முனையின், |
காமரு காஞ்சித் துஞ்சும் |
|
ஏமம்சால் சிறப்பின், இப் பணை நல் ஊரே? |
|
திணையும் துறையும் அவை.
| |
மதுரைப் படைமங்க மன்னியார் பாடியது.
|
352 |
தேஎம் கொண்ட வெண் மண்டையான், |
|
வீ...................................................................கறக்குந்து; |
|
அவல் வகுத்த பசுங் குடையான், |
|
புதல் முல்லைப் பூப் பறிக்குந்து; |
|
5 |
ஆம்பல் வள்ளித் தொடிக் கை மகளிர் |
குன்று ஏறிப் புனல் பாயின், |
|
புற வாயால் புனல் வள |
|
............................................................ நொடை நறவின் |
|
மா வண் தித்தன் வெண்ணெல் வேலி |
|
10 |
உறந்தை அன்ன உரைசால் நன் கலம் |
கொடுப்பவும் கொளாஅனெ |
|
.......................ர் தந்த நாகு இள வேங்கையின், |
|
கதிர்த்து ஒளி திகழும் நுண் பல் சுணங்கின் |
|
மாக் கண் மலர்ந்த முலையள்; தன்னையும் |
|
15 |
சிறு கோல் உளையும் புரவி ª.................. |
...................................................................... யமரே. |
திணையும் துறையும் அவை.
| |
பரணர் பாடியது.
|
353 |
ஆசு இல் கம்மியன் மாசு அறப் புனைந்த |
|
பொலம் செய் பல் காசு அணிந்த அல்குல், |
|
ஈகைக் கண்ணி இலங்கத் தைஇ, |
|
தருமமொடு இயல்வோள் சாயல் நோக்கி, |
|
5 |
தவிர்த்த தேரை, விளர்த்த கண்ணை, |
வினவல் ஆனா வெல் போர் அண்ணல்! |
|
'யார் மகள்?' என்போய்; கூறக் கேள், இனி: |
|
குன்று கண்டன்ன நிலைப் பல் போர்பு |
|
நாள் கடா அழித்த நனந் தலைக் குப்பை |
|
10 |
வல் வில் இளையர்க்கு அல்கு பதம் மாற்றாத் |
தொல் குடி மன்னன் மகளே; முன்நாள் |
|
கூறி வந்த மா முது வேந்தர்க்கு |
|
......................................................................................................... |
|
............................................. உழக்கிக் குருதி ஓட்டி, |
|
15 |
கதுவாய் போகிய துதி வாய் எஃகமொடு, |
பஞ்சியும் களையாப் புண்ணர், |
|
அஞ்சுதகவு உடையர், இவள் தன்னைமாரே. |
|
திணையும் துறையும் அவை.
| |
காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார் பாடியது.
|
354 |
அரைசு தலைவரினும் அடங்கல் ஆனா |
|
நிரை காழ் எஃகம் நீரின் மூழ்கப் |
|
புரையோர் சேர்ந்தென, தந்தையும் பெயர்க்கும்; |
|
வயல் அமர் கழனி வாயில் பொய்கை, |
|
5 |
கயல் ஆர் நாரை உகைத்த வாளை |
புனலாடு மகளிர் வள மனை ஒய்யும் |
|
ஊர் கவின் இழப்பவும் வருவது கொல்லோ |
|
சுணங்கு அணிந்து எழிலிய அணந்து ஏந்து இள முலை, |
|
வீங்கு இறைப் பணைத் தோள், மடந்தை |
|
10 |
மான் பிணை அன்ன மகிழ் மட நோக்கே? |
திணையும் துறையும் அவை.
| |
பரணர் பாடியது.
|
356 |
களரி பரந்து, கள்ளி போகி, |
|
பகலும் கூஉம் கூகையொடு, பிறழ்பல், |
|
ஈம விளக்கின், பேஎய் மகளிரொடு |
|
அஞ்சு வந்தன்று, இம் மஞ்சு படு முதுகாடு; |
|
5 |
நெஞ்சு அமர் காதலர் அழுத கண்ணீர் |
என்பு படு சுடலை வெண் நீறு அவிப்ப, |
|
எல்லார் புறனும் தான் கண்டு, உலகத்து |
|
மன்பதைக்கு எல்லாம் தானாய், |
|
தன் புறம் காண்போர்க் காண்பு அறியாதே. |
|
திணையும் துறையும் அவை.
| |
தாயங் கண்ணனார் பாடியது.
|