முகப்பு | ![]() |
மகள் மறுத்தல் |
109 |
அளிதோதானே, பாரியது பறம்பே! |
|
நளி கொள் முரசின் மூவிரும் முற்றினும், |
|
உழவர் உழாதன நான்கு பயன் உடைத்தே: |
|
ஒன்றே, சிறியிலை வெதிரின் நெல் விளையும்மே; |
|
5 |
இரண்டே, தீம் சுளைப் பலவின் பழம் ஊழ்க்கும்மே; |
மூன்றே, கொழுங் கொடி வள்ளிக் கிழங்கு வீழ்க்கும்மே; |
|
நான்கே, அணி நிற ஓரி பாய்தலின், மீது அழிந்து, |
|
திணி நெடுங் குன்றம் தேன் சொரியும்மே. |
|
வான் கண் அற்று, அவன் மலையே; வானத்து, |
|
10 |
மீன் கண் அற்று, அதன் சுனையே; ஆங்கு, |
மரம்தொறும் பிணித்த களிற்றினிர் ஆயினும், |
|
புலம்தொறும் பரப்பிய தேரினிர் ஆயினும், |
|
தாளின் கொள்ளலிர்; வாளின் தாரலன்; |
|
யான் அறிகுவென், அது கொள்ளும் ஆறே: |
|
15 |
சுகிர் புரி நரம்பின் சீறியாழ் பண்ணி, |
விரை ஒலி கூந்தல் நும் விறலியர் பின் வர, |
|
ஆடினிர் பாடினிர் செலினே, |
|
நாடும் குன்றும் ஒருங்கு ஈயும்மே. |
|
திணை நொச்சி; துறை மகள் மறுத்தல்.
| |
அவனை அவர் பாடியது.
|
110 |
கடந்து அடு தானை மூவிரும் கூடி |
|
உடன்றனிர் ஆயினும், பறம்பு கொளற்கு அரிதே; |
|
முந்நூறு ஊர்த்தே தண் பறம்பு நல் நாடு; |
|
முந்நூறு ஊரும் பரிசிலர் பெற்றனர்; |
|
5 |
யாமும் பாரியும் உளமே; |
குன்றும் உண்டு நீர் பாடினிர் செலினே. |
|
திணையும் துறையும் அவை.
| |
மூவேந்தரும் பறம்பு முற்றியிருந்தாரை அவர் பாடியது.
|
111 |
அளிதோ தானே, பேர் இருங் குன்றே! |
|
வேலின் வேறல் வேந்தர்க்கோ அரிதே; |
|
நீலத்து, இணை மலர் புரையும் உண்கண் |
|
கிணை மகட்கு எளிதால், பாடினள் வரினே. |
|
திணையும் துறையும் அவை.
| |
அவனை அவர் பாடியது.
|