மறக்கள வழி

368
களிறு முகந்து பெயர்குவம் எனினே,
ஒளிறு மழை தவிர்க்கும் குன்றம் போல,
கைம்மா எல்லாம் கணை இடத் தொலைந்தன;
கொடுஞ்சி நெடுந் தேர் முகக்குவம் எனினே;
5
கடும் பரி நல் மான் வாங்குவயின் ஒல்கி,
நெடும் பீடு அழிந்து, நிலம் சேர்ந்தனவே;
கொய் சுவல் புரவி முகக்குவம் எனினே,
மெய் நிறைந்த வழுவொடு பெரும்பிறிதாகி,
வளி வழக்கு அறுத்த வங்கம் போல,
10
குருதி அம் பெரும் புனல் கூர்ந்தனவே; ஆங்க
முகவை இன்மையின் உகவை இன்றி,
இரப்போர் இரங்கும் இன்னா வியன் களத்து,
ஆள் அழிப்படுத்த வாள் ஏர் உழவ!
கடாஅ யானைக் கால்வழி அன்ன என்
15
தெடாரித் தெண் கண் தெளிர்ப்ப ஒற்றி,
பாடி வந்தது எல்லாம், கோடியர்
முழவு மருள் திரு மணி மிடைந்த நின்
அரவு உறழ் ஆரம் முகக்குவம் எனவே.

திணை வாகை; துறை மறக்களவழி.
சேரமான் குடக்கோ நெடுஞ் சேரலாதன் சோழன் வேற் பல் தடக் கைப் பெரு நற்கிள்ளியொடு போர்ப் புறத்துப் பொருது வீழ்ந்து, ஆரம் கழுத்தன்னதாக உயிர் போகாது கிடந்தானைக் கழாத்தலையார் பாடியது.

369
இருப்பு முகஞ் செறித்த ஏந்து எழில் மருப்பின்,
கருங் கை யானை கொண்மூ ஆக,
நீள்மொழி மறவர் எறிவனர் உயர்த்த
வாள் மின் ஆக, வயங்கு கடிப்பு அமைந்த
5
குருதிப் பலிய முரசு முழக்கு ஆக,
அரசு அராப் பனிக்கும் அணங்கு உறு பொழுதின்,
வெவ் விசைப் புரவி வீசு வளி ஆக,
விசைப்புறு வல் வில் வீங்கு நாண் உகைத்த
கணைத் துளி பொழிந்த கண் அகன் கிடக்கை.
10
ஈரச் செறுவயின் தேர் ஏர் ஆக,
விடியல் புக்கு, நெடிய நீட்டி, நின்
செருப் படை மிளிர்ந்த திருத்துறு பைஞ் சால்,
பிடித்து எறி வெள் வேல் கணையமொடு வித்தி,
விழுத் தலை சாய்த்த வெருவரு பைங் கூழ்,
15
பேய்மகள் பற்றிய பிணம் பிறங்கு பல் போர்பு,
கண நரியோடு கழுது களம் படுப்ப,
பூதம் காப்ப, பொலிகளம் தழீஇ,
பாடுநர்க்கு இருந்த பீடுடையாள!
தேய்வை வெண் காழ் புரையும் விசி பிணி
20
வேய்வை காணா விருந்தின் போர்வை
அரிக் குரல் தடாரி உருப்ப ஒற்றி,
பாடி வந்திசின்; பெரும! பாடு ஆன்று
எழிலி தோயும் இமிழ் இசை அருவி,
பொன்னுடை நெடுங் கோட்டு, இமையத்து அன்ன
25
ஓடை நுதல, ஒல்குதல் அறியா,
துடி அடிக் குழவிய பிடி இடை மிடைந்த
வேழ முகவை நல்குமதி
தாழா ஈகைத் தகை வெய்யோயே!

திணையும் துறையும் அவை; துறை ஏர்க்கள உருவகமும் ஆம்.
சேரமான் கடல் ஓட்டிய வெல் கெழு குட்டுவனைப் பரணர் பாடியது.

370
...............................................................................................................ளி,
நாரும் போழும் செய்து உண்டு, ஒராங்குப்
பசி தினத் திரங்கிய இரு பேர் ஒக்கற்கு
ஆர் பதம் கண்ணென மாதிரம் துழைஇ,
5
வேர் உழந்து உலறி, மருங்கு செத்து ஒழிய வந்து,
அத்தக் குடிஞைத் துடி மருள் தீம் குரல்,
உழுஞ்சில் அம் கவட்டிடை இருந்த பருந்தின்
பெடை பயிர் குரலோடு, இசைக்கும் ஆங்கண்,
கழை காய்ந்து உலறிய வறம் கூர் நீள் இடை,
10
வரி மரல் திரங்கிய கானம் பிற்பட,
பழுமரம் உள்ளிய பறவை போல,
ஒண் படை மாரி வீழ் கனி பெய்தென,
துவைத்து எழு குருதி நிலமிசைப் பரப்ப,
விளைந்த செழுங் குரல் அரிந்து, கால் குவித்து,
15
படு பிணப் பல் போர்பு அழிய வாங்கி,
எருது களிறு ஆக, வாள் மடல் ஓச்சி,
அதரி திரித்த ஆள் உகு கடாவின்,
அகன் கண் தடாரி தெளிர்ப்ப ஒற்றி,
'வெந் திறல் வியன் களம் பொலிக!' என்று ஏத்தி,
20
இருப்பு முகம் செறித்த ஏந்து மருப்பின்
வரை மருள் முகவைக்கு வந்தனென்; பெரும!
வடி நவில் எஃகம் பாய்ந்தென, கிடந்த
தொடியுடைத் தடக் கை ஓச்சி, வெருவார்
இனத் தடி விராய வரிக் குடர் அடைச்சி,
25
அழு குரல் பேய்மகள் அயர, கழுகொடு
செஞ் செவி எருவை திரிதரும்,
அஞ்சுவரு கிடக்கைய களம் கிழவோயே!

திணையும் துறையும் அவை.
சோழன் செருப்பாழி எறிந்த இளந்சேட்சென்னியை ஊன்பொதி பசுங்குடையார் பாடியது.

371
அகன் தலை வையத்துப் புரவலர்க் காணாது,
மரந்தலைச் சேர்ந்து, பட்டினி வைகி,
போது அவிழ் அலரி நாரின் தொடுத்து,
தயங்கு இரும் பித்தை பொலியச் சூடி,
5
பறையொடு தகைத்த கலப் பையென், முரவு வாய்
ஆடுறு குழிசி பாடு இன்று தூக்கி,
மன்ற வேம்பின் ஒண் பூ உறைப்ப,
குறை செயல் வேண்டா நசைய இருக்கையேன்,
அரிசி இன்மையின் ஆர் இடை நீந்தி,
10
கூர் வாய் இரும் படை நீரின் மிளிர்ப்ப,
வரு கணை வாளி....... அன்பு இன்று தலைஇ,
இரைமுரசு ஆர்க்கும் உரைசால் பாசறை,
வில் ஏர் உழவின் நின் நல் இசை உள்ளி,
குறைத் தலைப் படு பிணன் எதிர, போர்பு அழித்து,
15
யானை எருத்தின் வாள் மடல் ஓச்சி
அதரி திரித்த ஆள் உகு கடாவின்,
மதியத்து அன்ன என் விசி உறு தடாரி
அகன் கண் அதிர, ஆகுளி தொடாலின்,
பணை மருள் நெடுந் தாள், பல் பிணர்த் தடக் கை,
20
புகர்முக முகவைக்கு வந்திசின் பெரும!
களிற்றுக் கோட்டன்ன வால் எயிறு அழுத்தி,
விழுக்கொடு விரைஇய வெண் நிணச் சுவையினள்,
குடர்த் தலை மாலை சூடி, 'உணத் தின
ஆனாப் பெரு வளம் செய்தோன் வானத்து
25
வயங்கு பல் மீனினும் வாழியர், பல' என,
உரு கெழு பேய்மகள் அயர,
குருதித் துகள் ஆடிய களம் கிழவோயே!

திணையும் துறையும் அவை.
தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியனைக் கல்லாடனார் பாடியது.

373
உருமிசை முழக்கு என முரசம் இசைப்ப,
செரு நவில் வேழம் கொண்மூ ஆக,
தேர் மா அழி துளி தலைஇ, நாம் உறக்
கணைக் காற்று எடுத்த கண் அகன் பாசறை,
5
இழிதரு குருதியொடு ஏந்திய ஒள் வாள்
பிழிவது போலப் பிட்டை ஊறு உவப்ப,
மைந்தர் ஆடிய மயங்கு பெருந் தானை,
கொங்கு புறம்பெற்ற கொற்ற வேந்தே!
................................................தண்ட மாப் பொறி.
10
மடக் கண் மயில் இயல் மறலியாங்கு,
நெடுஞ் சுவர் நல் இல் புலம்ப, கடை கழிந்து,
மென் தோள் மகளிர் மன்றம் பேணார்,
புண்ணுவ
..........................அணியப் புரவி வாழ்க என,
15
சொல் நிழல் இன்மையின் நல் நிழல் சேர,
நுண் பூண் மார்பின் புன் தலைச் சிறாஅர்
அம்பு அழி பொழுதில் தமர் முகம் காணா,
........................................................ற் றொக்கான
வேந்து புறங்கொடுத்த வீய்ந்து உகு பறந்தலை,
20
மாடம் மயங்கு எரி மண்டி, கோடு இறுபு,
உரும் எறி மலையின், இரு நிலம் சேர,
சென்றோன் மன்ற, சொª
........................ ண்ணறிநர் கண்டு கண் அலைப்ப,
வஞ்சி முற்றம் வயக் களன் ஆக,
25
அஞ்சா மறவர் ஆட் போர்பு அழித்துக்
கொண்டனை, பெரும! குட புலத்து அதரி;
பொலிக அத்தை, நின் பணைதனற............ளம்!
விளங்கு திணை வேந்தர் களம்தொறும் சென்று,
''புகர்முக முகவை பொலிக!'' என்று ஏத்தி,
30
கொண்டனர்' என்ப, பெரியோர்; யானும்
அம் கண் மாக் கிணை அதிர ஒற்ற,
............... லென்ஆயினும், காதலின் ஏத்தி,
நின்னோர் அன்னோர் பிறர் இவண் இன்மையின்,
மன் எயில் முகவைக்கு வந்திசின், பெரும!
35
பகைவர் புகழ்ந்த ஆண்மை, நகைவர்க்குத்
தா இன்று உதவும் பண்பின், பேயொடு
கண நரி திரிதரூஉம் ஆங்கண், நிணன் அருந்து
செஞ் செவி எருவை குழீஇ,
அஞ்சுவரு கிடக்கைய களம் கிழவோயே!
40
திணை அது; துறை மறக்களவழி; ஏர்க்கள உருவகமும் ஆம்.

சோழன் குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளிவளவன் கருவூர் எறிந்தானைக் கோவூர்
கிழார் பாடியது.