முகப்பு | ![]() |
முதுபாலை |
253 |
என் திறத்து அவலம் கொள்ளல், இனியே; |
|
வல ஆர் கண்ணி இளையர் திளைப்ப, |
|
'நகாஅல்' என வந்த மாறே, எழா நெல் |
|
பைங் கழை பொதி களைந்தன்ன விளர்ப்பின், |
|
5 |
வளை இல், வறுங் கை ஓச்சி, |
கிளையுள் ஒய்வலோ? கூறு நின் உரையே! |
|
திணை பொதுவியல்; துறை முதுபாலை.
| |
....................குளம்பாதாயனார் பாடியது.
|
254 |
இளையரும் முதியரும் வேறு புலம் படர, |
|
எடுப்ப எழாஅய், மார்பம் மண் புல்ல, |
|
இடைச் சுரத்து இறுத்த மள்ள! விளர்த்த |
|
வளை இல் வறுங் கை ஓச்சி, கிளையுள், |
|
5 |
'இன்னன் ஆயினன், இளையோன்' என்று, |
நின் உரை செல்லும் ஆயின், 'மற்று |
|
முன் ஊர்ப் பழுனிய கோளி ஆலத்து, |
|
புள் ஆர் யாணர்த்தற்றே, என் மகன் |
|
வளனும் செம்மலும் எமக்கு' என, நாளும் |
|
10 |
ஆனாது புகழும் அன்னை |
யாங்கு ஆகுவள்கொல்? அளியள் தானே! |
|
திணையும் துறையும் அவை.
| |
...................கயமனார் பாடியது.
|
255 |
'ஐயோ!' எனின், யான் புலி அஞ்சுவலே; |
|
அணைத்தனன் கொளினே, அகல் மார்பு எடுக்கவல்லேன்; |
|
என் போல் பெரு விதிர்ப்புறுக, நின்னை |
|
இன்னாது உற்ற அறன் இல் கூற்றே! |
|
5 |
நிரை வளை முன் கை பற்றி |
வரை நிழல் சேர்கம் நடத்திசின் சிறிதே! |
|
திணையும் துறையும் அவை.
| |
....................வன்பரணர் பாடியது.
|
256 |
கலம் செய் கோவே! கலம் செய் கோவே! |
|
அச்சுடைச் சாகாட்டு ஆரம் பொருந்திய |
|
சிறு வெண் பல்லி போல, தன்னொடு |
|
சுரம் பல வந்த எமக்கும் அருளி, |
|
5 |
வியல் மலர் அகன் பொழில் ஈமத் தாழி |
அகலிதாக வனைமோ |
|
நனந் தலை மூதூர்க் கலம் செய் கோவே! |
|
திணையும் துறையும் அவை.
| |
..............................................................
|