முகப்பு | ![]() |
முதுமொழிக் காஞ்சி |
18 |
முழங்கு முந்நீர் முழுவதும் வளைஇப் |
|
பரந்துபட்ட வியல் ஞாலம் |
|
தாளின் தந்து, தம் புகழ் நிறீஇ, |
|
ஒரு தாம் ஆகிய உரவோர் உம்பல்! |
|
5 |
ஒன்று பத்து அடுக்கிய கோடி கடை இரீஇய |
பெருமைத்தாக, நின் ஆயுள்தானே! |
|
நீர்த் தாழ்ந்த குறுங் காஞ்சிப் |
|
பூக் கதூஉம் இன வாளை, |
|
நுண் ஆரல், பரு வரால், |
|
10 |
குரூஉக் கெடிற்ற, குண்டு அகழி; |
வான் உட்கும் வடி நீள் மதில்; |
|
மல்லல் மூதூர் வய வேந்தே! |
|
செல்லும் உலகத்துச் செல்வம் வேண்டினும், |
|
ஞாலம் காவலர் தோள் வலி முருக்கி, |
|
15 |
ஒரு நீ ஆகல் வேண்டினும், சிறந்த |
நல் இசை நிறுத்தல் வேண்டினும், மற்று அதன் |
|
தகுதி கேள், இனி, மிகுதியாள! |
|
நீர் இன்று அமையா யாக்கைக்கு எல்லாம் |
|
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே; |
|
20 |
உண்டி முதற்றே உணவின் பிண்டம்; |
உணவு எனப்படுவது நிலத்தொடு நீரே; |
|
நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு |
|
உடம்பும் உயிரும் படைத்திசினோரே; |
|
வித்தி வான் நோக்கும் புன் புலம் கண் அகன் |
|
25 |
வைப்பிற்று ஆயினும், நண்ணி ஆளும் |
இறைவன் தாட்கு உதவாதே; அதனால், |
|
அடு போர்ச் செழிய! இகழாது வல்லே |
|
நிலன் நெளி மருங்கில் நீர் நிலை பெருகத் |
|
தட்டோர் அம்ம, இவண் தட்டோரே; |
|
30 |
தள்ளாதோர் இவண் தள்ளாதோரே. |
திணை பொதுவியல்; துறை முதுமொழிக் காஞ்சி.
| |
பாண்டியன் நெடுஞ்செழியனைக் குடபுலவியனார் பாடியது.
|
27 |
சேற்று வளர் தாமரை பயந்த, ஒண் கேழ், |
|
நூற்று இதழ் அலரின் நிரை கண்டன்ன, |
|
வேற்றுமை இல்லா விழுத் திணைப் பிறந்து, |
|
வீற்றிருந்தோரை எண்ணும்காலை, |
|
5 |
உரையும் பாட்டும் உடையோர் சிலரே; |
மரை இலை போல மாய்ந்திசினோர் பலரே; |
|
'புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின் |
|
வலவன் ஏவா வான ஊர்தி |
|
எய்துப என்ப, தம் செய் வினை முடித்து' எனக் |
|
10 |
கேட்பல்; எந்தை! சேட்சென்னி! நலங்கிள்ளி! |
தேய்தல் உண்மையும், பெருகல் உண்மையும், |
|
மாய்தல் உண்மையும், பிறத்தல் உண்மையும், |
|
அறியாதோரையும் அறியக் காட்டி, |
|
திங்கள் புத்தேள் திரிதரும் உலகத்து, |
|
15 |
வல்லார் ஆயினும், வல்லுநர்ஆயினும், |
வருந்தி வந்தோர் மருங்கு நோக்கி, |
|
அருள, வல்லை ஆகுமதி; அருள் இலர் |
|
கொடாஅமை வல்லர் ஆகுக; |
|
கெடாஅத துப்பின் நின் பகை எதிர்ந்தோரே. |
|
திணை பொதுவியல்; துறை முதுமொழிக்காஞ்சி.
| |
சோழன் நலங்கிள்ளியை உறையூர் முதுகண்ணன் சாத்தனார் பாடியது.
|
28 |
'சிறப்பு இல் சிதடும், உறுப்பு இல் பிண்டமும், |
|
கூனும், குறளும், ஊமும், செவிடும், |
|
மாவும், மருளும், உளப்பட வாழ்நர்க்கு |
|
எண் பேர் எச்சம் என்று இவை எல்லாம் |
|
5 |
பேதைமை அல்லது ஊதியம் இல்' என, |
முன்னும், அறிந்தோர் கூறினர்; இன்னும், |
|
அதன் திறம் அத்தை யான் உரைக்க வந்தது |
|
வட்ட வரிய செம் பொறிச் சேவல் |
|
ஏனல் காப்போர் உணர்த்திய கூஉம் |
|
10 |
கானத்தோர், நின் தெவ்வர்; நீயே, |
புறஞ்சிறை மாக்கட்கு அறம் குறித்து, அகத்தோர் |
|
புய்த்து எறி கரும்பின் விடு கழை தாமரைப் |
|
பூம் போது சிதைய வீழ்ந்தென, கூத்தர் |
|
ஆடு களம் கடுக்கும் அக நாட்டையே; |
|
15 |
அதனால், அறனும் பொருளும் இன்பமும் மூன்றும் |
ஆற்றும், பெரும! நின் செல்வம்; |
|
ஆற்றாமை நிற் போற்றாமையே. |
|
திணையும் துறையும் அவை.
| |
அவனை அவர் பாடியது.
|
29 |
அழல் புரிந்த அடர் தாமரை |
|
ஐது அடர்ந்த நூல் பெய்து, |
|
புனை வினைப் பொலிந்த பொலன் நறுந் தெரியல் |
|
பாறு மயிர் இருந் தலை பொலியச் சூடி, |
|
5 |
பாண் முற்றுக, நின் நாள் மகிழ் இருக்கை! |
பாண் முற்று ஒழிந்த பின்றை, மகளிர் |
|
தோள் முற்றுக, நின் சாந்து புலர் அகலம்! ஆங்க |
|
முனிவு இல் முற்றத்து, இனிது முரசு இயம்ப, |
|
கொடியோர்த் தெறுதலும், செவ்வியோர்க்கு அளித்தலும், |
|
10 |
ஒடியா முறையின் மடிவு இலை ஆகி, |
'நல்லதன் நலனும் தீயதன் தீமையும் |
|
இல்லை' என்போர்க்கு இனன் ஆகிலியர்! |
|
நெல் விளை கழனிப் படு புள் ஓப்புநர் |
|
ஒழி மடல் விறகின் கழி மீன் சுட்டு, |
|
15 |
வெங் கள் தொலைச்சியும், அமையார், தெங்கின் |
இளநீர் உதிர்க்கும் வளம் மிகு நல் நாடு |
|
பெற்றனர் உவக்கும் நின் படை கொள் மாக்கள் |
|
பற்றா மாக்களின் பரிவு முந்துறுத்து, |
|
கூவை துற்ற நாற் கால் பந்தர்ச் |
|
20 |
சிறு மனை வாழ்க்கையின் ஒரீஇ, வருநர்க்கு |
உதவி ஆற்றும் நண்பின் பண்புடை |
|
ஊழிற்றாக, நின் செய்கை! விழவில் |
|
கோடியர் நீர்மை போல முறைமுறை |
|
ஆடுநர் கழியும் இவ் உலகத்து, கூடிய |
|
25 |
நகைப்புறன் ஆக, நின் சுற்றம்! |
இசைப்புறன் ஆக, நீ ஓம்பிய பொருளே! |
|
திணையும் துறையும் அவை.
| |
அவனை அவர் பாடியது.
|
74 |
குழவி இறப்பினும், ஊன்தடி பிறப்பினும், |
|
'ஆள் அன்று' என்று வாளின் தப்பார்; |
|
தொடர்ப் படு ஞமலியின் இடர்ப்படுத்து இரீஇய |
|
கேள் அல் கேளிர் வேளாண் சிறு பதம், |
|
5 |
மதுகை இன்றி, வயிற்றுத் தீத் தணிய, |
தாம் இரந்து உண்ணும் அளவை |
|
ஈன்மரோ, இவ் உலகத்தானே? |
|
திணை பொதுவியல்; துறை முதுமொழிக் காஞ்சி. |
|
சேரமான் கணைக்கால் இரும்பொறை சோழன் செங்கணானோடு திருப்போர்ப் புறத்துப் பொருது, பற்றுக் கோட்பட்டு, குடவாயில் கோட்டத்துச் சிறையில் கிடந்து, 'தண்ணீர் தா' என்று பெறாது, பெயர்த்துப் பெற்று, கைக் கொண்டிருந்து
| |
உண்ணான் சொல்லித் துஞ்சிய பாட்டு.
|