முகப்பு | ![]() |
வல்லாண் முல்லை |
170 |
மரை பிரித்து உண்ட நெல்லி வேலி, |
|
பரலுடை முன்றில், அம் குடிச் சீறூர், |
|
எல் அடிப்படுத்த கல்லாக் காட்சி |
|
வில் உழுது உண்மார் நாப்பண், ஒல்லென, |
|
5 |
இழி பிறப்பாளன் கருங் கை சிவப்ப, |
வலி துரந்து சிலைக்கும் வன் கண் கடுந் துடி |
|
புலி துஞ்சு நெடு வரைக் குடிஞையோடு இரட்டும் |
|
மலை கெழு நாடன், கூர்வேல் பிட்டன், |
|
குறுகல் ஓம்புமின், தெவ்விர்! அவனே |
|
10 |
சிறு கண் யானை வெண் கோடு பயந்த |
ஒளி திகழ் முத்தம் விறலியர்க்கு ஈத்து, |
|
நார் பிழிக் கொண்ட வெங் கள் தேறல் |
|
பண் அமை நல் யாழ்ப் பாண் கடும்பு அருத்தி, |
|
நசைவர்க்கு மென்மை அல்லது, பகைவர்க்கு |
|
15 |
இரும்பு பயன் படுக்கும் கருங் கைக் கொல்லன் |
விசைத்து எறி கூடமொடு பொரூஉம் |
|
உலைக் கல் அன்ன, வல்லாளன்னே. |
|
திணை வாகை; துறை வல்லாண் முல்லை; தானைமறமும் ஆம்.
| |
அவனை உறையூர் மருத்துவன் தாமோதரனார் பாடியது.
|
178 |
கந்து முனிந்து உயிர்க்கும் யானையொடு, பணை முனிந்து |
|
கால் இயல் புரவி ஆலும் ஆங்கண், |
|
மணல் மலி முற்றம் புக்க சான்றோர் |
|
உண்ணார் ஆயினும், தன்னொடு சூளுற்று, |
|
5 |
'உண்ம்' என இரக்கும் பெரும் பெயர்ச் சாத்தன் |
ஈண்டோ இன் சாயலனே; வேண்டார் |
|
எறி படை மயங்கிய வெருவரு ஞாட்பின், |
|
கள்ளுடைக் கலத்தர் உள்ளூர்க் கூறிய |
|
நெடுமொழி மறந்த சிறு பேராளர் |
|
10 |
அஞ்சி நீங்கும்காலை, |
ஏமமாகத் தான் முந்துறுமே. |
|
திணை வாகை; துறை வல்லாண் முல்லை.
| |
பாண்டியன் கீரஞ்சாத்தனை அவர் பாடியது.
|
181 |
மன்ற விளவின் மனை வீழ் வெள்ளில், |
|
கருங் கண் எயிற்றி காதல் மகனொடு, |
|
கான இரும் பிடிக் கன்று தலைக் கொள்ளும் |
|
பெருங் குறும்பு உடுத்த வன் புல இருக்கை, |
|
5 |
புலாஅ அம்பின், போர் அருங் கடி மிளை, |
வலாஅரோனே, வாய் வாள் பண்ணன்; |
|
உண்ணா வறுங் கடும்பு உய்தல் வேண்டின், |
|
இன்னே சென்மதி, நீயே சென்று, அவன் |
|
பகைப் புலம் படராஅளவை, நின் |
|
10 |
பசிப் பகைப் பரிசில் காட்டினை கொளற்கே. |
திணையும் துறையும் அவை.
| |
வல்லார் கிழான் பண்ணனைச் சோணாட்டு முகையலூர்ச் சிறு கருந்தும்பியார் பாடியது.
|
313 |
அத்தம் நண்ணிய நாடு கெழு பெருவிறல் |
|
கைப் பொருள் யாதொன்றும் இலனே; நச்சிக் |
|
காணிய சென்ற இரவல் மாக்கள் |
|
களிறொடு நெடுந் தேர் வேண்டினும், கடவ; |
|
5 |
உப்பு ஒய் சாகாட்டு உமணர் காட்ட |
கழி முரி குன்றத்து அற்றே, |
|
எள் அமைவு இன்று, அவன் உள்ளிய பொருளே. |
|
திணை அது; துறை வல்லாண் முல்லை.
| |
மாங்குடி கிழார் பாடியது.
|
314 |
மனைக்கு விளக்கு ஆகிய வாணுதல் கணவன், |
|
முனைக்கு வரம்பு ஆகிய வென் வேல் நெடுந் தகை, |
|
நடுகல் பிறங்கிய உவல் இடு பறந்தலை, |
|
புன் காழ் நெல்லி வன் புலச் சீறூர்க் |
|
5 |
குடியும் மன்னும் தானே; கொடி எடுத்து |
நிறை அழிந்து எழுதரு தானைக்குச் |
|
சிறையும் தானே தன் இறை விழுமுறினே. |
|
திணையும் துறையும் அவை.
| |
ஐயூர் முடவனார் பாடியது.
|
315 |
உடையன்ஆயின் உண்ணவும் வல்லன்; |
|
கடவர் மீதும் இரப்போர்க்கு ஈயும்; |
|
மடவர் மகிழ் துணை; நெடு மான் அஞ்சி |
|
இல் இறைச் செரீஇய ஞெலிகோல் போல, |
|
5 |
தோன்றாது இருக்கவும் வல்லன்; மற்றதன் |
கான்று படு கனை எரி போல, |
|
தோன்றவும் வல்லன் தான் தோன்றுங்காலே. |
|
திணையும் துறையும் அவை.
| |
நெடுமான் அஞ்சியை ஒளவையார் பாடியது.
|
316 |
கள்ளின் வாழ்த்தி, கள்ளின் வாழ்த்தி, |
|
காட்டொடு மிடைந்த சீயா முன்றில், |
|
நாட் செருக்கு அனந்தர்த் துஞ்சுவோனே. |
|
அவன் எம் இறைவன்; யாம் அவன் பாணர்; |
|
5 |
நெருநை வந்த விருந்திற்கு மற்றுத் தன் |
இரும் புடைப் பழ வாள் வைத்தனன்; இன்று இக் |
|
கருங் கோட்டுச் சீறியாழ் பணையம்; இது கொண்டு |
|
ஈவதிலாளன் என்னாது, நீயும், |
|
வள்ளி மருங்குல் வயங்கு இழை அணிய, |
|
10 |
கள்ளுடைக் கலத்தேம் யாம் மகிழ் தூங்க, |
சென்று வாய் சிவந்து மேல் வருக |
|
சிறு கண் யானை வேந்து விழுமுறவே. |
|
திணையும் துறையும் அவை.
| |
மதுரைக் கள்ளிற் கடையத்தன் வெண்ணாகனார் பாடியது.
|
317 |
வென் வேல் ................................. நது |
|
முன்றில் கிடந்த பெருங் களியாற்கு |
|
அதள் உண்டாயினும், பாய் உண்டாயினும், |
|
யாது உண்டாயினும், கொடுமின் வல்லே; |
|
5 |
வேட்கை மீளப |
..................கும், எமக்கும், பிறர்க்கும், |
|
யார்க்கும், ஈய்ந்து, துயில் ஏற்பினனே. |
|
திணையும் துறையும் அவை.
| |
வேம்பற்றூர்க் குமரனார் பாடியது.
|
318 |
கொய் அடகு வாட, தரு விறகு உணங்க, |
|
மயில்அம் சாயல் மாஅயோளொடு |
|
பசித்தன்று அம்ம, பெருந்தகை ஊரே |
|
மனை உறை குரீஇக் கறை அணல் சேவல், |
|
5 |
பாணர் நரம்பின் சுகிரொடு, வய மான் |
குரல் செய் பீலியின் இழைத்த குடம்பை, |
|
பெருஞ் செய் நெல்லின் அரிசி ஆர்ந்து, தன் |
|
புன் புறப் பெடையொடு வதியும் |
|
யாணர்த்து ஆகும் வேந்து விழுமுறினே. |
|
திணையும் துறையும் அவை.
| |
பெருங் குன்றூர் கிழார் பாடியது.
|
319 |
பூவல் படுவில் கூவல் தோண்டிய |
|
செங் கண் சில் நீர் பெய்த சீறில் |
|
முன்றில் இருந்த முது வாய்ச் சாடி |
|
யாம் கஃடு உண்டென, வறிது மாசு இன்று; |
|
5 |
படலை முன்றில் சிறு தினை உணங்கல் |
புறவும் இதலும் அறவும் உண்கெனப் |
|
பெய்தற்கு எல்லின்று பொழுதே; அதனான், |
|
முயல் சுட்ட ஆயினும் தருகுவேம்; புகுதந்து |
|
ஈங்கு இருந்தீமோ, முது வாய்ப் பாண! |
|
10 |
கொடுங் கோட்டு ஆமான் நடுங்கு தலைக் குழவி |
புன் தலைச் சிறாஅர் கன்று எனப் பூட்டும் |
|
சீறூர் மன்னன் நெருநை ஞாங்கர், |
|
வேந்து விடு தொழிலொடு சென்றனன்; வந்து, நின் |
|
பாடினி மாலை அணிய, |
|
15 |
வாடாத் தாமரை சூட்டுவன் நினக்கே. |
திணையும் துறையும் அவை.
| |
ஆலங்குடி வங்கனார் பாடியது.
|
320 |
முன்றில் முஞ்ஞையொடு முசுண்டை பம்பி, |
|
பந்தர் வேண்டாப் பலா தூங்கு நீழல், |
|
கைம்மான் வேட்டுவன் கனை துயில் மடிந்தென, |
|
பார்வை மடப் பிணை தழீஇ, பிறிது ஓர் |
|
5 |
தீர் தொழில் தனிக் கலை திளைத்து விளையாட, |
இன்புறு புணர்நிலை கண்ட மனையோள் |
|
கணவன் எழுதலும் அஞ்சி, கலையே |
|
பிணைவயின் தீர்தலும் அஞ்சி, யாவதும், |
|
இல் வழங்காமையின், கல்லென ஒலித்து, |
|
10 |
மான் அதள் பெய்த உணங்கு தினை வல்சி |
கானக் கோழியோடு இதல் கவர்ந்து உண்டென, |
|
ஆர நெருப்பின், ஆரல் நாற, |
|
தடிவு ஆர்ந்திட்ட முழு வள்ளூரம் |
|
இரும் பேர் ஒக்கலொடு ஒருங்கு இனிது அருந்தி, |
|
15 |
தங்கினை சென்மோ, பாண! தங்காது, |
வேந்து தரு விழுக் கூழ் பரிசிலர்க்கு என்றும் |
|
அருகாது ஈயும் வண்மை |
|
உரைசால் நெடுந் தகை ஓம்பும் ஊரே. |
|
திணையும் துறையும் அவை.
| |
வீரை வெளியனார் பாடியது.
|
321 |
பொறிப் புறப் பூழின் போர் வல் சேவல் |
|
மேந் தோல் களைந்த தீம் கோள் வெள் எள் |
|
சுளகிடை உணங்கல் செவ்வி கொண்டு, உடன் |
|
வேனில் கோங்கின் பூம் பொகுட்டு அன்ன |
|
5 |
குடந்தை அம் செவிய கோட்டு எலி ஆட்ட, |
கலி ஆர் வரகின் பிறங்கு பீள் ஒளிக்கும், |
|
வன் புல வைப்பினதுவே சென்று |
|
தின் பழம் பசீஇ ..........னனோ, பாண! |
|
வாள் வடு விளங்கிய சென்னிச் |
|
10 |
செரு வெங் குருசில் ஓம்பும் ஊரே. |
திணையும் துறையும் அவை.
| |
உறையூர் மருத்துவன் தாமோதரனார் பாடியது.
|
322 |
உழுது ஊர் காளை ஊழ் கோடு அன்ன |
|
கவை முள் கள்ளிப் பொரி அரைப் பொருந்தி, |
|
புது வரகு அரிகால் கருப்பை பார்க்கும் |
|
புன் தலைச் சிறாஅர் வில் எடுத்து ஆர்ப்பின், |
|
5 |
பெருங் கண் குறு முயல் கருங் கலன் உடைய |
மன்றில் பாயும் வன் புலத்ததுவே |
|
கரும்பின் எந்திரம் சிலைப்பின், அயலது. |
|
இருஞ் சுவல் வாளை பிறழும் ஆங்கண், |
|
தண் பணை ஆளும் வேந்தர்க்குக் |
|
10 |
கண் படை ஈயா வேலோன் ஊரே. |
திணையும் துறையும் அவை.
| |
ஆவூர் கிழார் பாடியது.
|