முகப்பு | ![]() |
வேத்தியல் |
286 |
வெள்ளை வெள் யாட்டுச் செச்சை போலத் |
|
தன் ஓரன்ன இளையர் இருப்ப, |
|
பலர் மீது நீட்டிய மண்டை என் சிறுவனைக் |
|
கால் கழி கட்டிலில் கிடப்பி, |
|
5 |
தூ வெள் அறுவை போர்ப்பித்திலதே! |
திணை கரந்தை; துறை வேத்தியல்.
| |
ஒளவையார் பாடியது.
|
291 |
சிறாஅஅர்! துடியர்! பாடு வல் மகாஅஅர்! |
|
தூ வெள் அறுவை மாயோற் குறுகி, |
|
இரும் புள் பூசல் ஓம்புமின்; யானும், |
|
விளரிக் கொட்பின், வெள் நரி கடிகுவென்; |
|
5 |
என் போல் பெரு விதுப்புறுக, வேந்தே |
கொன்னும் சாதல் வெய்யோற்குத் தன் தலை |
|
மணி மருள் மாலை சூட்டி, அவன் தலை |
|
ஒரு காழ் மாலை தான் மலைந்தனனே! |
|
திணை அது; துறை வேத்தியல்.
| |
நெடுங்கழுத்துப் பரணர் பாடியது.
|