முகப்பு | ![]() |
துறை மறைந்து போன பாடல்கள் |
244 |
பாணர் சென்னியும் வண்டு சென்று ஊதா; |
|
விறலியர் முன்கையும் தொடியின் பொலியா;
| |
இரவல் மாக்களும்... ... ... ... ... ... ... ... ... ...
|
267 |
267
| |
(இப் பாட்டு பிரதிகளில் காணப்பெறவில்லை.)
|
268 |
268
| |
(இப் பாட்டு பிரதிகளில் காணப்பெறவில்லை.)
|
282 |
எஃகு உளம் கழிய, இரு நிலம் மருங்கின், |
|
அருங் கடன் இறுத்த பெருஞ் செயாளனை, |
|
'யாண்டு உளனோ?' என, வினவுதி ஆயின், |
|
............................................................................................. |
|
5 |
வரு படை தாங்கிய கிளர் தார் அகலம் |
அருங் கடன் இறுமார் வயவர் எறிய, |
|
உடம்பும் தோன்றா உயிர் கெட்டன்றே; |
|
மலையுநர் மடங்கி மாறு எதிர் கழியத் |
|
....................................................................................... |
|
10 |
அலகை போகிச் சிதைந்து வேறாகிய |
பலகை அல்லது, களத்து ஒழியாதே; |
|
சேண் விளங்கு நல் இசை நிறீஇ, |
|
நா நவில் புலவர் வாய் உளானே. |
|
திணை ...................
| |
பாலை பாடிய பெருங்கடுங்கோ பாடியது.
|
285 |
பாசறையீரே! பாசறையீரே! |
|
துடியன் கையது வேலே; அடி புணர் |
|
வாங்கு இரு மருப்பின் தீம் தொடைச் சீறியாழ்ப் |
|
பாணன் கையது தோலே; காண்வரக் |
|
5 |
கடுந் தெற்று மூடையின்...................... |
வாடிய மாலை மலைந்த சென்னியன்; |
|
வேந்து தொழில் அயரும் அருந் தலைச் சுற்றமொடு |
|
நெடு நகர் வந்தென, விடு கணை மொசித்த |
|
மூரி வெண் தோல் |
|
10 |
சேறுபடு குருதிச் செம்மல் உக்குஓஒ! |
மாறு செறு நெடு வேல் மார்பு உளம் போக, |
|
நிணம் பொதி கழலொடு நிலம் சேர்ந்தனனே; |
|
அது கண்டு, பரந்தோர் எல்லாம் புகழத் தலை பணிந்து |
|
இறைஞ்சியோனே, குருசில்! பிணங்கு கதிர் |
|
15 |
அலமருங் கழனித் தண்ணடை ஒழிய, |
இலம்பாடு ஒக்கல் தலைவற்கு ஓர் |
|
கரம்பைச் சீறூர் நல்கினன் எனவே. |
|
திணை வாகை; துறை ...............முல்லை.
| |
அரிசில் கிழார் பாடியது.
|
289 |
ஈரச் செவ்வி உதவினஆயினும், |
|
பல் எருத்துள்ளும் நல் எருது நோக்கி, |
|
வீறு வீறு ஆயும் உழவன் போல, |
|
பீடு பெறு தொல் குடிப் பாடு பல தாங்கிய |
|
5 |
மூதிலாளருள்ளும், காதலின் |
தனக்கு முகந்து ஏந்திய பசும் பொன் மண்டை, |
|
'இவற்கு ஈக!' என்னும்; அதுவும் அன்றிசினே; |
|
கேட்டியோ வாழி பாண! பாசறை, |
|
'பூக் கோள் இன்று' என்று அறையும் |
|
10 |
மடி வாய்த் தண்ணுமை இழிசினன் குரலே? |
திணை ...............; துறை ................முல்லை.
| |
கழாத்தலையார் பாடியது.
|
323 |
புலிப்பாற் பட்ட ஆமான் குழவிக்குச் |
|
சினம் கழி மூதாக் கன்று மடுத்து ஊட்டும் |
|
கா ... ... ... ... ..... ..... ...... ...... ..... க்கு |
|
உள்ளியது சுரக்கும் ஓம்பா ஈகை, |
|
5 |
வெள் வேல் ஆவம்ஆயின், ஒள் வாள் |
கறையடி யானைக்கு அல்லது |
|
உறை கழிப்பு அறியா, வேலோன் ஊரே. |
|
........................................................
| |
................டார் கிழார் பாடியது.
|
324 |
வெருக்கு விடை அன்ன வெகுள் நோக்குக் கயந் தலை, |
|
புள் ஊன் தின்ற புலவு நாறு கய வாய், |
|
வெள் வாய் வேட்டுவர் வீழ் துணை மகாஅர் |
|
சிறியிலை உடையின் சுரையுடை வால் முள் |
|
5 |
ஊக நுண் கோல் செறித்த அம்பின், |
வலாஅர் வல்வில் குலாவரக் கோலி, |
|
பருத்தி வேலிக் கருப்பை பார்க்கும் |
|
புன் புலம் தழீஇய அம் குடிச் சீறூர், |
|
குமிழ் உண் வெள்ளை பகு வாய் பெயர்த்த |
|
10 |
வெண் காழ் தாய வண் கால் பந்தர், |
இடையன் பொத்திய சிறு தீ விளக்கத்து, |
|
பாணரொடு இருந்த நாணுடை நெடுந்தகை |
|
வலம் படு தானை வேந்தர்க்கு |
|
உலந்துழி உலக்கும் நெஞ்சு அறி துணையே. |
|
திணையும் துறையும் அவை.
| |
ஆலத்தூர் கிழார் பாடியது.
|
325 |
களிறு நீறு ஆடிய விடு நில மருங்கின், |
|
வம்பப் பெரும் பெயல் வரைந்து சொரிந்து இறந்தென, |
|
குழி கொள் சில் நீர் குராஅல் உண்டலின், |
|
சேறு கிளைத்திட்ட கலுழ் கண் ஊறல் |
|
5 |
முறையின் உண்ணும் நிறையா வாழ்க்கை, |
முளவு மாத் தொலைச்சிய முழுச்சொல் ஆடவர் |
|
உடும்பு இழுது அறுத்த ஒடுங் காழ்ப் படலைச் |
|
சீறில் முன்றில் கூறுசெய்திடுமார், |
|
கொள்ளி வைத்த கொழு நிண நாற்றம் |
|
10 |
மறுகுடன் கமழும் மதுகை மன்றத்து, |
அலந்தலை இரத்தி அலங்குபடு நீழல், |
|
கயந் தலைச் சிறாஅர் கணை விளையாடும் |
|
அரு மிளை இருக்கையதுவே வென் வேல் |
|
வேந்து தலைவரினும் தாங்கும், |
|
15 |
தாங்கா ஈகை, நெடுந்தகை ஊரே. |
திணையும் துறையும் அவை.
| |
உறையூர் முதுகண்ணன் சாத்தனார் பாடியது.
|
355 |
மதிலும் ஞாயில் இன்றே; கிடங்கும், |
|
நீஇர் இன்மையின், கன்று மேய்ந்து உகளும்; |
|
ஊரது நிலைமையும் இதுவே: |
|
............................................................................. |
|
......................................................................
| |
......................................................................
|
357 |
குன்று தலைமணந்த மலை பிணித்து யாத்த மண், |
|
பொதுமை சுட்டிய மூவர் உலகமும், |
|
பொதுமை இன்றி ஆண்டிசினோர்க்கும், |
|
மாண்ட அன்றே, யாண்டுகள்; துணையே |
|
5 |
வைத்தது அன்றே வெறுக்கை; வி................ |
..........................................................................................ணை |
|
புணை கைவிட்டோர்க்கு அரிதே, துணை அழத் |
|
தொக்கு உயிர் வௌவும்காலை, |
|
இக்கரை நின்று இவர்ந்து உக்கரை கொளலே. |
|
திணை அது; துறை ...................; பெருங்காஞ்சியும் ஆம்.
| |
பிரமனார் பாடியது.
|
361 |
கார் எதிர் உருமின் உரறி, கல்லென, |
|
ஆர் உயிர்க்கு அலமரும் ஆராக் கூற்றம்! |
|
நின் வரவு அஞ்சலன் மாதோ; நன் பல |
|
கேள்வி முற்றிய வேள்வி அந்தணர்க்கு, |
|
5 |
அருங் கலம் நீரொடு சிதறி, பெருந்தகைத் |
தாயின் நன்று பலர்க்கு ஈத்து, |
|
தெருள் நடை மா களிறொடு தன் |
|
அருள் பாடுநர்க்கு நன்கு அருளியும், |
|
உருள் நடை ........................£ன்றதன் |
|
10 |
தாள் சேருநர்க்கு இனிது ஈத்தும், |
புரி மாலையர் பாடினிக்குப் |
|
பொலந் தாமரைப் பூம் பாணரொடு |
|
கலந்து அளைஇய நீள் இருக்கையால் |
|
பொறையொ............ மான் நோக்கின், |
|
15 |
வில் என விலங்கிய புருவத்து, வல்லென |
நல்கின் நா அஞ்சும் முள் எயிற்று, மகளிர் |
|
அல்குல் தாங்கா அசைஇ, மெல்லென |
|
............................................பொலங்கலத்து ஏந்தி, |
|
அமிழ்து என மடுப்ப மாந்தி, இகழ்விலன், |
|
20 |
நில்லா உலகத்து............... மை நீ |
சொல்ல வேண்டா................. முந்தறிந்த |
....................................................................................
| |
...............................................னார் பாடியது.
|