| முகப்பு | தொடக்கம் | 
அடு மகள் முகந்த  | 
 399  | 
அடு மகள் முகந்த அளவா வெண்ணெல்  | 
|
தொடி மாண் உலக்கைப் பரூஉக் குற்று அரிசி  | 
|
காடி வெள் உலைக் கொளீஇ, நீழல்  | 
|
ஓங்கு சினை மாவின் தீம் கனி நறும் புளி,  | 
|
5  | 
மோட்டு இரு வராஅல் கோட்டு மீன் கொழுங் குறை,  | 
செறுவின் வள்ளை, சிறு கொடிப் பாகல்,  | 
|
பாதிரி ஊழ் முகை அவிழ் விடுத்தன்ன  | 
|
மெய் களைந்து, இனனொடு விரைஇ,  | 
|
மூழ்ப்பப் பெய்த முழு அவிழ்ப் புழுக்கல்,  | 
|
10  | 
அழிகளின் படுநர் களி அட வைகின்,  | 
பழஞ்சோறு அயிலும் முழங்கு நீர்ப் படப்பைக்  | 
|
காவிரிக் கிழவன், மாயா நல் இசைக்  | 
|
கிள்ளிவளவன் உள்ளி, அவற் படர்தும்;  | 
|
செல்லேன் செல்லேன், பிறர் முகம் நோக்கேன்;  | 
|
15  | 
நெடுங் கழைத் தூண்டில் விடு மீன் நொடுத்து,  | 
கிணைமகள் அட்ட பாவல் புளிங்கூழ்  | 
|
பொழுது மறுத்து உண்ணும் உண்டியேன், அழிவு கொண்டு,  | 
|
ஒரு சிறை இருந்தேன்; என்னே! 'இனியே,  | 
|
அறவர் அறவன், மறவர் மறவன்,  | 
|
20  | 
மள்ளர் மள்ளன், தொல்லோர் மருகன்,  | 
இசையின் கொண்டான், நசை அமுது உண்க' என,  | 
|
மீப் படர்ந்து இறந்து, வன் கோல் மண்ணி,  | 
|
வள் பரிந்து கிடந்த.......................மணக்க  | 
|
விசிப்புறுத்து அமைந்த புதுக் காழ்ப் போர்வை,  | 
|
25  | 
அலகின் மாலை ஆர்ப்ப வட்டித்து,  | 
கடியும் உணவு என்னக் கடவுட்கும் தொடேன்,  | 
|
'கடுந் தேர் அள்ளற்கு அசாவா நோன் சுவல்  | 
|
பகடே அத்தை யான் வேண்டி வந்தது' என,  | 
|
ஒன்று யான் பெட்டாஅளவை, அன்றே  | 
|
30  | 
ஆன்று விட்டனன் அத்தை, விசும்பின்  | 
மீன் பூத்தன்ன உருவப் பல் நிரை  | 
|
ஊர்தியொடு நல்கியோனே; சீர் கொள  | 
|
இழுமென இழிதரும் அருவி,  | 
|
வான் தோய் உயர் சிமைத் தோன்றிக் கோவே.  | 
|
திணை அது; துறை பரிசில் விடை.
  | |
தாமான் தோன்றிக் கோனை ஐயூர் முடவனார் பாடியது.
  |