| முகப்பு | தொடக்கம் | 
அலங்கு கதிர் சுமந்த  | 
 375  | 
அலங்கு கதிர் சுமந்த கலங்கற் சூழி,  | 
|
நிலைதளர்வு தொலைந்த ஒல்கு நிலைப் பல் காற்  | 
|
பொதியில் ஒரு சிறை பள்ளி ஆக,  | 
|
முழாஅரைப் போந்தை அர வாய் மா மடல்  | 
|
5  | 
நாரும் போழும் கிணையொடு சுருக்கி,  | 
ஏரின் வாழ்நர் குடிமுறை புகாஅ,  | 
|
'ஊழ் இரந்து உண்ணும் உயவல் வாழ்வைப்  | 
|
புரவு எதிர்ந்து கொள்ளும் சான்றோர் யார்?' எனப்  | 
|
பிரசம் தூங்கும் அறாஅ யாணர்,  | 
|
10  | 
வரை அணி படப்பை, நல் நாட்டுப் பொருந!  | 
பொய்யா ஈகைக் கழல் தொடி ஆஅய்!  | 
|
யாவரும் இன்மையின் கிணைப்ப, தாவது,  | 
|
பெரு மழை கடல் பரந்தாஅங்கு, யானும்  | 
|
ஒரு நின் உள்ளி வந்தனென்; அதனால்  | 
|
15  | 
புலவர் புக்கில் ஆகி, நிலவரை  | 
நிலீஇயர் அத்தை, நீயே! ஒன்றே  | 
|
நின் இன்று வறுவிது ஆகிய உலகத்து,  | 
|
நிலவன்மாரோ, புரவலர்! துன்னி,  | 
|
பெரிய ஓதினும் சிறிய உணராப்  | 
|
20  | 
பீடு இன்று பெருகிய திருவின்,  | 
பாடு இல், மன்னரைப் பாடன்மார், எமரே!  | 
|
திணை பாடாண் திணை; துறை வாழ்த்தியல்.
  | |
அவனை அவர் பாடியது.
  |