| முகப்பு | தொடக்கம் | 
அளிதோதானே, பாரியது  | 
 109  | 
அளிதோதானே, பாரியது பறம்பே!  | 
|
நளி கொள் முரசின் மூவிரும் முற்றினும்,  | 
|
உழவர் உழாதன நான்கு பயன் உடைத்தே:  | 
|
ஒன்றே, சிறியிலை வெதிரின் நெல் விளையும்மே;  | 
|
5  | 
இரண்டே, தீம் சுளைப் பலவின் பழம் ஊழ்க்கும்மே;  | 
மூன்றே, கொழுங் கொடி வள்ளிக் கிழங்கு வீழ்க்கும்மே;  | 
|
நான்கே, அணி நிற ஓரி பாய்தலின், மீது அழிந்து,  | 
|
திணி நெடுங் குன்றம் தேன் சொரியும்மே.  | 
|
வான் கண் அற்று, அவன் மலையே; வானத்து,  | 
|
10  | 
மீன் கண் அற்று, அதன் சுனையே; ஆங்கு,  | 
மரம்தொறும் பிணித்த களிற்றினிர் ஆயினும்,  | 
|
புலம்தொறும் பரப்பிய தேரினிர் ஆயினும்,  | 
|
தாளின் கொள்ளலிர்; வாளின் தாரலன்;  | 
|
யான் அறிகுவென், அது கொள்ளும் ஆறே:  | 
|
15  | 
சுகிர் புரி நரம்பின் சீறியாழ் பண்ணி,  | 
விரை ஒலி கூந்தல் நும் விறலியர் பின் வர,  | 
|
ஆடினிர் பாடினிர் செலினே,  | 
|
நாடும் குன்றும் ஒருங்கு ஈயும்மே.  | 
|
திணை நொச்சி; துறை மகள் மறுத்தல்.
  | |
அவனை அவர் பாடியது.
  |