| முகப்பு | தொடக்கம் | 
ஆசு ஆகு எந்தை  | 
 307  | 
ஆசு ஆகு எந்தை யாண்டு உளன்கொல்லோ?  | 
|
குன்றத்து அன்ன களிற்றொடு பட்டோன்;  | 
|
வம்பலன் போலத் தோன்றும்; உதுக்காண்;  | 
|
வேனல் வரி அணில் வாலத்து அன்ன,  | 
|
5  | 
கான ஊகின் கழன்று உகு முது வீ  | 
அரியல் வான் குழல் சுரியல் தங்க,  | 
|
நீரும் புல்லும் ஈயாது, உமணர்  | 
|
யாரும் இல் ஒரு சிறை முடத்தொடு துறந்த  | 
|
வாழா வான் பகடு ஏய்ப்ப, தெறுவர்  | 
|
10  | 
பேர் உயிர் கொள்ளும் மாதோ; அது கண்டு,  | 
வெஞ் சின யானை வேந்தனும், 'இக் களத்து,  | 
|
எஞ்சலின் சிறந்தது பிறிது ஒன்று இல்' என,  | 
|
பண் கொளற்கு அருமை நோக்கி,  | 
|
நெஞ்சு அற வீழ்ந்த புரைமையோனே.  | 
|
திணை தும்பை; துறை களிற்றுடனிலை.
  | |
........................................................................
  |