| முகப்பு | தொடக்கம் | 
ஆடு நடைப் புரவியும்  | 
 240  | 
ஆடு நடைப் புரவியும், களிறும், தேரும்,  | 
|
வாடா யாணர் நாடும் ஊரும்,  | 
|
பாடுநர்க்கு அருகா ஆஅய் அண்டிரன்  | 
|
கோடு ஏந்து அல்குல், குறுந் தொடி மகளிரொடு,  | 
|
5  | 
காலன் என்னும் கண்ணிலி உய்ப்ப,  | 
மேலோர் உலகம் எய்தினன் எனாஅ,  | 
|
பொத்த அறையுள் போழ் வாய்க் கூகை,  | 
|
'சுட்டுக் குவி' எனச் செத்தோர்ப் பயிரும்  | 
|
கள்ளி அம் பறந்தலை ஒரு சிறை அல்கி,  | 
|
10  | 
ஒள் எரி நைப்ப உடம்பு மாய்ந்தது;  | 
புல்லென் கண்ணர் புரவலர்க் காணாது,  | 
|
கல்லென் சுற்றமொடு கையழிந்து, புலவர்  | 
|
வாடிய பசியராகி, பிறர்  | 
|
நாடு படு செலவினர் ஆயினர், இனியே.  | 
|
திணையும் துறையும் அவை.
  | |
ஆயைக் குட்டுவன் கீரனார் பாடியது.
  |