| முகப்பு | தொடக்கம் | 
ஆரம் தாழ்ந்த அணி கிளர்  | 
 59  | 
ஆரம் தாழ்ந்த அணி கிளர் மார்பின்,  | 
|
தாள் தோய் தடக் கை, தகை மாண் வழுதி!  | 
|
வல்லை மன்ற, நீ நயந்து அளித்தல்;  | 
|
தேற்றாய், பெரும! பொய்யே; என்றும்  | 
|
5  | 
காய் சினம் தவிராது கடல் ஊர்பு எழுதரும்  | 
ஞாயிறு அனையை, நின் பகைவர்க்கு;  | 
|
திங்கள் அனையை, எம்மனோர்க்கே.  | 
|
திணை அது; துறை பூவை நிலை.
  | |
பாண்டியன் சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறனை மதுரைக் கூல வாணிகன் சீத்தலைச் சாத்தனார் பாடியது.
  |