| முகப்பு | தொடக்கம் | 
ஆவும், ஆன் இயற் பார்ப்பன  | 
 9  | 
'ஆவும், ஆன் இயற் பார்ப்பன மாக்களும்,  | 
|
பெண்டிரும், பிணியுடையீரும், பேணித்  | 
|
தென் புல வாழ்நர்க்கு அருங் கடன் இறுக்கும்  | 
|
பொன் போல் புதல்வர்ப் பெறாஅதீரும்,  | 
|
5  | 
எம் அம்பு கடி விடுதும், நும் அரண் சேர்மின்' என,  | 
அறத்து ஆறு நுவலும் பூட்கை, மறத்தின்  | 
|
கொல் களிற்று மீமிசைக் கொடி விசும்பு நிழற்றும்  | 
|
எம் கோ, வாழிய, குடுமி தம் கோச்  | 
|
செந் நீர்ப் பசும் பொன் வயிரியர்க்கு ஈத்த,  | 
|
10  | 
முந்நீர் விழவின், நெடியோன்  | 
நல் நீர்ப் பஃறுளி மணலினும் பலவே!  | 
|
திணையும் துறையும் அவை.
  | |
பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியை நெட்டிமையார் பாடியது.
  |