| முகப்பு | தொடக்கம் | 
ஆன் முலை அறுத்த  | 
 34  | 
'ஆன் முலை அறுத்த அறனிலோர்க்கும்,  | 
|
மாண் இழை மகளிர் கருச் சிதைத்தோர்க்கும்,  | 
|
பார்ப்பார்த் தப்பிய கொடுமையோர்க்கும்,  | 
|
வழுவாய் மருங்கில் கழுவாயும் உள' என,  | 
|
5  | 
'நிலம் புடைபெயர்வது ஆயினும், ஒருவன்  | 
செய்தி கொன்றோர்க்கு உய்தி இல்' என,  | 
|
அறம் பாடின்றே ஆயிழை கணவ!  | 
|
'காலை அந்தியும், மாலை அந்தியும்,  | 
|
புறவுக் கரு அன்ன புன் புல வரகின்  | 
|
10  | 
பால் பெய் புன்கம் தேனொடு மயக்கி,  | 
குறு முயல் கொழுஞ் சூடு கிழித்த ஒக்கலொடு,  | 
|
இரத்தி நீடிய அகன் தலை மன்றத்து,  | 
|
கரப்பு இல் உள்ளமொடு வேண்டு மொழி பயிற்றி,  | 
|
அமலைக் கொழுஞ் சோறு ஆர்ந்த பாணர்க்கு  | 
|
15  | 
அகலாச் செல்வம் முழுவதும் செய்தோன்,  | 
எம் கோன், வளவன் வாழ்க!' என்று, நின்  | 
|
பீடு கெழு நோன் தாள் பாடேன் ஆயின்,  | 
|
படுபு அறியலனே, பல் கதிர்ச் செல்வன்;  | 
|
யானோ தஞ்சம்; பெரும! இவ் உலகத்து,  | 
|
20  | 
சான்றோர் செய்த நன்று உண்டாயின்,  | 
இமயத்து ஈண்டி, இன் குரல் பயிற்றி,  | 
|
கொண்டல் மா மழை பொழிந்த  | 
|
நுண் பல் துளியினும் வாழிய, பலவே!  | 
|
திணை பாடாண் திணை; துறை இயன்மொழி.
  | |
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை ஆலத்தூர் கிழார் பாடியது.
  |