| முகப்பு | தொடக்கம் | 
ஆனா ஈகை அடு போர்  | 
 42  | 
ஆனா ஈகை, அடு போர், அண்ணல்! நின்  | 
|
யானையும் மலையின் தோன்றும்; பெரும! நின்  | 
|
தானையும் கடல் என முழங்கும்; கூர் நுனை  | 
|
வேலும் மின்னின் விளங்கும்; உலகத்து  | 
|
5  | 
அரைசு தலை பனிக்கும் ஆற்றலைஆதலின்,  | 
புரை தீர்ந்தன்று; அது புதுவதோ அன்றே;  | 
|
தண் புனல் பூசல் அல்லது, நொந்து,  | 
|
'களைக, வாழி, வளவ!' என்று, நின்  | 
|
முனைதரு பூசல் கனவினும் அறியாது,  | 
|
10  | 
புலி புறங்காக்கும் குருளை போல,  | 
மெலிவு இல் செங்கோல் நீ புறங்காப்ப,  | 
|
பெரு விறல் யாணர்த்து ஆகி, அரிநர்  | 
|
கீழ் மடைக் கொண்ட வாளையும், உழவர்  | 
|
படை மிளிர்ந்திட்ட யாமையும், அறைநர்  | 
|
15  | 
கரும்பில் கொண்ட தேனும், பெருந் துறை  | 
நீர் தரு மகளிர் குற்ற குவளையும்,  | 
|
வன் புலக் கேளிர்க்கு வரு விருந்து அயரும்  | 
|
மென் புல வைப்பின் நல் நாட்டுப் பொருந!  | 
|
மலையின் இழிந்து, மாக் கடல் நோக்கி,  | 
|
20  | 
நில வரை இழிதரும் பல் யாறு போல,  | 
புலவர் எல்லாம் நின் நோக்கினரே;  | 
|
நீயே, மருந்து இல் கணிச்சி வருந்த வட்டித்துக்  | 
|
கூற்று வெகுண்டன்ன முன்பொடு,  | 
|
மாற்று இரு வேந்தர் மண் நோக்கினையே.  | 
|
திணை வாகை; துறை அரசவாகை.
  | |
அவனை இடைக்காடனார் பாடியது.
  |