| முகப்பு | தொடக்கம் | 
இமிழ் கடல் வளைஇய  | 
 19  | 
இமிழ் கடல் வளைஇய ஈண்டு அகன் கிடக்கை,  | 
|
தமிழ் தலைமயங்கிய தலையாலங்கானத்து,  | 
|
மன் உயிர்ப் பன்மையும், கூற்றத்து ஒருமையும்,  | 
|
நின்னொடு தூக்கிய வென் வேல் செழிய!  | 
|
5  | 
'இரும் புலி வேட்டுவன் பொறி அறிந்து மாட்டிய  | 
பெருங் கல் அடாரும் போன்ம்' என விரும்பி,  | 
|
முயங்கினேன் அல்லனோ, யானே மயங்கிக்  | 
|
குன்றத்து இறுத்த குரீஇ இனம் போல,  | 
|
அம்பு சென்று இறுத்த அரும் புண் யானைத்  | 
|
10  | 
தூம்புடைத் தடக் கை வாயொடு துமிந்து,  | 
நாஞ்சில் ஒப்ப, நிலம் மிசைப் புரள,  | 
|
எறிந்து களம் படுத்த ஏந்து வாள் வலத்தர்  | 
|
எந்தையொடு கிடந்தோர், எம் புன் தலைப் புதல்வர்;  | 
|
'இன்ன விறலும் உளகொல், நமக்கு?' என,  | 
|
15  | 
மூதில் பெண்டிர் கசிந்து அழ, நாணி,  | 
கூற்றுக் கண்ணோடிய வெருவரு பறந்தலை,  | 
|
எழுவர் நல் வலம் கடந்தோய்! நின்  | 
|
கழூஉ விளங்கு ஆரம் கவைஇய மார்பே?  | 
|
திணை வாகை; துறை அரச வாகை.
  | |
அவனை அவர் பாடியது.
  |