| முகப்பு | தொடக்கம் | 
இரும் பனை வெண் தோடு  | 
 45  | 
இரும் பனை வெண் தோடு மலைந்தோன்அல்லன்;  | 
|
கருஞ் சினை வேம்பின் தெரியலோன்அல்லன்;  | 
|
நின்ன கண்ணியும் ஆர் மிடைந்தன்றே; நின்னொடு  | 
|
பொருவோன் கண்ணியும் ஆர் மிடைந்தன்றே;  | 
|
5  | 
ஒருவீர் தோற்பினும், தோற்ப நும் குடியே;  | 
இருவீர் வேறல் இயற்கையும் அன்றே; அதனால்,  | 
|
குடிப்பொருள் அன்று, நும் செய்தி; கொடித் தேர்  | 
|
நும் ஓர்அன்ன வேந்தர்க்கு  | 
|
மெய்ம் மலி உவகை செய்யும்; இவ் இகலே.  | 
|
திணை வஞ்சி; துறை துணைவஞ்சி.
  | |
சோழன் நலங்கிள்ளி உறையூர் முற்றி இருந்தானையும், அடைத்திருந்த நெடுங் கிள்ளியையும், கோவூர் கிழார் பாடியது.
  |