| முகப்பு | தொடக்கம் | 
இல்லாகியரோ, காலை மாலை!  | 
 232  | 
இல்லாகியரோ, காலை மாலை!  | 
|
அல்லாகியர், யான் வாழும் நாளே!  | 
|
நடுகல் பீலி சூட்டி, நார் அரி  | 
|
சிறு கலத்து உகுப்பவும் கொள்வன்கொல்லோ  | 
|
5  | 
கோடு உயர் பிறங்கு மலை கெழீஇய  | 
நாடு உடன் கொடுப்பவும் கொள்ளாதோனே?  | 
|
திணையும் துறையும் அவை.
  | |
அவனை அவர் பாடியது.
  |