| முகப்பு | தொடக்கம் | 
ஈன்று புறந்தருதல் என் தலைக் கடனே  | 
 312  | 
ஈன்று புறந்தருதல் என் தலைக் கடனே;  | 
|
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே;  | 
|
வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே;  | 
|
நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே,  | 
|
5  | 
ஒளிறு வாள் அருஞ் சமம் முருக்கி,  | 
களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே.  | 
|
திணை வாகை; துறை மூதில்முல்லை.
  | |
பொன்முடியார் பாடியது.
  |