| முகப்பு | தொடக்கம் | 
உருமிசை முழக்கு என  | 
 373  | 
உருமிசை முழக்கு என முரசம் இசைப்ப,  | 
|
செரு நவில் வேழம் கொண்மூ ஆக,  | 
|
தேர் மா அழி துளி தலைஇ, நாம் உறக்  | 
|
கணைக் காற்று எடுத்த கண் அகன் பாசறை,  | 
|
5  | 
இழிதரு குருதியொடு ஏந்திய ஒள் வாள்  | 
பிழிவது போலப் பிட்டை ஊறு உவப்ப,  | 
|
மைந்தர் ஆடிய மயங்கு பெருந் தானை,  | 
|
கொங்கு புறம்பெற்ற கொற்ற வேந்தே!  | 
|
................................................தண்ட மாப் பொறி.  | 
|
10  | 
மடக் கண் மயில் இயல் மறலியாங்கு,  | 
நெடுஞ் சுவர் நல் இல் புலம்ப, கடை கழிந்து,  | 
|
மென் தோள் மகளிர் மன்றம் பேணார்,  | 
|
புண்ணுவ  | 
|
..........................அணியப் புரவி வாழ்க என,  | 
|
15  | 
சொல் நிழல் இன்மையின் நல் நிழல் சேர,  | 
நுண் பூண் மார்பின் புன் தலைச் சிறாஅர்  | 
|
அம்பு அழி பொழுதில் தமர் முகம் காணா,  | 
|
........................................................ற் றொக்கான  | 
|
வேந்து புறங்கொடுத்த வீய்ந்து உகு பறந்தலை,  | 
|
20  | 
மாடம் மயங்கு எரி மண்டி, கோடு இறுபு,  | 
உரும் எறி மலையின், இரு நிலம் சேர,  | 
|
சென்றோன் மன்ற, சொª  | 
|
........................ ண்ணறிநர் கண்டு கண் அலைப்ப,  | 
|
வஞ்சி முற்றம் வயக் களன் ஆக,  | 
|
25  | 
அஞ்சா மறவர் ஆட் போர்பு அழித்துக்  | 
கொண்டனை, பெரும! குட புலத்து அதரி;  | 
|
பொலிக அத்தை, நின் பணைதனற............ளம்!  | 
|
விளங்கு திணை வேந்தர் களம்தொறும் சென்று,  | 
|
''புகர்முக முகவை பொலிக!'' என்று ஏத்தி,  | 
|
30  | 
கொண்டனர்' என்ப, பெரியோர்; யானும்  | 
அம் கண் மாக் கிணை அதிர ஒற்ற,  | 
|
............... லென்ஆயினும், காதலின் ஏத்தி,  | 
|
நின்னோர் அன்னோர் பிறர் இவண் இன்மையின்,  | 
|
மன் எயில் முகவைக்கு வந்திசின், பெரும!  | 
|
35  | 
பகைவர் புகழ்ந்த ஆண்மை, நகைவர்க்குத்  | 
தா இன்று உதவும் பண்பின், பேயொடு  | 
|
கண நரி திரிதரூஉம் ஆங்கண், நிணன் அருந்து  | 
|
செஞ் செவி எருவை குழீஇ,  | 
|
அஞ்சுவரு கிடக்கைய களம் கிழவோயே!  | 
|
40  | 
திணை அது; துறை மறக்களவழி; ஏர்க்கள உருவகமும் ஆம்.  | 
சோழன் குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளிவளவன் கருவூர் எறிந்தானைக் கோவூர்
  | |
கிழார் பாடியது.
  |