| முகப்பு | தொடக்கம் | 
எருதே இளைய  | 
 102  | 
'எருதே இளைய; நுகம் உணராவே;  | 
|
சகடம் பண்டம் பெரிது பெய்தன்றே;  | 
|
அவல் இழியினும், மிசை ஏறினும்,  | 
|
அவணது அறியுநர் யார்?' என, உமணர்  | 
|
5  | 
கீழ் மரத்து யாத்த சேம அச்சு அன்ன,  | 
இசை விளங்கு கவி கை நெடியோய்! திங்கள்  | 
|
நாள் நிறை மதியத்து அனையை; இருள்  | 
|
யாவணதோ, நின் நிழல் வாழ்வோர்க்கே?  | 
|
திணை அது; துறை இயன்மொழி.
  | |
அவன் மகன் பொகுட்டெழினியை அவர் பாடியது.
  |