| முகப்பு | தொடக்கம் | 
ஏற்றுக உலையே  | 
 172  | 
ஏற்றுக உலையே; ஆக்குக சோறே;  | 
|
கள்ளும் குறைபடல் ஓம்புக; ஒள் இழைப்  | 
|
பாடு வல் விறலியர் கோதையும் புனைக;  | 
|
அன்னவை பிறவும் செய்க; என்னதூஉம்  | 
|
5  | 
பரியல் வேண்டா; வரு பதம் நாடி,  | 
ஐவனம் காவலர் பெய் தீ நந்தின்,  | 
|
ஒளி திகழ் திருந்து மணி நளிஇருள் அகற்றும்  | 
|
வன் புல நாடன், வய மான் பிட்டன்:  | 
|
ஆர் அமர் கடக்கும் வேலும், அவன் இறை  | 
|
10  | 
மா வள் ஈகைக் கோதையும்,  | 
மாறுகொள் மன்னரும், வாழியர் நெடிதே!  | 
|
திணையும் துறையும் அவை.
  | |
அவனை வடம வண்ணக்கன் தாமோதரனார் பாடியது.
  |