| முகப்பு | தொடக்கம் | 
ஏறுடைப் பெரு நிரை  | 
 259  | 
ஏறுடைப் பெரு நிரை பெயர்தர, பெயராது,  | 
|
இலை புதை பெருங் காட்டுத் தலை கரந்து இருந்த  | 
|
வல் வில் மறவர் ஒடுக்கம் காணாய்;  | 
|
செல்லல், செல்லல்; சிறக்க, நின் உள்ளம்,  | 
|
5  | 
முருகு மெய்ப் பட்ட புலைத்தி போலத்  | 
தாவுபு தெறிக்கும் ஆன்மேல்  | 
|
புடை இலங்கு ஒள் வாள் புனை கழலோயே!  | 
|
திணை கரந்தை; துறை செரு மலைதல்; பிள்ளைப் பெயர்ச்சியும் ஆம்.
  | |
.......................கோடை பாடிய பெரும்பூதனார் பாடியது.
  |