| முகப்பு | தொடக்கம் | 
வாடா மாலை  | 
 364  | 
வாடா மாலை பாடினி அணிய,  | 
|
பாணன் சென்னிக் கேணி பூவா  | 
|
எரி மருள் தாமரைப் பெரு மலர் தயங்க,  | 
|
மை விடை இரும் போத்துச் செந் தீச் சேர்த்தி,  | 
|
5  | 
காயம் கனிந்த கண் அகன் கொழுங் குறை  | 
நறவு உண் செவ் வாய் நாத் திறம் பெயர்ப்ப,  | 
|
உண்டும், தின்றும், இரப்போர்க்கு ஈய்ந்தும்,  | 
|
மகிழ்கம் வம்மோ, மறப் போரோயே!  | 
|
அரியஆகலும் உரிய, பெரும!  | 
|
10  | 
நிலம் பக வீழ்ந்த அலங்கல் பல் வேர்  | 
முது மரப் பொத்தின் கதுமென இயம்பும்  | 
|
கூகைக் கோழி ஆனாத்  | 
|
தாழிய பெருங் காடு எய்திய ஞான்றே.  | 
|
திணையும் துறையும் அவை.
  | |
அவனைக் கூகைக் கோழியார் பாடியது.
  |