| முகப்பு | தொடக்கம் | 
விசி பிணித் தடாரி  | 
 372  | 
விசி பிணித் தடாரி விம்மென ஒற்றி,  | 
|
ஏத்தி வந்தது எல்லாம் முழுத்த  | 
|
இலங்கு வாள் அவிர் ஒளி வலம் பட மின்னி,  | 
|
கணைத் துளி பொழிந்த கண்கூடு பாசறை,  | 
|
5  | 
பொருந்தாத் தெவ்வர் அரிந்த தலை அடுப்பின்,  | 
கூவிள விறகின் ஆக்கு வரி நுடங்கல்,  | 
|
ஆனா மண்டை வன்னிஅம் துடுப்பின்,  | 
|
ஈனா வேண்மாள் இடம் துழந்து அட்ட  | 
|
மா மறி பிண்டம் வாலுவன் ஏந்த,  | 
|
10  | 
'வதுவை விழவின் புதுவோர்க்கு எல்லாம்  | 
வெவ் வாய்ப் பெய்த பூத நீர் சால்க' எனப்  | 
|
புலவுக் களம் பொலிய வேட்டோய்! நின்  | 
|
நிலவுத் திகழ் ஆரம் முகக்குவம் எனவே.  | 
|
திணை வாகை; துறை மறக்கள வேள்வி.
  | |
அவனை மாங்குடி கிழார் பாடியது.
  |