| முகப்பு | தொடக்கம் | 
வெண்குடை மதியம் மேல்  | 
 294  | 
'வெண்குடை மதியம் மேல் நிலாத் திகழ்தர,  | 
|
கண்கூடு இறுத்த கடல் மருள் பாசறை,  | 
|
குமரிப் படை தழீஇய கூற்று வினை ஆடவர்  | 
|
தமர் பிறர் அறியா அமர் மயங்கு அழுவத்து,  | 
|
5  | 
இறையும் பெயரும் தோற்றி, நுமருள்  | 
நாள் முறை தபுத்தீர் வம்மின், ஈங்கு' என,  | 
|
போர் மலைந்து ஒரு சிறை நிற்ப, யாவரும்  | 
|
அரவு உமிழ் மணியின் குறுகார்  | 
|
நிரை தார் மார்பின் நின் கேள்வனை, பிறரே.  | 
|
திணை தும்பை; துறை தானைமறம்.
  | |
பெருந்தலைச் சாத்தனார் பாடியது.
  |