| முகப்பு | தொடக்கம் | 
வெள்ளி தென் புலத்து உறைய  | 
 388  | 
வெள்ளி தென் புலத்து உறைய, விளை வயல்,  | 
|
பள்ளம், வாடிய பயன் இல் காலை,  | 
|
இரும் பறைக் கிணைமகன் சென்றவன், பெரும் பெயர்  | 
|
................................................................................பொருந்தி,  | 
|
5  | 
தன் நிலை அறியுநனாக, அந் நிலை,  | 
இடுக்கண் இரியல் போக, உடைய  | 
|
கொடுத்தோன் எந்தை, கொடை மேந் தோன்றல்,  | 
|
.......................................................................னாமருப்பாக,  | 
|
வெல்லும் வாய்மொழிப் புல்லுடை வி  | 
|
10  | 
பெயர்க்கும் பண்ணற் கேட்டிரோ, மககிரென,  | 
வினைப் பகடு ஏற்ற மேழி கிணைத் தொடா,  | 
|
நாள்தொறும் பாடேன்ஆயின், ஆனா  | 
|
மணி கிளர் முன்றில் தென்னவன் மருகன்,  | 
|
பிணி முரசு இரங்கும் பீடு கெழு தானை  | 
|
15  | 
அண்ணல் யானை வழுதி,  | 
கண்மாறிலியர் என் பெருங் கிளைப் புரவே!  | 
|
திணை அது; துறை இயன்மொழி.
  | |
சிறுகுடி கிழான் பண்ணனை மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார் பாடியது.
  |