| முகப்பு | தொடக்கம் | 
ஒன்னார் யானை ஓடைப்  | 
 126  | 
ஒன்னார் யானை ஓடைப் பொன் கொண்டு,  | 
|
பாணர் சென்னி பொலியத் தைஇ,  | 
|
வாடாத் தாமரை சூட்டிய விழுச் சீர்  | 
|
ஓடாப் பூட்கை உரவோன் மருக!  | 
|
5  | 
வல்லேம் அல்லேம் ஆயினும், வல்லே  | 
நின்வயின் கிளக்குவமாயின், கங்குல்  | 
|
துயில் மடிந்தன்ன தூங்கு இருள் இறும்பின்,  | 
|
பறை இசை அருவி, முள்ளூர்ப் பொருந!  | 
|
தெறல் அரு மரபின் நின் கிளையொடும் பொலிய,  | 
|
10  | 
நிலமிசைப் பரந்த மக்கட்கு எல்லாம்  | 
புலன் அழுக்கு அற்ற அந்தணாளன்,  | 
|
இரந்து செல் மாக்கட்கு இனி இடன் இன்றி,  | 
|
பரந்து இசை நிற்கப் பாடினன்; அதற்கொண்டு  | 
|
சினம் மிகு தானை வானவன் குட கடல்,  | 
|
15  | 
பொலம் தரு நாவாய் ஓட்டிய அவ் வழி,  | 
பிற கலம் செல்கலாது அனையேம் அத்தை,  | 
|
இன்மை துரப்ப, இசை தர வந்து, நின்  | 
|
வண்மையின் தொடுத்தனம், யாமே முள் எயிற்று  | 
|
அரவு எறி உருமின் முரசு எழுந்து இயம்ப,  | 
|
20  | 
அண்ணல் யானையொடு வேந்து களத்து ஒழிய,  | 
அருஞ் சமம் ததையத் தாக்கி, நன்றும்  | 
|
நண்ணாத் தெவ்வர்த் தாங்கும்  | 
|
பெண்ணை அம் படப்பை நாடு கிழவோயே!  | 
|
திணை பாடாண் திணை; துறை பரிசில் துறை.
  | |
மலையமான் திருமுடிக் காரியை மாறோக்கத்து நப்பசலையார் பாடியது.
  |