| முகப்பு | தொடக்கம் | 
வேழம் வீழ்த்த விழுத் தொடைப்  | 
 152  | 
'வேழம் வீழ்த்த விழுத் தொடைப் பகழி  | 
|
பேழ் வாய் உழுவையைப் பெரும்பிறிது உறீஇ,  | 
|
புழல் தலைப் புகர்க் கலை உருட்டி, உரல் தலைக்  | 
|
கேழற் பன்றி வீழ, அயலது  | 
|
5  | 
ஆழல் புற்றத்து உடும்பில் செற்றும்,  | 
வல் வில் வேட்டம் வலம் படுத்து இருந்தோன்,  | 
|
புகழ்சால் சிறப்பின் அம்பு மிகத் திளைக்கும்  | 
|
கொலைவன் யார்கொலோ? கொலைவன் மற்று இவன்  | 
|
விலைவன் போலான்; வெறுக்கை நன்கு உடையன்;  | 
|
10  | 
ஆரம் தாழ்ந்த அம் பகட்டு மார்பின்,  | 
சாரல் அருவிப் பய மலைக் கிழவன்,  | 
|
ஓரி கொலோ? அல்லன்கொல்லோ?  | 
|
பாடுவல், விறலி! ஓர் வண்ணம்; நீரும்  | 
|
மண் முழா அமைமின்; பண் யாழ் நிறுமின்;  | 
|
15  | 
கண் விடு தூம்பின் களிற்று உயிர் தொடுமின்;  | 
எல்லரி தொடுமின்; ஆகுளி தொடுமின்;  | 
|
பதலை ஒரு கண் பையென இயக்குமின்;  | 
|
மதலை மாக் கோல் கைவலம் தமின்' என்று,  | 
|
இறைவன் ஆகலின், சொல்லுபு குறுகி,  | 
|
20  | 
மூ ஏழ் துறையும் முறையுளிக் கழிப்பி,  | 
'கோ' எனப் பெயரிய காலை, ஆங்கு அது  | 
|
தன் பெயர் ஆகலின் நாணி, மற்று, 'யாம்  | 
|
நாட்டிடன் நாட்டிடன் வருதும்; ஈங்கு ஓர்  | 
|
வேட்டுவர் இல்லை, நின் ஒப்போர்' என,  | 
|
25  | 
வேட்டது மொழியவும் விடாஅன், வேட்டத்தில்  | 
தான் உயிர் செகுத்த மான் நிணப் புழுக்கோடு,  | 
|
ஆன் உருக்கு அன்ன வேரியை நல்கி,  | 
|
தன் மலைப் பிறந்த தா இல் நன் பொன்,  | 
|
பல் மணிக் குவையொடும் விரைஇ, 'கொண்ம்' என,  | 
|
30  | 
சுரத்திடை நல்கியோனே விடர்ச் சிமை  | 
ஓங்கு இருங் கொல்லிப் பொருநன்,  | 
|
ஓம்பா ஈகை விறல் வெய்யோனே!  | 
|
திணை அது; துறை பரிசில் விடை.
  | |
வல் வில் ஓரியை வன்பரணர் பாடியது.
  |