| முகப்பு | தொடக்கம் | 
.............................ளி, நாரும் போழும் செய்து  | 
 370  | 
...............................................................................................................ளி,  | 
|
நாரும் போழும் செய்து உண்டு, ஒராங்குப்  | 
|
பசி தினத் திரங்கிய இரு பேர் ஒக்கற்கு  | 
|
ஆர் பதம் கண்ணென மாதிரம் துழைஇ,  | 
|
5  | 
வேர் உழந்து உலறி, மருங்கு செத்து ஒழிய வந்து,  | 
அத்தக் குடிஞைத் துடி மருள் தீம் குரல்,  | 
|
உழுஞ்சில் அம் கவட்டிடை இருந்த பருந்தின்  | 
|
பெடை பயிர் குரலோடு, இசைக்கும் ஆங்கண்,  | 
|
கழை காய்ந்து உலறிய வறம் கூர் நீள் இடை,  | 
|
10  | 
வரி மரல் திரங்கிய கானம் பிற்பட,  | 
பழுமரம் உள்ளிய பறவை போல,  | 
|
ஒண் படை மாரி வீழ் கனி பெய்தென,  | 
|
துவைத்து எழு குருதி நிலமிசைப் பரப்ப,  | 
|
விளைந்த செழுங் குரல் அரிந்து, கால் குவித்து,  | 
|
15  | 
படு பிணப் பல் போர்பு அழிய வாங்கி,  | 
எருது களிறு ஆக, வாள் மடல் ஓச்சி,  | 
|
அதரி திரித்த ஆள் உகு கடாவின்,  | 
|
அகன் கண் தடாரி தெளிர்ப்ப ஒற்றி,  | 
|
'வெந் திறல் வியன் களம் பொலிக!' என்று ஏத்தி,  | 
|
20  | 
இருப்பு முகம் செறித்த ஏந்து மருப்பின்  | 
வரை மருள் முகவைக்கு வந்தனென்; பெரும!  | 
|
வடி நவில் எஃகம் பாய்ந்தென, கிடந்த  | 
|
தொடியுடைத் தடக் கை ஓச்சி, வெருவார்  | 
|
இனத் தடி விராய வரிக் குடர் அடைச்சி,  | 
|
25  | 
அழு குரல் பேய்மகள் அயர, கழுகொடு  | 
செஞ் செவி எருவை திரிதரும்,  | 
|
அஞ்சுவரு கிடக்கைய களம் கிழவோயே!  | 
|
திணையும் துறையும் அவை.
  | |
சோழன் செருப்பாழி எறிந்த இளந்சேட்சென்னியை ஊன்பொதி பசுங்குடையார் பாடியது.
  |