| முகப்பு | தொடக்கம் | 
கன்று அமர் ஆயம்  | 
 230  | 
கன்று அமர் ஆயம் கானத்து அல்கவும்,  | 
|
வெங் கால் வம்பலர் வேண்டு புலத்து உறையவும்,  | 
|
களம் மலி குப்பை காப்பு இல வைகவும்,  | 
|
விலங்கு பகை கடிந்த கலங்காச் செங்கோல்,  | 
|
5  | 
வையகம் புகழ்ந்த வயங்கு வினை ஒள் வாள்,  | 
பொய்யா எழினி பொருது களம் சேர  | 
|
ஈன்றோள் நீத்த குழவி போல,  | 
|
தன் அமர் சுற்றம் தலைத்தலை இனைய,  | 
|
கடும் பசி கலக்கிய இடும்பை கூர் நெஞ்சமொடு  | 
|
10  | 
நோய் உழந்து வைகிய உலகினும், மிக நனி  | 
நீ இழந்தனையே, அறன் இல் கூற்றம்!  | 
|
வாழ்தலின் வரூஉம் வயல் வளன் அறியான்,  | 
|
வீழ் குடி உழவன் வித்து உண்டாஅங்கு  | 
|
ஒருவன் ஆர் உயிர் உண்ணாய் ஆயின்,  | 
|
15  | 
நேரார் பல் உயிர் பருகி,  | 
ஆர்குவை மன்னோ, அவன் அமர் அடு களத்தே.  | 
|
திணை அது; துறை கையறு நிலை.
  | |
அதியமான் தகடூர் பொருது வீழ்ந்த எழினியை அரிசில் கிழார் பாடியது.
  |